Tuesday 27 February 2018

ஆன்மீகத் தகவல்கள் - குருவருள் சூர்யா TELEGRAM GROUP டெலிகிராம் க்ரூப்

குருமார்களின் அருளாலும்,இறை அருளாலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தத்துவம்,இந்து சமயம், இஸ்லாமிய சமயம்,கிறிஸ்தவ சமயம், இந்திய,சீன,திபெத்திய புத்த சமயம்,மேற்கத்திய சமயங்கள்,மந்திரஜபம்,
உபாசனை,பஞ்சபட்சி,பல சமய சித்தர்கள் ஞானிகளின் மறைஞானம்,
ஆன்மீக,யோக,ஞான ரகசியங்கள் மற்றும் பயிற்சி முறைகளில் படிப்பும், அறிவும், அனுபவமும்,கொண்ட நான்  என்னுடைய க்ரூப்பில் கீழ்க்கண்ட விஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன்.


பல்வேறு தேவைகள் நிறைவேறுவதற்கும்,பிரச்சனைகள் தீர்வதற்குமான மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள்,பல சமயங்களைச் சார்ந்த மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள்,இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழிபாட்டு ரகசியங்கள்,உபாசனை ரகசியங்கள்,யோகம்,ஞானம்,சித்தர்கள்,யோகிகள்,
மந்திர ஜபம்,பக்தியோகம்,கர்மயோகம்,ராஜயோகம்,ஞானயோகம்,ஆன்மீக உயர்வுக்கான பயிற்சிகள் பற்றிய பல தகவல்கள் மற்றும் அணைத்து விதமான ஆன்மீக கேள்விகளுக்கான விடைகளையும்,வாழ்க்கை பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் க்ரூப்பில் பகிர்ந்து வருகிறேன்.


இனி வரும் நாட்களில் குழுவின் பதிவுகள் இன்னும் பல விதமான பயன் தரக்கூடியதாகவும்,சுவாரஸ்யமானதாகவும் வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆன்மீகம்,இறைவழிபாடு,தியானம்,தத்துவம்,மந்திர ஜபம்,மனவியல், யோகம்,பல மதங்களில் பின்பற்றப்படும் ஆன்மீகப் பயிற்சிகள்,புத்தக அறிமுகம்,யோகப் பயிற்சி முறைகள்,இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீக ரகசியங்கள்,வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் வழிமுறைகள் ,நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் புரிந்து கொள்ளுதல், பாரம்பரியக் கலைகள்,பாரம்பரிய வாழ்க்கைமுறை  போன்ற பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


ஏற்கனவே கூறியிருந்தாலும்,மீண்டும் நினைவு படுத்துகிறேன்.


--------------------------
நான் பல்வேறு  பணிகளுக்கு இடையில் குழுவில் பயனுள்ள விஷயங்களை பகிர்ந்தும்,கேள்விகளுக்கு விடையளித்தும் வருகிறேன்.

குழுவில் பலர் கேள்வி கேட்டு விட்டு உடனே பதில் அளிக்கும் படி  கேட்கின்றனர்.நான் ஓய்வாக இருக்கும் பொழுதும்,கேள்வியின் தன்மையைப் பொறுத்தும்,விரிவாக அல்லது சுருக்கமாகப் பதில் அளிப்பேன்.எனவே கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம்.ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கப்படும்.எனவே,உடனே பதில் தராவிட்டால் பொறுமை காக்கவும்.

பல கேள்விகளுக்கு எழுத்தில் பதில் அளிக்க அதிக நேரம் டைப் செய்ய வேண்டி இருப்பதால்,சில நேரங்களில் ஆடியோ பதிவாக பதில் அளிக்கிறேன்.எனவே,ஆடியோக்களை முழுமையாகக் கேட்கவும்.

------------------------------------
குழுவில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயர் சேர்க்க வேண்டும் என்று அனுப்பும் பொழுது அவர்களின் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு அனுப்பவும்.

ஆண்களுக்கு தனி க்ரூப் பெண்களுக்கு தனி க்ரூப் வைத்திருப்பதால் நபரின் பெயருடன்,ஊர் பெயரும், ஆண் அல்லது பெண் என்ற விபரமும் குறிப்பிட்டு அனுப்பவும்.


குழுவில் சேர விரும்புபவர்கள் 9788493072 என்ற என்னுடைய மொபைல் எண்ணிற்கு உங்கள் பெயர்,ஊர் குறிப்பிட்டு அனுப்பினால் லிங்க் அனுப்புகிறேன்,க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளலாம்.


----------------------------------

குழுவில் இணைய விரும்புபவர்கள்  உங்கள் மொபைலில் telegram  இன்ஸ்டால் செயாவும்.அல்லது கீழ்கண்ட லிங்கை செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.அதன் பின்,உங்கள் டெலெக்ராமில் இருந்து 9788493072 என்ற  எண்ணிற்கு உங்கள் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு மெசேஜ் செய்யவும்.மெசேஜ் கிடைத்ததும் நான் அனுப்பும் லிங்கை க்ளிக் செய்து குழுவில் இணைந்து  பதிவுகளைப் பெற்றுப் பயன்பெறலாம்.


https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=en

டெலிக்ராம் சிறப்புகள்:-

whatsapp போலவே தான் டெலிகிராம்  என்றாலும் ,GROUP மற்றும் CHAT ல் வரும் பகிர்வுகள்,பதிவுகள்,ஆடியோ,வீடியோ,படங்கள் எதுவும் மொபைல் ஸ்டோரேஜில் சேமிக்கப்படாது.எனவே,நமக்கு மொபைல் ஹேங்ஆகாது மெமரி அதிகம் மிச்சம் ஆகும்.



நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072
WHATSAPP : 9788493072
TELEGRAM: 9788493072

Thursday 15 February 2018

வெற்றியை தரும் வாராஹி வழிபாடு - புத்தக அறிமுகம்





இப்புத்தகம் வராஹி மாலை,ஆதி வாராஹி ஸ்தோத்ரம்,ஸ்ரீ வாராஹி கவசம்,  வாராஹி அனுக்ரஹாஷ்டகம், வாராஹி நிக்ரஹாஷ்டகம்,ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பதிகம்,வாராஹி அஷ்டோத்ர நாமாவளி,வாராஹி சஹஸ்ரநாமாவளி,வராஹி ஆவரண பூஜாவிதி,வாராஹி ஜெபவிதானம்,
வாராஹியின் அங்க உபாங்க,பிராத்யங்க தேவதைகளின் ஜெபவிதானம் போன்ற விரிவான  தகவல்களுடன் பெரிய எழுத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுஉள்ளது .


தேவையானவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாங்கிப் படித்துப் பயன்பெறவும்.

கிரி டிரேடிங் ஏஜென்சி,மயிலாப்பூர்,சென்னை .
தொலைபேசி எண் : 044-24642530




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

குழந்தைகள் நன்றாகப் படிக்க மந்திரங்கள்,பரிகாரங்கள்,யோகப் பயிற்சிகள்

குழந்தைகள் நன்றாகப் படிக்க மந்திரங்கள்,பரிகாரங்கள்,யோகப் பயிற்சி
முறைகளை வாட்ஸ்அப் குழுவிலும் என் வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தேன்.

அவை அனைத்தின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.ஒவ்வொன்றாக கிளிக் செய்து படித்து உங்களுக்கு எது தேவை அல்லது எதைச் செய்ய முடியுமோ செய்து பலன் பெறுங்கள்.































வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Friday 9 February 2018

தங்க ஆபரணங்களின் அற்புத சக்தியும்,பயன்படுத்தும் முறைகளும்


1.தங்கம் நவக்கிரஹங்களில்  பூரண சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவானின் அம்சம்.வளமும் நலமும் தருவது.


2.சஹஸ்ரார சக்கரத்தை இயக்குகிறது மேலும் தீய சக்திகளை விலக்கும்.


3.மோதிரவிரலில் தங்க மோதிரம் அணிவதால் தடைகள் விலகுவதோடு
தெய்வீகச் சிந்தனை பெருகும்.


4.தங்க மோதிரத்தைப் பெண்கள் இடது கை மோதிர விரலிலும்,ஆண்கள்
வலது கை மோதிர விரலிலும் அணிய வேண்டும்.இது அதிர்ஷ்டம் தருவதோடு குழந்தை பாக்கியமும் தரும்.


5.தங்கம் உடலில் உள்ள வெப்பத்தையும்,விஷத் தன்மையையும் நீக்கக்
கூடியது.


6.காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் தொடர்ந்து அவதிப்படுபவர்கள் தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்பு குறையும்.


7.பெயர் புகழ் அந்தஸ்து விஷயங்களில் பிரச்சனை இருந்தால் தங்க மோதிரத்தை நடு விரலில் அணிந்து கொள்ளப் பாதிப்புகள் சரியாகும்.


8. நினைவாற்றல் குறைவு மற்றும் மன உளைச்சல் உள்ளவர்கள் தங்க மோதிரத்தை ஆட்காட்டி விரலில் அணிந்து கொள்ளவும்.


9.தம்பத்திகளுக்குள் அந்நியோன்யம் உண்டாக கழுத்தில் தங்க நெக்லஸ் அணியவும்.


10.முற்றிய வயிற்றுநோய்கள் அல்லது பெரிய அளவில் உடற் பருமன் உள்ளவர்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது மிக குறைந்த அளவில் மட்டும் அணிய நல்லது.


11.சனிக்கிரகத்தின் அம்சமான தொழில்களான எண்ணெய்,நிலக்கரி,கரி,
இரும்பு மற்றும் பழைய பொருள் விற்பனை தொடர்பான தொழில் செய்பவர்கள் தங்கம் அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.


12.கர்ப்பிணிகளும்,வயதானவர்களும் குறைவான அளவில் தங்க நகைகள் அணிவது உடலுக்கு நலம் தரும்.


13.தங்கத்தைக் கனவில் காண்பது பணம் தொடர்பான பிரச்சனைகளைச்  சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.


பழமையான தங்க நாணயங்களை கனவில் காண்பது வேலை அல்லது தொழிலில் பிரச்சனைகளைச்  சந்திக்க நேரிடுவதைக் குறிக்கும்.


14.தங்கம் மகாலட்சுமி மற்றும் குரு பகவானின் அம்சமாகக் கருதப்படுவதால் தங்கத்தை இடுப்பிற்குக் கீழ் அணிவது துரதிர்ஷ்டத்தை  உண்டாக்கும்.


15.குழந்தைகள் தங்கத்தைச் சிகப்புக் கயிற்றோடு கோர்த்து அணிவது நல்லது.


16.தங்கம் அணிந்து கொண்டு மது அருந்துவதும் ,அசைவம் சாப்பிடுவதும் குடும்ப வாழ்வில் நிம்மதியின்மையை ஏற்படுத்தும்.


17.தங்க ஆபரணங்களை சிகப்புப் பட்டு அல்லது காட்டன் துணியில்      முடிந்து லாக்கரில் வைக்கவும்.கிழக்கு அல்லது தென் மேற்கில் வைக்கவும்.


18.மேஷம் ,கடகம்,சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர்கள் தங்கம் அணிவது உயர்வும்,அதிர்ஷ்டமும் தரும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072