Showing posts with label விஷ ஜந்துக்கள் தொல்லை நீங்க. Show all posts
Showing posts with label விஷ ஜந்துக்கள் தொல்லை நீங்க. Show all posts

Saturday, 20 February 2016

பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க


சிலர் வீட்டில் அடிக்கடி பாம்புகள் வந்து அதனால் விஷபயம் ஏற்பட்டு கஷ்டப் படுபவர்கள் பாம்பைக் கண்டுடன் முனிராஜ் ஆஸ்தீக் நமஹா என்று சில தடவைகள் சொன்ன உடனே பாம்பு நம் பார்வையில் படாமல் விலகிச் சென்று விடும்.இதை எந்த விஷ ஜந்துவை விரட்டவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் அல்லது கடையில் பாம்புத் தொல்லை நிரந்தமாக இல்லாமல் இருக்க விரும்புவோர் :

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் நான்கு பக்கமும் இம்மந்திரத்தைக் பன்னீர் விட்டுக் குழைத்த குங்குமத்தால் எழுதவும்.இது போல் 5 பேப்பரில் எழுதி வீட்டைச் சுற்றி நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றைப் புதைத்து வைக்கவும்.மீதமுள்ள ஒன்றை வீட்டின் நிலைக் கதவில் சுருட்டி வைக்கவும் அல்லது லேமினேஷன் செய்து ஒட்டவும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Wednesday, 13 January 2016

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்




உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.


1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி  மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப்  பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை  ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள   மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை  தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072