Showing posts with label பயம். Show all posts
Showing posts with label பயம். Show all posts

Monday, 22 December 2014

பயம்,கோபம், தீய பழக்கங்கள் நீங்க




அதீத கோபம் நீங்க :-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ  க்ரோத உபஷமணி  ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெள்ளைத்துணி விரித்து வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத கோப உணர்ச்சி நீங்கி அமைதி உண்டாகும்.



அதீத பயம் நீங்க :-
ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ பய  உபஷமணி  ஸ்வாஹா|| 

செவ்வாய்க்கிழமை அன்று இந்த மந்திரத்தைச் சிகப்புத்துணி  விரித்து  வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத பயம்,கோழை மனப்பான்மை நீங்கி மனதைரியம் உண்டாகும்.


தீய பழக்கங்களில் இருந்து விடுபட:-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ ------------உபஷமணி  ஸ்வாஹா||

தீய பழக்கங்களில் இருந்து விடுபட விரும்புவோர் கோடிட்ட இடத்தில் தம்மிடம் என்ன கெட்ட பழக்கம் உள்ளதோ அதைக் குறிப்பிட்டு ஜெபிக்க விடுபடலாம்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 19 November 2014

ஸ்ரீ ஹனுமான் பயவிமோசன மந்திரம் :-





அஞ்சனாகர்ப்ப சம்பூதாய கபீந்த்ரோ சர்வோத்தம |
ராமப்ரிய நமஸ்துப்யம் ஹனுமந் ரக்ஷ ரக்ஷ சர்வதா ||


இரவில் தூங்கும் போது துர்சக்திகள் பிடித்து அழுக்குவது,பயங்கர கனவு கண்டு விழித்துக்கொள்வது ,அமானுஷ்ய சத்தங்கள் காதில் விழுந்து பயப்படுதல் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை,பாக்கு,பழங்கள்,உளுந்துவடை படைத்து  முன்னால் விபூதி அல்லது செந்தூரம் வைத்து மேற்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.பின்னர் உறங்கும் முன் அந்த விபூதி அல்லது  செந்தூரத்தை நெற்றி அணிந்து கொள்ள மேற்சொன்ன தீமைகள் ஏற்படாது.தினமும் இவ்வாறு செய்து வரவும்.

வீட்டில் பேய், பிசாசு,மந்திரங்களால் அல்லது  தீய சக்திகளின் தொல்லை இருந்தால் இந்த மந்திரத்தைத் தேய்பிறை செவ்வாய்கிழமை (அன்று இப்பூஜையைச் செய்பவருக்குப் படுபக்ஷி நாளாக இருக்ககூடாது)   ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை, பாக்கு,பழங்கள், உளுந்துவடை படைத்து  முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கொஞ்சம் துளசி இலைகளைப்  போட்டு ,விபூதி வைத்து மந்திரத்தை 1008 தடவை  ஜெபம் செய்யவும்.ஜபம் முடிந்ததும் அந்த விபூதியை செம்பில் உள்ள நீரில் போட்டு  அந்த தீர்த்தத்தை வீட்டின் உட்புறம் ,வெளிப்புறம்,வீட்டில் உள்ளோர் மீதும் வெற்றிலை கொண்டு தெளித்து விடவும்.இவ்வாறு 3 செவ்வாய்க் கிழமைகள்  செய்ய எந்த துஷ்ட சக்திகளாலும் துன்பம் நேராது.


                      வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
  


Thursday, 29 May 2014

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்



நரசிம்ம மந்திரம்.

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.





துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியமும்  நல்வாழவும் பெறுவார்கள்.

 
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா -  தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com