Showing posts with label மிருத்யுஞ்சய மந்திரம். Show all posts
Showing posts with label மிருத்யுஞ்சய மந்திரம். Show all posts

Tuesday, 19 July 2016

பிறவித்தளை நீங்க,ஆன்மீக முன்னேற்றம் பெற மிருத்யுஞ்சய மந்திரம்


மிருத்யுஞ்சய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம் |
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி சம்சார பயநாசனம் ||

இந்த மிருத்யுஞ்சய மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வரச் சிவ சரணாகதி ஏற்பட்டு இல்வாழ்க்கைத் துன்பங்கள்,பயம்,சஞ்சலங்கள்,நோய்கள் யாவும் நீங்கிப் பிறவிப் பயனை அடைய வழிபிறக்கும்.

1,25,000 தடவை ஜெபிக்க மந்திர சித்தி ஏற்படும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Friday, 8 July 2016

அதிகமான பலன்கள் தரும் யந்திரம்




இந்த யந்திரத்தை  எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை  வரிசையாகப் பார்க்கலாம்.


பிரயோகம் 1:-     ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச்  செய்யலாம்.இது போன்ற காரிய வெற்றிக்குச் செய்யும் பொழுது பூர்ஜபத்ரம் அல்லது தூய வெள்ளை பேப்பரில் அஷ்டகந்தம்  கொண்டு  மாதுளை மரக்குச்சியில் தொட்டு இந்த யந்திரம் வரையவேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்டி ஒரு தாயத்தில் போட்டு வலது கையின் மேல்பாகத்தில் அணிந்து கொள்ளவும்.குறிப்பிட்ட காரியம் நிறைவேறியபின் அதைக் கழட்டிப்  பூஜை அறையில் வைத்து விடவும். முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது அதே யந்திரத்தை மேற்சொன்ன முறைப்படி அணிந்து கொள்ளலாம்.


பிரயோகம் 2:-     வீடு மற்றும் அலுவலகத்தில் பேய்,பிசாசுகள்,கண்திருஷ்டி ,கேட்ட சக்திகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த யந்திரத்தாய் வீடு அல்லது அலுவலகத்தின் முகப்பில் எளிதில் பார்வையில் படும்படி வரையவேண்டும்.அஷ்டகந்தம் மற்றும் பசுநெய் கலந்து வரைய வேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்ட எல்லா தீய சக்திகளில் இருந்தும் காக்கும்.

பிரயோகம் 3:-     தோட்டம்,வயல் ,நர்சரி கார்டன் இவற்றில் விளைச்சல் அதிகரிக்க பிரயோகம் 1 ல் கூறிய முறைப்படி வரைந்து வயல் அல்லது தோட்டத்தில் புதைத்து வைக்க விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com