Thursday 23 April 2015

பூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரிக்வேத மந்திரம்



இந்த ரிக் வேத சூக்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர அதி விரைவில் சொந்த வீடு,பூமி,வாகனம் இவற்றோடு கூடிய வளமான வாழ்வு அமையும்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இம்மந்திரம் பலன் தராது. கிழக்கு முகமாக அமர்ந்து முன்னால் விளக்கேற்றி வைத்துக்கொண்டு ஜெபிக்கவும்.

மந்திரம் :-

க்ஷேத்ரஸ்ய பதினாவயம் ஹிதேனேவ ஜயாமஸி |
காமச்வம் போஷயித்வா ஸனோ ம்ருளா தீத்ருசே ||



இது ரிக்வேதத்தில் உள்ள சூக்த மந்திரத்தின் ஒரு பகுதி.
ரிஷி :- வாமதேவர்.
சந்தஸ்:- அனுஷ்டுப்.


                                வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திர சுலோகம்



ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :-

சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ  சதாசர்வ அர்த்த சாதினீ |
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||



இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது.இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.குளிக்கும் முன் குளிக்கப் பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து  பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும்.இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு  கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு




செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர  கொடுத்த பணம் வசூலாகும் சூழல் விரைவில் உருவாகும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 22 April 2015

ஸ்ரீ சுப்பிரமணிய மாலா மந்திரம்




ஓம் சரஹணபவாய  ஸாம் ஸீம் ஸூம் ஸைம்  ஸௌம் ஸஹ சுப்ரஹ்மண்யாய | குமாராய, குக்குடத்வஜாய, குங்குமவர்ணாய, மஹாமோஹனாய |த்வாதசாக்ஷராய, சர்வ சத்ருஹராய,பரசைன்ய வித்வம்சகாய,தேவசேனாதிபதயே ஸ்வாஹா ||


இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து காப்பாற்றும்.எதிரிகள் பலர் இருந்தாலும் அவர்களின் தீய செயல்களை ஸ்தம்பனம் செய்து உங்களை ரட்சிக்கும். மேலும் நல்ல வசீகரண சக்தியையும் தரும்.இம்மந்திரத்தைச்  சந்தனத்தில் ஜெபித்து அணிந்து வர  ராஜ வசீகரமும் பிரம்ம தேஜசும் உண்டாகும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்







மந்திரம் 

ஓம் வஜ்ரபுவே நமஹ||


இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.

பிரயோகம் :-

கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை  இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

காரிய சித்தி தரும் ஸ்ரீ சக்தி கணபதி மந்திரம்



மந்திரம் :-

ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே |
உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக |
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச்  செல்லும் முன்,குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச்  சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும்.இம்மந்திரத்தை நான் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்திப் பலன் அடைந்திருக்கிறேன்.


                                   வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 16 April 2015

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்




கீழே உள்ள யந்திரத்தை ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை 6:00 முதல் 7:00 மணிக்குள் பன்னீர் கலந்த அஷ்டகந்த கலவையால் ஒரு தூய வெள்ளை நிறப் பேப்பரில்  எழுதிப் பூக்களால் அர்ச்சித்துச் செம்புத் தாயத்தில் போட்டுக் கழுத்தில் அணிந்து கொள்ளக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் குணம் அடையலாம்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

அழகு,செல்வம்,நற்குணம் நிறைந்த கணவன் கிடைக்க ஸ்ரீ ருக்மிணீ மந்திரம்

ஸ்ரீ ருக்மிணீ தேவி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது பெருமாள் கோயில் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து நற்குணம்,செல்வம்,அழகும் நிறைந்த கணவன் கிடைக்க அருள் செய் என்று ஸ்ரீ கிருஷ்ணனோடு சேர்ந்த ருக்மிணீ தேவியை மனதார வேண்டிய பின் மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.

பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ ஜெபித்து வரலாம்.

வீட்டில் ஜெபிப்பதானால் நெய் விளக்கேற்றி அந்தத் தீப ஒளியில் ஸ்ரீ ருக்மிணீ சமேத ஸ்ரீ கிருஷ்ணரை எழுந்தருள வேண்டிப் பின்  ஜெபிக்கவும்.இயன்றதைப் படைத்து ஜபம் முடிந்த பின் விளக்கின் கருக்கை வகிடு அல்லது நெற்றியில் இட்டு  வர விரைவில் நல்ல இடத்தில் திருணம் நடைபெறும்.




வாழ்கவளமுடன்  

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com