Showing posts with label வளமான வாழ்விற்குத் தாந்த்ரீக ரகசியங்கள். Show all posts
Showing posts with label வளமான வாழ்விற்குத் தாந்த்ரீக ரகசியங்கள். Show all posts

Thursday, 4 February 2016

(ட்ரான்ஸ்பர்) பணிஇடமாற்றம் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்




பணி இடமாற்றம் விரும்புவோர் அதிகாலையில் குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து 11 காய்ந்த மிளகாய் வற்றலை எடுத்துச் சூரியனை நோக்கி நின்று உங்கள் பணியிட மாற்றம் குறித்து வேண்டியபடியே அந்த மிளகாய்வற்றலைக் கிழக்குத் திசை நோக்கி எறிந்து விடவும்.இதை 43 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவும்.43 நாட்களுக்கு முன்னரே உங்கள் விருப்பம் நிறைவேறினால் பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஸ்ரீ சனீஸ்வரபகவானால் உண்டாகும் பாதிப்புகள் நீக்கும் எளிய தாந்த்ரீகப் பரிகாரங்கள்



1.உணவில் கருப்பு உப்பு அள்ளது கல்உப்பு  சேர்த்து வரலாம்.


2.கண்மை அல்லது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சுர்மா பவுடர் கண்களில் போட்டு வர சனிக்கிரக கெடுபலன்கள் குறையும்.


3.ஜனன ஜாதகத்தில் 7 மற்றும் 11 ஆம் வீட்டில் சனி பகவான் அமையப் பெற்றவர்கள் புதிதாக ஒரு சிறு மண்கலயம் அல்லது பானை வாங்கி ஆலயத்திற்கு அல்லது வயதானவர்களுக்குத் தானமாக வழங்க சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


4.மேலும்,ஏழாம் இடத்தில் சனிபகவான் அமையப் பெற்றவர்கள் ஏற்கனவே செய்துவரும் பரிகாரங்கள் எதுவானாலும் அவை முழுப் பலன்தர மது, மாமிசம்,புகையிலை,பீடி ,சிகரெட் போன்ற பழக்கங்களை அறவே கைவிட்டு விட தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.அல்லது பெரும்பொருள் இழப்பு,அவமானம்,நண்பர்கள் எதிரிகளைச் சரியாகக் கணித்து நடந்து கொள்ளும் திறன் இன்மை இவை ஏற்படும்.


5.இரும்பாலான பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்துவது சனீஸ்வரருக்கு பிரியமானது எனவே இதுவும் கெடுபலன்கள் குறைய உதவும்.



6.ஜாதகத்தில் சனீஸ்வரர் பாதகமான ஸ்தானத்தில் அமைந்து  அதனால் குழந்தை இன்மை அல்லது அடிக்கடி கரு களைந்து போகுதல் இவை ஏற்பட்டால் அந்தப் பெண்மணி தான் உண்ணும் முன் தான் உண்ணும் உணவில் உள்ள அத்தனை வகைகளிலும் தனியே சிறிது எடுத்து வைத்து அதை கருப்பு நிறமுள்ள நாய்க்கு போட்டு வர இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.கருப்பு நிற நாய்க்கு இடுவது சிறப்பு, தங்கள் பகுதியில் கருப்பு நிற நாய் இல்லாதவர்கள் வேறு நாய்க்குப் போடலாம்.
நாய்க்கு உணவு படைக்கும் பொழுது அதை பைரவராகப் பாவித்து மனதிற்குள் ஓம் ஹ்ரீம் காலபைரவாய மம சனிக்கிரக தோஷம் நசி நசி என்ற  மந்திரத்தை 3 தடவை ஜெபித்துக் கொள்ளவும்.
இந்தப் பரிகாரத்தைச் செய்ய முடியாத பெண்கள் ,குளிக்கும் முன்  அந்த நீரில் ஒன்றிரண்டு மரமஞ்சளைப் போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வரவும்.

7.ஜனன ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனியும்,ராகுவும் சேர்ந்து 
இருந்தால் அல்லது சனிதசை,புத்தி,அந்தரம் இவற்றில் பாதகமான பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால் சனிக்கிழமை தோறும் யூகலிப்டஸ் இலை ஒன்றை எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளவும்.இதனால் சனிக்கிரக பாதிப்புகள் குறையும்.


வாழ்கவளமுடன்
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9 788493072

Tuesday, 26 January 2016

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்




உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம் 



   


வாழ்கவளமுடன்

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 13 January 2016

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்




உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.


1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி  மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப்  பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை  ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள   மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை  தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Friday, 26 December 2014

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம் :3



1.சேல்ஸ்,விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிவோர் பௌர்ணமி அன்று வெள்ளி மோதிரம் வாங்கி அதை ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து இடது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வாழ்வில்,வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திங்கட்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இதைச் செய்தால் மிகச்சிறப்பு.



2.ஏற்கனவே செய்துவரும் தொழிலை மேலும்  விரிவுபடுத்துபவர்கள் அல்லது மேலும் ஒரு புதுத் தொழிலைச் சேர்த்துச் செய்ய இருப்பவர்கள் ஏற்கனவே நடத்தி வரும் கடை / தொழிற்சாலையில் இருந்து ஏதேனும் இரும்பினாலான ஒரு பொருளைச் சனிக்கிழமை அன்று மாலை வேளையில் எடுத்து வந்துப் புதிதாகத் திறக்கவிருக்கும் கடை அல்லது தொழிற்சாலையில் அடிக்கடி நகர்த்தாமல் இருக்கும்படியாக ஒரு இடத்தில்  வைத்துவிட வேண்டும்.இதன் பயன் :- அந்தப் புதுத் தொழில் இடத்தில் கடன் மற்றும் விபத்துக்கள் ஏற்படாது. தொழிலாளர்களால் பிரச்சனை ஏற்படாது.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


துர்மந்திர பாதிப்புகள் நீங்க



தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று  மதியம் 12 முதல் 1:30 மணிக்குள் பூஜையைத் தொடங்கவும்.ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர்  தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும்.கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து  கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின்  தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள்  / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3  தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.
பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களையும்,அதிகம் கூட்டத்தையும் அழைக்காமல் செய்வது சிறப்பு.சுபமுண்டாகும்.

முக்கியமான விஷயம் :பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.

மந்திரம்:-

ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 15 December 2014

ஆன்மீக ரகசியங்கள்:பாகம் 8 (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )




1.தினமும்  சூர்யோதய வேளையில் சூரியனை நோக்கி நின்று 11 தடவை நீரால் தர்ப்பணம் கொடுக்க சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகி பெரிய மனிதர் என புகழும் படி கௌரவமான வாழ்வு அமையும்.ஒவ்வொரு முறை தர்ப்பணம்  கொடுக்கும் பொழுதும்  "ஓம் க்ருனிஹி சூர்யஆதித்யாய சர்வ தோஷ நிவாரணாய நமஹ"  என்று ஜெபித்தபடியே கொடுக்கவும்.

2.பித்ரு தோஷம் தீர :-

                     ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று  காலையில் தெற்கு நோக்கி நின்று 5 ஊதுவத்தி ஏற்றி முன்னோர்களை வழிபட்டு வரப் பித்ரு தோஷ கெடுபலன்கள்  நீங்கி சுபகாரியத்தடைகள் நிவர்த்தியாகி நலம் உண்டாகும்.மேலும்,உடல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறையத் துவங்கும்.


3. சூரியன் மறையும் வேளையில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீர் நிரப்பி அதன் அருகில் விளக்கேற்ற வீட்டில்,உடலில் ஆகாச மற்றும் ஜல பூத தோஷங்கள் இருந்தால் அவை நிவர்த்தியாகும்.

 
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள்:7 (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )

 
              


நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.


சில பரிகாரங்கள் சாதாரணமாக இருக்கலாம் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பெரும் துன்பத்தில்,வியாதியில்  அகப்பட்டு அதற்காகப் பெருமளவில் வைத்தியம்,பூஜை,யாகம் என்று பெரும் பணம் செலவழித்துக் கொண்டிருப்பபோம்.இப்போது நாம் கீழே பதிவிட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்கள் நம் நலவாழ்வில் பெரும் பல அவசியமான  மாற்றங்களைச் செய்யவல்லது.

1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில்  வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப்  பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை  ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல்  கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப்  பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .


4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால்  வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.    
இதற்குப்  பரிகாரம்:-

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு  "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என  3 தடவை  ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 10 December 2014

சாந்தி கர்ம மந்திரம்


நம் மனோவிருப்பங்கள் நிறைவேற உதவும் பல பிரயோகங்கள் தாந்த்ரீக சாஸ்திரத்தில் இருந்தாலும் தாந்த்ரீகத்தின் முக்கியமான கர்மாக்கள் ஆறாகும்.அவற்றில் சாந்தி கர்மாவும் ஒன்று.ஆனால் மற்ற கர்மாக்கள் அளவிற்கு சாந்தி கர்மாவில் மக்கள் கவனம் செலுத்துவதோ,முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை.ஆனால் என் பார்வையில் சாந்தி கர்மாவே மற்றவற்றை விடப் பிரதானமானது.ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், சக்திகள்,புகழ் இருந்தாலும்,குடும்பத்தில்,மனதில் நிம்மதி,அமைதி இன்றி என்ன பயன்?.எனவே விதிமுறைப்படி செய்யப்படும் சாந்தி கர்மா பிரயோகம் இல்லத்தில்,மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யும்.நிம்மதி,மகிழ்ச்சி,நல்ல சூழல் இவை கிட்டினால் மட்டுமே இல்வாழ்க்கையிலும்,பொருளாதாரம்,ஆன்மீகத்திலும் தொடர்ந்து முன்னேற முடியும்.

எனவே  கிரகங்கள் ,தீவினைகளினால் மட்டுமின்றி நமது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம்,அதீத கோபம்,அதீத துக்கம்,தீரா நோய்கள், பேராசையாலும் நமக்கு நிம்மதிக்குறைவு ஏற்படலாம்.சாந்தி கர்மா மந்திரம் ஜெபித்து வர நன்மை உண்டாகும்.

மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர் அரசமர அடியில் அமர்ந்து ஊதுபத்தி ஏற்றி வைத்து கீழே உள்ள மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.
அரசமர அடியில் அமர்ந்து ஜெபிக்க முடியாதவர்கள்  மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர்,அரச மரத்தில் இருந்து வடக்கு பக்கம் உள்ள  வேர் அல்லது கிளையில் உள்ள குச்சியில் ஒன்றை ஒடித்து அதில் மஞ்சள் தடவி சிகப்புத் துணியில் வைத்து அரசங் குச்சியால்
இந்த மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்யலாம்.அதே பலன் கிடைக்கும்.

மந்திரம்:-

ஓம் நமஹ :ஷாந்தே ப்ரஷாந்தே ஓம் ஹ்ரீம் ஹ்ராம் சர்வ க்ரோத பிரசமனி ஸ்வாஹா ||

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 9 December 2014

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம்: 2


திங்கட்கிழமை  அன்று 7 வில்வ இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றில் குங்குமப்பூ கொண்டு "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்"  என்று எழுதவும்.எழுதிய பின் "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்" என்று 7 தடவை ஜெபிக்கவும். இப்படி ஒவ்வொரு வில்வ இலையிலும் எழுதி மேற்சொன்ன மந்திரத்தை 7 தடவை ஜெபிக்கவும்.7 இலைகளிலும் எழுதி, ஜெபித்து முடிந்த பின்னர் ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு மேற்சொன்ன மந்திரத்தை ஜெபித்தபடியே வில்வ இலைகளைச் சமர்ப்பித்து சர்வ தோஷங்களும் நீங்க அர்ச்சனை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 3 அல்லது 7 திங்கட்கிழமைகள் செய்து வர சர்வ தோஷங்களும்,  நாம் இப்பிறவியில் கொண்டுவந்த தீய கர்மாக்களின் பாதிப்புகளும் குறைந்து ,குடும்பம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

அநேகர் நல்ல ஜோதிடர்களாக இருந்தாலும் ,சிலர் ஜோதிடத்தின் பெயராலும் ,மாந்திரீகத்தின் பெயராலும் மக்களிடம் அதிகப் பணத்தை அபகரித்து வருகின்றனர்.அதன் காரணமாகவே எனக்குத் தெரிந்த பல ஆன்மீக ரகசியங்களை ஒளிவு மறைவின்றி வெளியிடுகின்றேன்.இவை உத்தரவாதமான பலன்களைத் தர வல்லவை.பயன்படுத்திப் பலன் பெறுங்கள். 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம் :1


1.செல்வம் பெருக :-

பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் அல்லது அந்த திசையில் உள்ள மேற்கூரையில் வைத்தால் அந்த இடத்தில் நிரந்தர பணப்புழக்கம் இருக்காது.வேண்டுமானால் அந்த மாதிரியான பொருட்களை வீட்டின் தெற்குப் பகுதி அல்லது தெற்கே உள்ள அறையில் வைக்கலாம்.10 நாட்களுக்கு மேல் ஒரு பொருளை பயன்படுத்தாமல் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தாலோ அல்லது வீட்டை அல்லது ஒரு அறையை 10 நாட்களுக்கு மேல் அடைத்தே வைத்திருந்தாலோ தீய சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் நுழைந்து குடிகொள்ளும்.அந்த வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவுகள்,உறக்கமின்மை,கெட்ட கனவுகள்,தொடர் வியாதி போன்றவை சம்பவிக்கும்.இந்த பாதிப்புகள் நீங்க செவ்வாய்க்கிழமை  அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் சாம்பிராணி.குங்கிலியம்.கொஞ்சம் காய்ந்த அருகம்புல் இவை கொண்டு தூபம் போட (புகை போட)  தீய சக்திகள் நீங்கி வீடு சுபிட்சம் ,பெரும்.அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.

தூபம் போடும் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடி போடவும்.

மந்திரம் :-
ஓம் ஹம் ஹனுமதே மாம் ரக்ஷ ரக்ஷ | மம குலம் ரக்ஷ ரக்ஷ||



2.ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோர் தூங்கும் பொழுது கிழக்கே தலை வைத்து மேற்கே கால் நீட்டி தூங்க ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

3.தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி படுத்து வர பொருளாதாரம் மேம்படும் .

4.வடக்கே தலை வைத்து உறங்கினால் மனோநிலையில் பாதிப்பு ஏற்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 3 December 2014

ஆன்மீக ரகசியங்கள்:6 வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க





ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு  சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் களற்றிவிட்டு வெறும் காலுடன் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள்:5 செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்





கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம்  நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது  மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :4 சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்



செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர்  அல்லது 1 மீட்டர் நீளமுள்ள  சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு  கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை)  ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் அந்தச் சிகப்பு முடியை  அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

மந்திரம் :-

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம்  ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||

   
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :3 (தாந்த்ரீக பரிகாரம்) அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்


ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன்  நின்று  கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ  அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Tuesday, 2 December 2014

ஆன்மீக ரகசியங்கள் :2. செல்வவளம் பெற ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பிரயோகம்




ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது. 



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :- 1


ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் கானம் எனப்படும் காராமணிப்  பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக்  காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி  வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.

இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம். 

மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday, 1 December 2014

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள்


1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை   தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை   நீங்கிச் செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய

ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம்  ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் கையில் வைத்து சுற்றி பின்னர் வெளியில் தெற்கு முகமாக நின்று நான்கு துண்டாக நறுக்கி குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும்.கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்த கடைகளில் இதைச் செய்த பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.

3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள்  நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

ஆண்கள் - சனிக்கிழமை

பெண்கள் - வெள்ளிக்கிழமை

4.பொருளாதாரம் உயர:-

ஞாயிற்றுக்கிழமையும் பூசம்  நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில்  நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில்  வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில்  நனைத்து அந்தத் துணியால்  நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.


5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.


6.அடிக்கடி ஆபத்துகளைச்  சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.


7.அரச மரத்தின் அற்புத சக்தி :

1. தீரா நோய் தீர

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.


2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட  விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com