Showing posts with label ஸ்ரீ சரஸ்வதி மந்திரம். Show all posts
Showing posts with label ஸ்ரீ சரஸ்வதி மந்திரம். Show all posts

Friday, 26 September 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவியின் 12 திருநாமங்கள்


சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபடலாம்.

சம்ஸ்கிருத வார்த்தைகளை உச்சரிக்க இயலாதவர்கள் குளித்து முடித்த பின்னர் தினமும் கிழக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று கீழே உள்ள சரஸ்வதியின் பன்னிரு திருநாமங்களை ஜெபித்து விபூதி,குங்குமம் அணிந்து வரக்  கல்வியில் முன்னேற்றம்,நல்ல வாக்குவன்மை உண்டாகும்.

மாணவர்கள் ,பணிபுரிபவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள் என யாவரும் இதைச் செய்து வருவதன் மூலம் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயரவும்,இருக்கும் நிலையைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.


ஸ்ரீ சரஸ்வதி த்வாதச நாமங்கள் :-

பாரதி  

சரஸ்வதி 
சாரதா தேவி 
ஹம்சவாகினி  
ஜகதீக்யாதா
மகேஸ்வரி
கௌமாரி
பிரம்மச்சாரிணி
வித்யதாத்ரிணி
வரதாயினி
ருத்ரகண்டா
புவனேஸ்வரி


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Monday, 22 September 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம்






குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ,எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .

பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி .அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


ஸ்ரீ ஹயக்ரீவர்,ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் ,ஜெபிக்கும் முறைகள்,வாக்குவன்மை கல்வியில் மேன்மை பெற உதவும் சிலப் பிரயோக முறைகளும் கற்றுத்தரவிருக்கிறோம். 


சரஸ்வதி பீஜ மந்த்ரம்       - ஐம் 
ஹயக்ரீவர் பீஜ மந்த்ரம் - ஹ்ரஸௌம் 

நினைவாற்றல் கூட படிப்பில் விருப்பம் ஏற்பட :-

செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக்  கற்பூரம்  போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை  இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.

புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் இதைச் செய்து வர நிறைவான தொடர்ந்த பலனைப் பெறலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்,கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்களும் இதைச் செய்து  வியக்கத்தக்க பலன்களைப்  பெறலாம்.இது அனுபவ உண்மை.

மேலும் ஒரு பிரயோகம் 

புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ  ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது  27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச்  சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம் ||   வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


    

Sunday, 10 August 2014

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்



க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.

இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.

இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 

கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.



இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  ||


3.
ஓம் கம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு சஹஸ்த்ரவான்|
ஹ்ரீம் தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||
க்ரோம் சஹஸ்ரார ஹூம் பட் க்ரோம் ஹ்ரீம் ஓம் ||


இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் ஜெபிக்கவும். 
  

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.


மந்திர சாஸ்திரத்தில் இவரது மந்திரஜபம் கொண்டு சத்ருஜெயம், நேர்மையான காரியங்களில் வெற்றி பெறுதல் எனப்  பலவிதமான  பிரயோக முறைகள் உள்ளன.தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.


இவரது யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் இவரை ஒரே ஒரு  ஆலயத்தில்  மட்டுமே பார்க்கலாம்.
கும்பகோணம் மாவட்டம் குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் சேங்காலிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் இவரது விக்ரகம் உள்ளது.அங்கு சென்று இவருக்கு பூஜை செய்து மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.



M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com