Wednesday 25 September 2013

நவக்கிரஹ வழிபாடு

நவக்கிரஹ வழிபாடு:-




                                     நவக்கிரஹங்களும் தெய்வங்களும் நாம் இந்த ஜன்மத்தில் கொண்டு வந்த வினைகளை (பிராரப்த கர்மா ) அனுபவிக்க சூழ்நிலையையும், எண்ணங்களையும் உண்டாக்குகின்றனர்.எனவே,நவக்கிரகங்களை, தெய்வங்களை பழிப்பது கூடாது. இருப்பினும்,அவர்களை வழிபட்டால் நன்மைகளை நிறைவாகவும்,தீமைகளின் கெடுபலன்களை குறைத்தும் அருள்செய்வார்கள்.

தற்சமயம் எந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்று வருகிறதோ அதற்கான மந்திரத்தை  ஜெபித்து வரலாம்.மேலும,அவற்றிற்கான கூடுதல் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.சூர்யபகவான் :-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||

வேலையில்,அரசியலில்,உடல்நலத்தில் குறிப்பாகத் தலை தொடர்பான வியாதிகளை  தீர்க்கும். தந்தைகள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தகப்பன் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சூர்யன் அருள்வார்.


2.சந்திரபகவான் :-

ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|

மனக்குழப்பம்,வேதனைகள்,வயிறு,மற்றும் இரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும்.தாய்மார்கள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தாய்  ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சந்திரன் அருள்வார்.


3.செவ்வாய்பகவான்:-

ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|

கணவன்,மனைவி உறவு மேம்படும்.வாகனங்கள் ,வீடு,சொத்து  வாங்க மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் தீரும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.

4.குருபகவான்:-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ ப்ரஹஸ்பதயே நமஹ||

வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றியும்,பாதுகாப்பும் ஏற்படும்.சமூகத்தில் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.தொழில்,வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

5.சனிபகவான்:-

ஓம் க்ஹ்ராம் க்ஹ்ரீம் க்ஹ்ரௌம் சஹ சனீஸ்வராய  நமஹ|

காரியத்தடை,கடன்,வறுமை,அவமானம்,வியாதிகள் நீங்கும்.


6.புதபகவான்:-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|

புத்திக்கூர்மை,கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.தொழில் வெற்றி,வாக்குவன்மை உண்டாகும்.

7.சுக்ரபகவான்:-

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ|

பொன்,பொருள் சேர்க்கை,கலைகளில் சிறப்புத்தேர்ச்சி,பெண்களுடன் சிறப்பான தொடர்புகொள்ளும் திறன் உண்டாகும். 

8.ராகுபகவான் :-

ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே  நமஹ|

மனக்குழப்பம்,தீய சக்திகளால் தொல்லை,சட்டப்பபிரச்சனைகள் தீரும்.


9.கேதுபகவான் :-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ கேதவே நமஹ|

இழந்த புகழை  மீண்டும் பெறலாம்.தீய ஆவிகளின் தொல்லை ,ஏவல் தீரும்.
ஒவ்வாமை தொடர்பான வியாதிகள் நீங்கும்.திடீர் தீய நிகழ்வுகளில் இருந்து  பாதுகாப்பு கிட்டும்.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Thursday 19 September 2013

நவக்கிரஹ மந்த்ரங்கள்

நவக்கிரஹ மந்த்ரங்கள் :-




சூர்யபகவான்:-

சுலோகம்:-
ஓம் ஜபாகுசும சங்காசம்|
காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ  பாபக்னம்|
ப்ரனதோஸ்மி  திவாகரம்||

மந்திரம்:- ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||     இதை 40 நாட்களுக்குள் ஆறாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:- க்ரீம்
உகந்த நாள் :ஞாயிற்றுக்கிழமை .
திசை-கிழக்கு
அதி தெய்வம் :-சிவன்
ரத்தினம்:மாணிக்கம்
நிறம்:ரத்தச்சிகப்பு
-----------------------------------------------------------------------------------

சந்திரபகவான்:-

சுலோகம்:-
ததி ஷங்க துஷாராபம்|
க்ஷீரோ தார்ணவ சம்பவம்|
நமாமி சசினம் சோமம்|
சம்போர் மகுட  பூஷணம்||

மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|     இதை 40 நாட்களுக்குள் பத்தாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ரீம்
உகந்த நாள் :-திங்கள்கிழமை
திசை:- வடமேற்கு
அதி தெய்வம் :-பார்வதி
ரத்தினம்:முத்து
நிறம்:வெண்மை


------------------------------------------------------------------------------------

செவ்வாய்பகவான்:-

சுலோகம்:-
தரணி கர்ப்ப சம்பூதம்|
வித்யுத் காந்தி சமப்ரபம்||
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்|
மங்களம் பிரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ||    இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஹ்ரீம்
உகந்த நாள் :-செவ்வாய்க்கிழமை
திசை:- தெற்கு
அதி தெய்வம் :-முருகன்
ரத்தினம்: பவளம்
நிறம்:சிகப்பு  அல்லது பவளச்சிகப்பு

---------------------------------------------------------------------------------
புதபகவான்:-

சுலோகம்:-
பிரியங்கு கலிகா ஷ்யாமம் |
ரூபேணா பிரதிமம் புதம்|
சௌம்யம் சௌம்ய குணோ பேதம்||
தம் புதம் பிரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ப்ராம்(B) ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ||      இதை 40 நாட்களுக்குள் பதினேழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஸ்ரீம்
உகந்த நாள் :-புதன்கிழமை
திசை:-வடக்கு
அதி தெய்வம் :-விஷ்ணு
ரத்தினம்:பச்சை
நிறம்:பச்சை

-----------------------------------------------------------------------------------
குரு பகவான்:-

சுலோகம்:-
தேவா நாம் ச ரிஷீனாஞ்ச||
குரும் காஞ்சன சந்நிபம்|
பக்திபூதம் த்ரிலோகேசம் ||
தம் நமாமி ப்ரஹஸ்பதிம்||

மந்திரம்:- ஓம்|ஜ்ராம் ஜ்ரீம் ஜ்ரௌம் சஹ குருவே நமஹ||     இதை 40 நாட்களுக்குள் பதினாராயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஔம்
உகந்த நாள் :-வியாழக்கிழமை
திசை:-வடகிழக்கு
அதி தெய்வம் :-தக்ஷிணாமூர்த்தி / பிரம்மா
ரத்தினம்:புஷ்பராகம்
நிறம்: மஞ்சள் அல்லது பொன்னிறம்

-----------------------------------------------------------------------------
சுக்ர பகவான்:-

சுலோகம்:-
ஹிமகுந்த ம்ருனாலாபம்|
தைத்யானம் பரமம் குரும் |
சர்வ சாஸ்திர ப்ரவக்தாரம் |
பார்கவம் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரோம் சஹ சுக்ராய நமஹ||     இதை 40 நாட்களுக்குள் இருபதாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-க்லீம்
உகந்த நாள் :-வெள்ளிக்கிழமை
திசை:-தென்கிழக்கு
அதி தெய்வம் :-லக்ஷ்மி / இந்திரன்/ வருணன்
ரத்தினம்:வைரம்
நிறம்:பட்டு போன்ற வெண்மை

--------------------------------------------------------------------------------------
சனி பகவான்:-

சுலோகம்:-
நீலாஞ்சனா சமபாசம் |
ரவி புத்ரம் யமாக்ராஜம்|
சாயா மார்த்தாண்ட சம்பூதம்|
தம் நமாமி சனைச்சரம்||

மந்திரம்:- ஓம் ப்ராம் (P) ப்ரீம் ப்ரௌம் சஹ சனைச்சராய நமஹ||      இதை 40 நாட்களுக்குள் பத்தொன்பதாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஐம்
உகந்த நாள் :-சனிக்கிழமை
திசை:-மேற்கு
அதி தெய்வம் :-யமன் /சாஸ்தா /சிவன்/பைரவர்
ரத்தினம்: நீலம்
நிறம்:கருப்பு

------------------------------------------------------------------
ராகு பகவான்:-

சுலோகம்:-
அர்த்த காயம் மஹா வீர்யம் |
சந்திராதித்ய விமர்த்தனம்|
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்|
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ப்ராம் (BH) ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ||    இதை 40 நாட்களுக்குள் பதினெட்டாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஹ்ரௌம்
உகந்த நாள் :-செவ்வாய்
திசை:-தென்மேற்கு
அதி தெய்வம் :-காளி / துர்க்கை
ரத்தினம்:கோமேதகம்
நிறம்:சித்திரங்கள் சேர்த்த கருப்பு

----------------------------------------------------------------------------------
கேது பகவான்:-

சுலோகம்:-
பலாச புஷ்ப சங்காசம்|
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்|
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதவே  நமஹ|     இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-சௌம்
உகந்த நாள் :-சனிக்கிழமை,ஞாயிற்றுகிழமை
திசை:-வடமேற்கு
அதி தெய்வம் :-விநாயகர் / சண்டிகேஸ்வரர்
ரத்தினம்: வைடூர்யம்
நிறம்:புள்ளிகளுடன் கூடிய சிகப்பு அல்லது பலவர்ணம்

------------------------------------------------------------------------------------
முக்கிய குறிப்பு :-

மேற்கண்ட மந்திரங்களை அந்தந்த கிரகத்தின் தசா புத்தி,அல்லது அந்தரம் நடக்கும்போது,அல்லது குறிப்பிட்ட கிரகத்தின் தோஷம் நீங்க அவற்றிற்குரிய கிழமையில் ஜெபிக்கத் தொடங்கவும்.அதன் திசையை நோக்கி ஜெபித்து வர விரைவில் பலன் தரும்.கிரக அதிதெய்வங்களின் ஆலயத்தில் வைத்து ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.

நடப்பு தசா,புத்தி அதற்குண்டான கிரகம்,அதன் அதி தேவதையின் மந்திரம்,யந்திரம் வைத்து அதற்குண்டான மந்திரங்களைச் சொல்லி ஜபம்,ஹோமம்,அர்ச்சனை செய்து பூஜித்து வரக் கெடுபலன்கள் குறைந்து நலம் உண்டாகும். 


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday 10 September 2013

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-




சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே


மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.

3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.

5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :-

சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

திக்குவாய் சரியாக பரிகாரம்

திக்குவாய் சரியாக பரிகாரம்:-




குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்-குறள்

குழந்தைகள் முதல் முதிர்ந்தோர் வரை திக்கு வாய் இருந்தால் அது நீங்க கீழ்க்கண்ட பரிகாரம் மற்றும் பூஜா முறையைத் தொடர்ந்து செய்து வர அவரவர் வினைப்பதிவிற்கேற்ப விரைவில் நலம் உண்டாகும்.

1.உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள்  உறங்கி வர வேண்டும்.90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.


2.செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின்  கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும்.பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வரலாம்.


மந்திரம்:-

1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ.


2. ஓம் ஐம் க்லீம் சௌம் |நமோ பகவதி சரஸ்வதி மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா||



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072