Showing posts with label துன்பங்கள் தீர. Show all posts
Showing posts with label துன்பங்கள் தீர. Show all posts

Sunday, 17 April 2016

துன்பம் தீர ,நினைத்தது நிறைவேற ஹனுமான் சாலிசா பிரயோகம்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளவும்.ஒரு சிகப்புநிற  காட்டன் நூல் வாங்கி அதை உங்கள் தலை முதல் பாதம் வரை அளக்கவும்.அந்தச் சிகப்பு நூலைத் தேங்காயில் சுற்றவும்.பின்னர் தேங்காயில் செந்தூரம் (ஆரஞ்சு நிறம்) கொண்டு ஒரு ஸ்வஸ்திக் வரையவும்.


பின்னர் அந்தத் தேங்காயைக் கையில் வைத்துக் கொண்டு  ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் குறைந்தது 3 தடவை அதிகபட்சம் 9 தடவை ஜெபிக்கவும்.ஜெபித்து முடித்த பின் அந்தத் தேங்காயை ஹனுமான் ஆலயத்தில் கொடுத்து விடவும்.உங்கள் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேறும்.மேலும்,வாழ்வில் பல துன்பங்கள்,தொடர் இழப்புகள், சரிவுகளைச் சந்தித்து வாழ்வா,சாவா என்ற நிலையில் உள்ளவர்களும் இதைச் செய்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்ய ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் காணலாம்.

http://anumar.vayusutha.in/sthuthi1.html





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Wednesday, 22 April 2015

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்







மந்திரம் 

ஓம் வஜ்ரபுவே நமஹ||


இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.

பிரயோகம் :-

கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை  இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 2 February 2015

கஷ்டங்கள் தீர,எதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்த்ரம்



ஸ்ரீ  பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும்,அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரயோகத்தைச் செய்ய நிறைவான பலன் கிடைக்கும்.

பிரயோகம் 1:-
மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா "  என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு மஞ்சள் நூலில் தடவி  மந்திரத்தை 21 தடவை ஜெபித்து அந்தக் கயிற்றை ரக்ஷையாக அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 2:-

மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா " என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு வெற்றிலையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை 21 தடவை ஜெபித்து முடித்த பின் அந்த மஞ்சள் விழுதை ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கரைத்து வீட்டின் மேலும், வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 3 :-   இதை உடற்கட்டு மந்திரமாகவும் பயன்படுத்தலாம்.ஏதேனும் பூஜை செய்யும் முன் அல்லது காடு,பயங்கரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது இதை ஆபத்து ஏதும் ஏற்படாது காக்கும்.பயந்தவர்களுக்கு இதை 3 தடவை ஜெபித்துத் தண்ணீரில் 3 தடவை ஊதி அந்தத் தண்ணீரால் முகத்தில் தெளிக்கப் பயந்ததால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:-

ஓம் நமோ பகவதி | ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி | மம சர்வ நிந்தகானாம் சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய | ஜிஹ்வாம் முத்ரய முத்ரய |  புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம் முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய  ஸ்தம்பய | கேம் கீம் மாரய மாரய |பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ  ரக்ஷ | க்ரஹம் நிவாரய நிவாரய |வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர | தாரித்ர்யம் நிவாரய நிவாரய |சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ | தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி  மாம் ரக்ஷ ரக்ஷ |பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி  மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய  விநாசய  | சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே  ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன் உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||

 

                           வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 14 January 2015

துக்க நாசன,சத்ரு ஜெய ஸ்ரீ துர்க்கா மந்திரங்கள்




துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்  துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||


தினமும்  ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில்  இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.



சத்ருக்கள் தொல்லை நீங்க :-

ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா

தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 11 August 2014

துன்பங்கள்,மனக்கவலைகள் நீங்க


சிவலிங்கத்திற்குத் தும்பைப் பூவால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து வரத் துன்பங்களும் மனக்கவலைகளும் தீரும்.


ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே |
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ ||




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா.தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com