Showing posts with label சகல சௌபாக்கியம் பெற. Show all posts
Showing posts with label சகல சௌபாக்கியம் பெற. Show all posts

Monday, 11 July 2016

வாழ்வில் உயர்வான நிலை அருளும் ஸ்ரீ துர்கா மந்திரம்



இது தந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆவாஹன மந்திரம்.இம்மந்திரம்  எளிமையாக இருந்தாலும்  உங்கள் வாழ்வில் ஸ்ரீ துர்கா மாதாவின் அருளை ஆகர்ஷித்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க உதவக்கூடியது.

பூஜா விதிகள் :


இம்மந்திர ஜெபத்தை நவராத்திரியில் ஆரம்பித்து நவராத்திரி காலமான 9 நாட்களுக்கும் செய்யவேண்டும்..

துர்கா தேவியின் படம் வைத்து அதன் முன் விளக்கேற்றி ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

மஞ்சள் நிற ஆடை அணியவும்.

வடக்கு நோக்கி அமர்ந்து  ருத்ராக்ஷம் அல்லது ஸ்படிக மாலையால் காலையிலும் இரவிலும் 540 தடவைகள் ஜெபிக்க வேண்டும். (108*5=540).

பழங்கள் ,இனிப்பு வகைகள் நைவேத்யம் செய்யவும்.

ஜபம்,பூஜை முடிந்த பின் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

பூஜா காலங்களில் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.அது நிறைவான பலனை குறைக்கும்.



மந்திரம் 


ஓம் ஹ்ரீம் பகவதி ஆகச்ச ஓம் நமஹா 



வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 10 July 2016

பாதுகாப்பும் செல்வமும் தரும் ஸ்ரீ பைரவ மந்திரமும் ஹோமமும்





இது பைரவரின் நவாட்சர மந்திரம் இதை 14000 உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.பின்னர் பத்தில் ஒரு பங்கு அதாவது 1400 எண்ணிக்கை பால் கொண்டு ஹோமம் செய்தால் மந்திரம் பூரண சித்தியாகி விடும்.இதை பயன் கள் :-நம்மைச் சுற்றி நடக்கும் தீய சக்திகளின் தொந்தரவுகள்,தொடர்ந்த உடல் நலக் குறைபாடுகள்  நீங்கும்,உணவு,உடைக்குப் பஞ்சம் என்ற நிலை மாறி நிரந்தரமான பணப் புழக்கம் உண்டாகும்.


மந்திரம் 

ஓம் நமோ பைரவாய ஸ்வாஹா




வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 7 July 2016

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்




1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.

2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித்  தீபம்  ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை  எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.

3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.

4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.

5.ப்ரஹ்ம முஹூர்த்த  நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.

6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.

7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.

8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.

9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

10.கரித்துண்டுகளை  வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.

11.கூர்மையான பொருட்களை  அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 17 April 2016

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்



மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்

ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடியே அர்ச்சிக்கவும்.மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.அர்ச்சித்து முடித்த பின் அந்த தேங்காயை ஒரு மஞ்சள் துணியில்  முடிந்து கடை அல்லது பூஜை அறை அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.தினமும் சாமி படங்களுக்கு ஊதுவத்தி,கற்பூரம் காட்டும் பொழுது இதற்கும் காட்டிவரக் கடன்,வறுமை தீர்ந்து நிறைவான செல்வம் கிட்டும்.

மந்திரம்:

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத |
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ||


 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Tuesday, 1 March 2016

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்





பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே.எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-
1.கரும்புள்ளிகள்,கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2.செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.
3.வெடிப்பு,கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4.வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.
5.தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும்.வெள்ளையே சிறந்தது.


1.சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2.வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும்.அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிகை,பிச்சி,ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும்.பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு,பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3.பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம்.அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும்.முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.
குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.


கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ 

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||

3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ ||
   

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Monday, 29 February 2016

செல்வ வளமும்,தொழில் விருத்தியும் தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்







இந்தப் பூஜையைத் தீபாவளி,நவராத்திரி,மாதப்பிறப்பு போன்ற ஏதாவது சுப தினங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்து வர நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம்.


வளர்பிறை வியாழக்கிழமை அன்று மாலை குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து மஞ்சள் துண்டு மேல்வஸ்திரமாக அணிந்து அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி அதில் இரண்டு ஏலக்காய்,இரண்டு கற்கண்டு, சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு,ஒரு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அதில் 11 மாவிலைகளைச்   சுற்றி வைத்து கும்பத்திற்குப் பூச்சூடவும்.வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு வாழை இலையில் மஞ்சள் பொடியால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அந்தச் செம்பை அதன் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும்.

நைவேத்தியமாக வெல்லம்,தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பழங்கள் வைக்கவும்.மல்லிகை,பிச்சி (முல்லை ) அல்லது வாசனை உள்ள ரோஜாப் பூக்கள் ஜெபத்திற்கு உகந்தவை.

ஜெபம் முடிந்ததும் ஜெபம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர் தன் மீது அந்த கும்பதீர்த்தத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்துக் கொள்ளவும்.பின் கும்பதீர்த்தத்தை  தொழிற்சாலை,கடை முழுவதும் தெளித்து விடவும்.சர்வ பீடை,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி லாபம் கொழிக்கத் துவங்கும்.



இந்த பூஜையை வீட்டிலும் செய்யலாம்.தரித்திரம் நீங்கி செல்வநிலையில் உயர்வு கிட்டும்.



மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் லக்ஷ்மீ | துர்பாக்ய நாசினி சௌபாக்ய ப்ரதாயினி |
ஸ்ரீம் ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

நிறைசெல்வம் தரும் ஸ்ரீ பத்மாவதி மந்திரம்



உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளில்  இம்மந்திரத்தை ஜெபிக்கத் துவங்கவும்.வெள்ளிக்கிழமையாக இருந்தால் சிறப்பு.

தினமும் இரவில் குளித்து முடித்துத் தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து முன்னால் அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

தினமும் 108 தடவை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.

ஜெபம் செய்து வரும் நாட்களில் மது,மாமிசம்,உடலுறவு தவிர்க்கவும்.

ஸ்ரீ பத்மாவதி மந்திரம்

ஓம் நமோ பத்மாவதி | பத்மநேத்ர வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Thursday, 11 February 2016

யக்ஷணி மந்திர சித்தி தரும் யக்ஷராஜன் ஸ்ரீ குபேரதேவன் மந்திரம்



ஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும் 

யக்ஷிணி மற்றும் யக்ஷர்களின் அரசன் ஸ்ரீ குபேர தேவன் ஆவார்.நம்மிடம் நம் ஹிந்து மத நூல்களில் யக்ஷிணிகளை உபாசனை செய்து பலனடையும் மந்திரங்கள் மட்டுமே உண்டு. நம் கிரந்தங்களில் குபேரதேவன் மந்திரங்கள் பல உள்ளன.குபேரதேவனைத் தவிர பிற யக்ஷர்களின் உபாசனை  மந்திரங்கள் ஜைனர்களிடம்  ரகசியமாக உள்ளன. எக்ஷணி மந்திரங்களைச் சிலரிடம் உபதேசம் பெற்று ஜெபித்து வருகிறேன் ஆனால் தீக்ஷை தரும் பொழுது சொன்னவிதமாக பலன்களோ தரிசனமோ கிட்டவில்லை என்று பலர் வருத்தம் தெரிவித்தனர்.அவர்களின் குறை தீரும் பொருட்டு இம்மந்திரத்தை வெளியிடுகிறேன்.இதை 12000 எண்ணிக்கை ஜெபம் செய்தால் மந்திர சித்தியாகிவிடும்.பின்,எந்த யக்ஷிணி மந்திரத்தை ஜெபம் செய்யும் முன்னும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் ஜெபம் செய்ய விரைவில் அந்த யக்ஷணி மனமகிழ்ந்து சாதகனுக்கு வேண்டுவன தந்தருள்வாள்.



மந்திரம் :-
ஓம் யக்ஷராஜ நமஸ்துப்யம் சங்கர ப்ரியபாந்தவ:|
காலா காலே மகா காலே யக்ஷிணி வசம்கா குரு ||


இம்மந்திரம் விரைவான முழுமையான பலன்களைத் தர ஜெபகாலங்களில் கடைப்பிடிக்கக் வேண்டியவை:-

1.பிரம்மச்சர்யம்
2.மௌன விரதம் இருக்கலாம்.அல்லது குறைவாக பேசவேண்டும்.
3.மது,மாமிசம்,புகையிலை தவிர்க்கவும்.
4.பகல் பொழுது தூங்கக்கூடாது.
5.இரவில் வெறும் தரையில் படுத்துத் தூங்கவேண்டும்.
6.நெற்றியில் மந்திரம் 3 தடவை ஜெபித்து சிகப்பு சந்தனம் அணிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Monday, 8 February 2016

விரைவில் செல்வந்தராகத் தாந்த்ரீக ரகசியம்

பவளமல்லிச் செடி  



பவளமல்லிச் செடியின் வேரில் ஒரு சிறு துண்டும்,11 சிறிய வெள்ளைக் குண்டுமணியும் சேர்த்து ஒரு தாயத்தில் அடைத்துத் தூப,தீபம் காண்பித்து இடுப்பில் கட்டிக்கொள்ள  விரைவில் செல்வந்தராகலாம்.
வெண்குண்டுமணி என்பது சிகப்புக் குண்டுமணி போலவே இருக்கும் இதைச்  சேர்த்து ஜெபமாலையும் செய்கிறார்கள்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com 

தன ஆகர்ஷண ரகசியம்

நொச்சிச் செடிக்கு வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி அதன் ஆணிவேரை எடுத்து சந்தனம்,குங்குமம் தடவித் தூபம்,தீபம் காண்பித்து உங்கள் பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்துக்கொள்ள எந்த வழியிலாவது பணம் உங்களிடம் வந்து கொண்டே இருக்கும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com


ms.guru83@gmail.com

Wednesday, 3 February 2016

மகாலட்சுமி வீட்டில் நிலைத்து வாசம் செய்ய அருளும் மந்திரம்



தினமும் விளக்கேற்றும் முன் ஊதுவத்தி ஏற்றி வீட்டு நிலைவரை சென்று இந்த மந்திரத்தை 3 தடவை ஜெபித்தபின் அந்த ஊதுவத்தியை விளக்கிற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.அதன் பின் விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.முடிந்தால் பூக்கள் சூடலாம்.இதை அதிகாலையிலும் இரவு துவங்கும் வேளையிலும் செய்து வர ஸ்ரீ மகாலட்சுமி என்றென்றும் நிரந்தரமாக உங்கள் இல்லத்தில் வாசம் செய்வாள்.இதை அலுவலகம், கடை, போன்ற இடங்களிலும் முடிந்த நேரங்களில் செய்யலாம்.
வெள்ளிக்கிழமைக மாலை நேரத்தில் பன்னீர் வாங்கி வைத்து இம்மந்திரத்தை 108 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்தப் பன்னீரை வீட்டில், கடையில்,வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் தெளித்து வர தரித்திரம் நீங்கி வளம் கொழிக்கும்.


மந்திரம் :-

ஓம் சபரிதேவ்யோ மம க்ருஹே லக்ஷ்மி ஸ்திர  குரு குரு  ஸ்வாஹா ||


வாழ்கவளமுடன்
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9 788493072

Monday, 1 February 2016

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்

                                                            வாழ்கவளமுடன்


உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கீழே உள்ள யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்குப்  பஞ்சோபசார பூஜை செய்யவும்.

பஞ்சோபசார பூஜை முறை :-

1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.

பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.



                                                      வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Thursday, 21 January 2016

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்



தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான எந்திரங்கள் எண் யந்திரங்களே .குறிப்பிட்ட பலன்களைப் பெரும் விதமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பீஜ மந்திரங்களின் நியூமராலஜி கணக்கின் படி எண் யந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

கீழே உள்ள யந்திரங்களைச் செம்புத் தகட்டில் எழுதினால் பலன் அதிகம். முடியாதவர்கள் சுத்தமான வெள்ளைப் பேப்பரில் சிகப்பு மையால் அல்லது குங்குமத்தால் எழுதி வைத்துக்கொள்ளவும்.பின்னர் யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து விளக்கில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை எழுந்தருள வேண்டி பால்,பழங்கள்,கற்கண்டு,பாயசம் வைத்து யந்திரத்தித்தைச் செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் குறைந்தது 27 தடவையாவது கீழே உள்ள மந்திரம் ஜெபித்து அர்ச்சித்து வைத்துக் கொள்ளவும்.

ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்| லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச |மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||  

எண் 1ல் உள்ள யந்திரத்தைப் பர்சிலும் எண் 2 ல் உள்ள யந்திரத்தைப்  பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில்  இடத்தில் வைத்துக் கொள்ளவும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Tuesday, 5 January 2016

செல்வவிருத்தி தரும் தாந்த்ரீகப் பிரயோகம்




தொடர்ந்த பணப்புழக்கமும்,செல்வ நிலையில் உயர்வும் தரும் இந்த தாந்த்ரீக பிரயோகம் மிக எளிமையான ஆனால் வலிமையான் ஒன்று.இதை அன்பர்கள் யாவரும் செய்து பலன் பெற வாழ்த்துகிறேன்.

இதைச் சங்கடஹர  சதுர்த்தி அன்று வெள்ளை அல்லது மஞ்சள் நிற விரிப்பு விரித்துக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து செய்யவும்.

தேவையான பொருட்கள் :-
மஞ்சள் துண்டு ஒன்று
மஞ்சள் காட்டன் அல்லது பட்டுத் துணி
தேங்காய் ஒன்று
கொட்டைப்பாக்கு ஐந்து



கொட்டைப்பாக்கையும் தேங்காயையும் மஞ்சள்பொடி தடவி வைக்கவும். பின்னர் மஞ்சள் துண்டு,தேங்காய்,ஐந்து கொட்டைப்பாக்கு இவற்றை மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கட்டவும்.அதற்குக் கற்பூரம், சாம்பிராணி தூபம், ஊதுவத்தி தூபம் கட்டவும்.இந்தப் பிரயோகத்தைச் செய்யும் பொழுது மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ  "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹா" என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே  செய்யவேண்டும்.  

பின்னர் சக்தி வாய்ந்த இந்த செல்வவசியத் தேங்காய்முடியை வீடு அல்லது கடையில் சுத்தமான இடத்தில் வைக்கச் செல்வம் பெருகத் துவங்கும்.இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம்.வீட்டாரைத் தவிர வெளி நபர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச்  செய்யவும்.வெளிநபர்கள் யாரிடமும் சொல்ல விரும்பினால் செய்த பின்னர் சொல்லிக் கொள்ளலாம்.
தினமும் அல்லது சங்கட சதுர்த்தி,திங்கள்கிழமை,வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் அதற்கு கற்பூரம் ,ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காட்டி வர சக்தி குறையாமல் இருக்கும்.

வாழ்க வையகம்  || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072
Whatsapp: 9788493072
Youtube Channel: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


Sunday, 20 December 2015

மன விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் |
மஹாலக்ஷ்மீம் மம வாஞ்சிதார்த்த சித்திம் |
குரு குரு ஸ்வாஹா ||

 இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஜெபிக்கத் துவங்கி 23 ஆயிரம் தடவை ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகி நமது விருப்பம் நிறவேற ஏற்ற சூழல் உருவாகும்.

ஜப ஆரம்பத்தில் உங்கள் நோக்கம் இன்னதென்று குறிப்பிட்டு அது நிறைவேறும் பொருட்டு இம்மந்திரம் ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து பின் மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்..

ஜப ஆரம்பத்தில் விளக்கேற்றி ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி இத்தீப ஜோதியில் வந்தருள வேண்டும் என்று ஊதுவத்தி காண்பித்து 3 தடவை வேண்டவும்.பின்னர் விளக்கின் பாதத்தில் சந்தனம் ,பன்னீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்த நீரைக் கொஞ்சம்  விட்டு விளக்கிற்குச் சந்தனம் குங்குமம் வைக்கவும்.
                                          முதல் நாள் மற்றும் கடைசி நாள் சிறப்பாக நைவேத்யம் படைத்துப் பூஜிக்கவும். மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடலாம்.


வீட்டில் காலை மாலை சந்தி வேளையில் நறுமணம் வீசும்படி சாம்பிராணி அல்லது ஊதுவத்தி ஏற்றிவைக்கவும்.

ஆவாஹனாதி பூஜை விதிகள் அறிந்தவர்கள் முறைப்படி பூஜிக்கவும்.


23,000 ஜெபம் முடிந்து வேண்டிய காரியம் பலிக்கும் வரை இந்தக் காரியம் நடைபெற வேண்டி இம்மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.

ஜெப காலங்களில் சைவ உணவை மேற்கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Friday, 16 October 2015

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்

ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில்  வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.



இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 13 September 2015

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்



வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.

சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

தரித்திரம் நீக்கி நிறைந்த செல்வம் தருவதில் தனிச் சிறப்பானது புவனேஸ்வரி வழிபாடு.இது விரைவான பலன்களைத் தரவல்லது.


இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப்  வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து வழிபடுங்கள்.


முறைப்படி ஒரு குருவிடம் தீக்ஷை பெற்று ஜெபித்து பூஜை விதிகளை அறிந்து ஜெபித்து வருவதன் மூலம் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும். 




1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா 

2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா 

3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா 



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Wednesday, 2 September 2015

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்






மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் || 


 எளிமையான,நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள்,தேன்,பச்சரிசி,ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com



Sunday, 9 August 2015

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும் ஸ்ரீ பகளாமுகி மந்திரம்




தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.


மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.

ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-  

ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com