Friday 28 February 2020

சென்னையில் முற்றிலும் இலவசமாக ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி மற்றும் சந்தேகம் தெளிதல் சத்சங்கம் - 8.3.2020 ஞாயிறு அன்று (முதலில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி)



சித்தர்கள்,மஹான்கள்,ரிஷிகள் அருளிய மந்திரங்கள்,பரிகாரங்கள்,ஆன்மீக ரகசியங்கள் பற்றிய வகுப்பு.


முதலில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.

மிக எளிதாகவும்,விரைவாகவும்,குறைந்த காலத்தில் பலன்களைப் பெறுவது எப்படி என்பதற்கேற்பவும்,மந்திரஜபம் தொடர்ந்து செய்ய முடியவில்லை
என்று சொல்பவர்களுக்கும் உதவும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கிறேன்.எனவே,விருப்பம் இருப்பவர்கள் முன்பதிவு செய்து  கலந்து கொள்ளவும்.


ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் இந்தப் பயிற்சிக்கு வரவேண்டாம்.பிறர் கலந்து கொண்டு பயன் பெற உதவுங்கள். 



பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும்,பரிகாரங்கள் செய்தும்,பல மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லியும் கடன்,வறுமை,தடைகள், எதிர்ப்புகள்,பாதிப்புகள்
நீங்காமல் வருந்துபவர்களுக்கு ஒரு சரியான தீர்வாக இந்த வகுப்பு இருக்கும்.

 
2.நலமும் வளமும் கொண்ட வாழ்வு வாழ சரியான மந்திரத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி


3.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.


4.குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.


5.என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது


6.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத
நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.


9.உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.


10.வீட்டிலும் ,வெளியிலும் எல்லோராலும் நேசிக்கப்பட ,வீட்டில் உள்ளோர் ஒருவருக்கொருவர் பிரியமாக,
உண்மையாக,உதவியாக இருக்க உதவும் முறைகள்.


11.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை,தடைகள் ஏன் ஏற்படுகிறது?  


12.குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் வாழ்க்கை நிலைக்கு
ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?


13.அதீத கோபம்,காமம்,பயம்,கவலை,வறுமை நீங்கி  ஒழுக்கமாய் வாழ மஹான்கள் 
கூறிய ரகசியங்கள்


14.தீய மனிதர்கள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் நம்மைக் 
பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்


இவை பற்றிய விளக்கம் காலையில் 10 மணி  முதல் 11:30 மணி வரை இடம் பெறும்.


11:30 முதல் 11:45 வரை தேநீர் இடைவேளை.

11:45 முதல் 1:30 மணி வரை உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு 
விடை அளிக்கும் சத்சங்கம்.

----------------------------------------
இறைவனை உணர பக்தி,மந்திர ஜபம்,யோகம்,ஞானம் எனப் பல ஆன்மீக வழிமுறைகள் உள்ளதே
இவற்றில் எது உயர்ந்தது ? சரியானதுசீக்கிரம் பலன் தருவது?

அசைவம் உண்பது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையா ?

தீயவர்கள் கூட வலமாக வாழும்பொழுது,ஆன்மீகத் தேடுதல் அதிகம் உள்ளவர்கள் பலர் வாழ்க்கையில்
கஷ்டப்படுகிறார்கள் ஏன்?


பல்வேறு மதங்களில் பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவே? அனைவரது வேண்டுதலுக்கும் பலன் தரும் கடவுள் ஒன்றாபலரா?


தெய்வங்கள் உண்மையிலேயே கருணையானவர்களா ? 
தண்டிப்பவர்களா ? 


அதிகாலையில் தியானமோ,மந்திரமோ ஜெபிக்க எழ முடிவதில்லைஎன்ன செய்வது?


இது போன்ற உங்கள் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை சத்சங்க நேரத்தில்
கேட்டு நிறைவான பதில் பெறலாம்.மேலும் உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கேட்டுத் தெளிவு பெறலாம். 

ஒரு நபர் ஒரு கேள்வி மட்டுமே கேட்கலாம்.

ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் நமக்கோ,நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ பயன்படலாம்.


பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி 
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  8.3.2018 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : K.M.L.நாதன் திருமண மண்டபம்
பெரம்பூர் -ரெட் ஹில்ஸ் ரோடு,புதிய லட்சுமி புரம்,கொளத்தூர், 
சென்னை 600009


பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,மதிய உணவு வழங்கப்படும்.


குறிப்பு எடுத்துக் கொள்ள நோட்டு மற்றும் பேனா கொண்டு வரவும்.
பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 
இருந்து செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி 
சிக்னல் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும் 


வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திரு.சக்திவேல்  -   9841530789
திரு.செல்வம்     -   8668035174


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com

Thursday 13 February 2020

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 23.02.2020 ஞாயிறு அன்று

23.02.2020 ஞாயிறு மாசி மாதம் அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலையில் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்வடைய உதவும் ஆன்மீகம், சித்தர் ரகசியங்கள்,மந்திர ஜபம்,யோகப் பயிற்சிகள் பற்றி அறிந்து கொள்ள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.


அத்ரிமகரிஷிக்கும்,அனுசூயாதேவிக்கும் குழந்தையாக தத்தாத்ரேயர் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் அவதரித்தனர். இந்த புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.


இம்மலையையும் இதன் சிறப்பையும் பற்றி பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.


கடனா அணைக்கட்டு வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.

 

மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.
 

தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது.
மலைப் பயணம் மற்றும் சத்சங்கம் முடிந்ததும் நேரம் இருந்தால் சிவசைலம் ஆலயத்திற்குச் செல்லலாம்.

  
20 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பதால் யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு அவசியம்.


யாத்திரைக் கட்டணம்: RS.700 மட்டுமே




வரும் வழி பற்றிய விபரம் :

வரும் வழி,வந்து சேர வேண்டிய நேரம் மற்றும் பிற விபரங்களைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறும் படி முடிவு செய்திருப்பதால் முடிந்தவரை காலையில் சீக்கிரமே வர முயற்சிக்கவும். அல்லது முன்தினம் வந்து ரூம் எடுத்து தங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.


23.02.2020 ஞாயிறு அன்று மிகச்சரியாக காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேனில் அல்லது டாக்ஸியில் மலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு காலை 6 முதல் 6:30 மணிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்.
 
மேலும்,மாலை 3 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்.45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிக்கவும்.



தனியே கார் அல்லது வேறு வாகனத்தில் வருபவர்கள் கீழே உள்ள என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வரும்வழி பற்றி அறிந்து கொள்ளவும்.



அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அன்பர்கள் சத்சங்கத்தில் பகிரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டு,பேனா,மதிய உணவு,மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும்.


அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் 
வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல 
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.



கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.700 அல்லது முன்பணமாக ரூ.500 செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932  BRANCH CODE:00932

GOOGLE PAY :9442193072


R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093  BRANCH CODE:00T093




கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:-


1.விரதம் எதுவும் பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை. பயணத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

2.மந்திரசித்தியோடு லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வின் தடைகளை நீக்கி உயர்வு,செல்வ வளம்,மகிழ்ச்சியுடன் வாழ உதவும் ஸ்ரீமஹாகணபதி மந்திரம் தீட்சை தரப்படும்.மேலும் யோகம்,ஞானம்,சித்தர்கள்,மந்திரம்,
உபாசனை,பிரச்சனைகளுக்குப் பரிகாரங்கள் என பல ஆன்மீக விஷயங்கள் பற்றி சத்சங்கம் நடைபெறும்.



மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072

------------------------------------------------------------------------------
அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள்  தவம் இயற்றியுள்ளார்கள்.


பசுமை போர்த்திய மூலிகை மலைகள்வானத்தையும்வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும்அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணைஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல்நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை(85 அடி உயரம்அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும்இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும்வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம்இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவிஅத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானதுஅமைந்துள்ளது.

கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்றுஇன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளதுஇங்குஅகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளதுஇங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதிஉள்ளத்தில் சாந்தி பிறக்கிறதுஎன்பது நிதர்சனம்.
இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கைவள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான்விநாயகர்மகிஷாசுரமர்த்தினிசுற்றுப்பாதையில் அகத்தியர்அத்ரிநாக தேவதைகள்சாஸ்தா பீடம் அமைந்துள்ளனகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்திவிஷ்ணுபிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்கருவறையில் அத்ரி பரமேஸ்வரன்அத்ரி பரமேஸ்வரியும்எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர்கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும்செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர்இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும்ராகு,கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.


இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!  


அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம் 






தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம் 

வற்றாத  புண்ணிய தீர்த்தம்

 அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம் 



அத்ரி மலைத் தோற்றம் .

 குகை 












மலைப் பாதை 







நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com