Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள். Show all posts
Showing posts with label ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள். Show all posts

Monday, 5 January 2015

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 2

                                                  ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ  



ஸ்ரீ ஷீரடி சாய்பாபா தியான மந்திரம் :-

நமாமி சாய் குரு பாத பங்கஜம் |
கரோமி பாபா தவ பூஜனம் வரம் |
வதாமி சாய் சுப நாம நிர்மலம் |
ஸ்மராமி பாபா தவ தத்வ மவ்யயம் |
சச்சிதானந்த ரூபாய பக்தானுக்ரஹ காரினே |
ஷீரடின்யாய ஸ்தைகதேஹாய ஷாயீஷாய நமோ நமஹ |
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய சர்வதாயச்ச விஷ்ணவே |
ஸ்ருஷ்டீச்ச த்ரிஸ்வரூபாய சாயிநாதாயதே  நமஹ|
சாய் சாயிதி சாயிதி ஸ்மர்தவ்யம் நாம சஜ்ஜனயே|
சஹஸ்ர நாம தத்துல்யம் சாயி நாம வரப்ரதம் |
ஸ்ரீ சாயிதி சதா ஸ்நானம் |
ஸ்ரீ சாயிதி சதா ஜபஹா |
ஸ்ரீ சாயிதி சதா த்யானம் |
 சதா சாயிதி கீர்த்தனம் ||       


ஆபத் நிவாரண சாய் மந்த்ரம் :-

ஆபத்தான தருணங்களில் அல்லது ஆபத்துக்கள் ஏற்படும் என்று பயம் ஏற்பட்டாலோ  இந்த மந்திரத்தை சாய்பாபா படத்தின் முன் அமர்ந்து அல்லது அவரை நினைத்து ஜெபித்து வர ஆபத்துக்கள்,விபத்துக்கள்,எதிரிகளால் உண்டாகும்  துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பரப்ரம்ம கீ ரூப ஜோ ஜக் கோ சனாத் ||
சோ ஹமாரி ரக்ஷா கரே ஜகத் குரு சாயிநாத் ||

தொலை தூரப் பயணம் ,குழந்தைகள் பாதுகாப்பு என எந்த சூழ்நிலையிலும் இதை ஜெபித்து விபூதி அணிந்து அவரை வேண்டிக் கிளம்ப அவர் அருள் ரக்ஷையாக நின்று காக்கும்.


காரியத் தடை நீங்க :-
எந்த ஒரு காரியம் செய்யும் முன்னர் விநாயகரை வேண்டி கீழே உள்ள ஸ்லோகம் சொல்லி ஸ்ரீ சாய்பாபாவையும் வேண்டி காரியம் த்தொடங்க காரியத்தடைகள் நீங்கி சிறப்படைவீர்கள் .

ஸ்ரீ கணேசாய நம |ஸ்ரீ சாயிநாதாய நம மம கார்ய நிர்விக்னமஸ்து ||


குறிப்பு :-
சாய்பாபா அதிகமாக ஜெபித்த சித்தி பெற்ற மந்திரம்

"அல்லா மாலிக்".

அவர் சமயபேதம் அற்றவர்.ஆனால் ,அவர் சித்தி பெற்ற "அல்லா மாலிக்" என்ற மந்திரத்தை எல்லோரும் அப்படியே ஜெபிக்க வேண்டாம். சூஃபி வழிமுறையில் (இஸ்லாமிய ஞான வழி ) மந்திரங்களை முறைப்படி ஒரு சூஃபி குருவை அணுகித் தீக்ஷை பெற்ற பின்னரே ஜெபிப்பது சிறப்பு.
ஏன் என்றால் மந்திர உரு ஏற ஏறச் சில எதிர்பாராத அனுபவங்கள் அல்லது ஆன்மீகத்தில் வேறு உயர்ந்த படித்தரங்களையோ பெறலாம்.எல்லோருக்கும் அது ஏற்புடையதாக இருக்காது.

மேலும்,சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Sunday, 4 January 2015

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 1

                            


                                      ஓம் ஸ்ரீ சாய் நாதாய நமஹ 

கூப்பிட்ட குரலுக்கு உடன் வந்து அருள் செய்பவர்கள்  ஸ்ரீ சாய்பாபா மற்றும் வள்ளலார் என்று பல்வேறு ஆன்மீக  மற்றும் மறைபொருள் ஆய்வாளர்கள்   தெரிவிக்கின்றனர்.( ENSURED BY A LOT OF SPIRITUAL RESEARCHERS & MYSTICS )


ஷீரடி சாய்பாபா சிறந்த வரப்ரசாதி எனவே அவர் மத பேதமின்றி அனைத்து மக்களாலும் வழிபடப்படுகின்றார்.இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் பெருமளவில் இவர் வழிபாடு இருந்தது ஆனால் இப்போது தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் சாய்பாபா வழிபாடும் ,ஆலயங்களும்  பெருகி வருகின்றன .

இங்கு சாய்பாபாவின்  மந்திரங்கள் சில உள்ளன,உங்களுக்கு எது பிடித்தமாக உள்ளதோ அதை ஜெபித்து வழிபடவும்.

                                                 ஸ்ரீ ஷீரடி சாய்பாபா காயத்ரி 

                                            ஓம் ஷீரடி வாசாய வித்மஹே 
                                                   சச்சிதானந்த தீமஹி 
                                            தன்னோ சாய் ப்ரசோதயாத் 

சாய்பாபா அருட்பிரசாதமாக வழங்கப்படும் உடி எனப்படும் விபூதி மிகச் சக்தி வாய்ந்தது.இருந்தாலும் கீழே உள்ள மந்திரம் சொல்லி வைத்துக் கொள்ள எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும் ரக்ஷையாக விளங்கும்.


1.சாய் விபூதி மந்திரம்
மஹோ க்ராஹ பீடாம்  மஹோத் பாத பீடாம் |
மஹா ரோக பீடாம் மஹா தீவ்ர பீடாம் |
ஹரத்யாசுதே த்வாரகாமாயி பஸ்ம நமஸ்தே |
குரு ஸ்ரேஷ்ட சாயீஸ்வராய |
ஸ்ரீகரம் நித்யம் சுபகரம்  பரமம் பவித்ரம் |
மகாபாபஹரம் பாபா விபூதிம் தாரயாம்யஹம் |
பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதிம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |
சாய்  விபூதிம் இதமஸ்ரயாமி |
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாதாய  நமஹ ||

   
மேலே கண்ட மந்திரம் சொல்ல கஷ்டமாக இருந்தால் கீழே உள்ள மந்திரம் சொல்லி விபூதி அணியலாம்.

2.சாய் விபூதி மந்திரம்

பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com