Showing posts with label குழந்தைகளின் நலம். Show all posts
Showing posts with label குழந்தைகளின் நலம். Show all posts

Monday, 2 March 2015

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க





குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்,அல்லது  தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி  அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டு, கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக்  குழந்தை நிம்மதியாக உறங்கும்.


பாலரக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாலிகா கண்டம் ஜ்வாலா பாவக லோசனம் |
கபால கதாம்த்யுக்ரம் கலியே கால பைரவம் ||
 

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 3 February 2015

குழந்தைகளுக்குத் தீர்க்காயுள் தரும் ஸ்ரீ துர்க்காதேவி மந்திரம்



சில குழந்தைகள் கொடிய நோய்களால் பாதிப்படைந்து ஆபத்தான சூழ்நிலையில் இருப்பார்கள்.சில குழந்தைகளுக்கு ஜாதகப்படி ஆயுள் கண்டம்,பிறவியில் இருந்தே நோய்,பாதிப்புகள் இருக்கும்.இவை தீரக்  கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யவும்.


முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தைத் தினமும் வடக்கு நோக்கி அமர்ந்து 27 தடவை ஜெபித்து அந்தத் தீர்த்தத்தைக் குடிக்கக் கொடுத்து வர குழந்தைகளின் ஆயுள் கண்டம்,கொடிய நோய்களின் பாதிப்புகள் நீங்கும்.அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளுக்கும் இதைச்  செய்யலாம்.            

மந்திரம் :-

கும் கும் கும் தும் தும் தும் |துர்கே துர்கே மஹாதுர்கே|
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் |
மகாஷாஷ்தி ரூபிணி|இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு|
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ||  


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 28 December 2014

குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் ,ஆரோக்கியத்திற்கும்





ஜைனர்களின் (சேட்டுகள்) மந்திரங்களைப் பார்த்து வருகிறோம்.அவற்றில் சில எளிமையான மந்திரங்களைப் பார்க்கலாம்.
                    நம் தமிழகத்தில் உள்ள 18 சித்தர்களைப்போல் ஜைன மதத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளார்கள்.இவர்களில் ஸ்ரீ மஹாவீரர் 24 வது தீர்த்தங்கரர். பகவான் ஸ்ரீ பார்ஷ்வநாதர் ஜைன மதத்தின் 23 ஆவது தீர்த்தங்கரர்.இவரது மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இது ஒரு சித்தர் மந்திரம் எனவே சித்தி செய்யத் தேவை இல்லை.

ஒரு செம்பு அல்லது எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதை வலது கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்துக் குழந்தை முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கச் செய்ய கண் திருஷ்டி,பாலாரிஷ்ட தோஷம்,பூத பிரேதத் தொல்லைகள்.அடிக்கடி நோய் ஏற்படுதல்  நீங்கிக் குழந்தை நலம் பெரும். 

இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து 3 முடிச்சு போட்டு சிகப்புக் கயிறு கட்ட மேற்கண்ட பலன் உண்டாகும்.இந்தக் கயிறு சிறியவர்,பெரியவர் என யாவருக்கும் கட்டலாம் சிறந்த ரக்ஷையாக விளங்கும்.


மந்திரம் :-

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பார்ஸ்வநாதாய| ஹீ தர்நேத்ரா |பத்மாவதி சஹிதாய| ஆத்மசக்ஷு ப்ரேதசக்ஷு |சர்வக்ரஹ நாசாய |சர்வ ஜ்வர நாசாய | த்ராசய த்ராசய| ஹீ  நாசாய ஸ்வாஹா ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 11 September 2014

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு

அடிக்கடி காரணமின்றி அழுதல் மற்றும் நோயால் கஷ்டப்படும் குழந்தைகள் ஆரோக்கியம் பெற இந்த மந்திர பிரயோகம் உதவும்.

ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் விபூதி பரப்பி  மேல்நோக்கிய முக்கோணம் வரைந்து அதன் நடுவில்  றீங் என்றெழுதி முக்கோணத்தின் முனைகளில் சூலம் வரைந்து    ''ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா  ''   என்று 108 தடவை ஜெபித்து பின்னர் அந்த விபூதியை பதனம் பண்ணி தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு பூசிச் சிறிது உள்ளுக்குக் கொடுக்க
தொடர் அழுகை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்  நீங்கும்.

                   





வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 16 July 2013

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)



மானசா எனப்படும் ஜரத்காரு தேவி மந்திரம் :-


ஓம்|ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ||க்லீம் ஐம்|மானசா தேவ்யை நமஹா||

கையில் கொஞ்சம் திருநீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த திருநீரை பயம்,அல்லது திருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு பூசி விட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்து விடும்.அனுபவத்தில் கண்டது.


1008 உரு ஜெபித்து சித்தி கொண்ட பின் மேற்கண்ட பிரயோகம் செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072