Wednesday 31 July 2013

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 1

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 




16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு  இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத்  தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.


1.கிருஷ்ண மந்திரம்:-

ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திரத்திற்கு   ரிஷி நாரதர்  அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு  பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர   விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர  மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.


2.கிருஷ்ண மந்திரம்: 

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து  தொடர்ந்து  ஜெபித்து வர  விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.

3.கிருஷ்ண மந்திரம்: 

இந்திரா நீல  சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்|| 

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து   வர   விரைவில்  குழந்தை பாக்கியம் கிட்டும்.இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.





வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday 16 July 2013

நோய் நீக்கும் மந்திரங்கள்

நோய் நீக்கும் மந்திரங்கள்:-




1.அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-

ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||

                                         அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட  மீண்டும் உயிர் பெறச்செய்தார்.வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள் .நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம் .பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்

ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||

என ஜெபிக்க வேண்டும்.


2.தன்வந்திரி மந்திரம்:-

ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)



மானசா எனப்படும் ஜரத்காரு தேவி மந்திரம் :-


ஓம்|ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ||க்லீம் ஐம்|மானசா தேவ்யை நமஹா||

கையில் கொஞ்சம் திருநீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த திருநீரை பயம்,அல்லது திருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு பூசி விட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்து விடும்.அனுபவத்தில் கண்டது.


1008 உரு ஜெபித்து சித்தி கொண்ட பின் மேற்கண்ட பிரயோகம் செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Friday 12 July 2013

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்

1.ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

சரஸ்வதி மால் மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

2.சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ| 

(அல்லது)

ஓம்|ஐம் க்லீம் சௌம் வத வத வாக்வாதினி நமஹ|

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday 9 July 2013

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

1.திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல  குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம் |பத்னீம் மனோரமாம் தேஹி|| மனோ விருத்தானுசாரிநீம் |தாரிநீம் துர்கசம்சார சாகரஸ்ய குலோத்பவாம்||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

2நல்ல குணமுடைய மனைவி அமைய, சீக்கிரம் கல்யாணமாக ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம்|கந்தர்வராஜ விச்வாவஸோ ||மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.ஹோமம் செய்து ரக்ஷை கட்டினால் விரைவான பலன் கிட்டும்.
3. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

4.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  

ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

5.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


6.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 11 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072



சித்தர் தரிசன மந்திரங்கள்

                                        சித்தர் தரிசன மந்திரங்கள்


சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.


1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாதம் ,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.



3.சித்தர் தரிசன மந்திரம்:-


சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.


தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே

- அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-


ஓம்|சிங் ரங் அங் சிங்|


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர  சித்தர்கள் தரிசனம் தந்து நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதைத்  தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.


ஜெப விதிமுறை :

1.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.

2.ஜெபம் செய்யும் இடத்தில் சந்தனமும்,பன்னீரும் கலந்து தெளிப்பது நல்லது.

3.அசைவம் எப்போதும் தவிர்க்கவும்.சைவ உணவு விரைவான பலன் தரும்.

4.குடும்பஸ்தர்கள் வெள்ளை உடை அணிவது நல்லது.

5.முழு நேர ஆன்மீகவாதிகள்,பிரம்மச்சாரிகள்,போன்றோர் மட்டும் காவி அணிந்து கொள்ளலாம்.

6.உணவு,உறக்கம்,உணர்ச்சி இவற்றில் சமநிலையைப் பேணவும்.

7.தனக்கும்,பிற உயிர்களுக்கும் தீமை தரக்கூடிய செயல்களைத் தவிர்க்கவும். 

8.இரவில் ஜெபம் செய்வதாக ஜெபித்து முடித்த பின் இருந்தால் தனியாக உறங்கினால் நல்லது. 

9.விரிப்பின் மேல் வெள்ளை வேஷ்டி விரித்து அதில் உறங்கவும்.

10.சந்தன அத்தர் அல்லது ஜாவ்வாது  சிறிது பூசிக் கொள்ளவும்.

11.மல்லிகை,ரோஜா,முல்லை போன்ற பயன்படுத்தலாம்.

12.பழங்கள்,இனிப்பு வகைகள் படைக்கவும்.   


மேலும் விபரங்களுக்குக்  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday 8 July 2013

அகஸ்தியர் ஸ்துதி

அகஸ்தியர் ஸ்துதி




ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு ஸ்வகுரு அகஸ்திய குருப்யோ நமஹ
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குருபத்னி லோபாமுத்ராயை நமஹ 
அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

சித்தர்களில் முதன்மையானவரும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களின் மூலம் வைத்தியம்,ஜோதிடம்,மந்திரசாஸ்திரம் முதலான பல கலைகளைப்பற்றி இவரைப்போல் தெளிவுபட விளக்கியவர்கள் இலர்.             
அகஸ்தியர் எனது மானசீக குரு.

நான் இயற்றி அன்றாடம் கூறி வரும் ஸ்ரீ அகஸ்தியர் துதியை கீழே கொடுத்துள்ளேன். 

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப்  போட்டபடி  இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும்.

குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை 



ஸ்ரீ அகஸ்தியர் ஸ்துதி:- 

1.தமிழ் மொழிக்குக் கர்த்தாவும்

2.வைத்தியம்,ஜோதிடம்,மந்திரங்கள் குறித்துத் தமிழில் பல நூல்கள் இயற்றியவரும்       

3.முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரோபதேசம் பெற்ற முனிசிஷ்யரும் (முனி ச்ரேஷ்டரும்)

4.சண்முகப்ரியரும் 

5.சக்திதாசரும்

6.பொதிகைமுனி,கும்பமுனி,குறுமுனி,குருமுனி என்றழைக்கப்படுபவரும்

7.ராவணேஸ்வரரை வீணையால் வென்றவரும்

8.புலஸ்தியர்,தேரையர் போன்ற சித்தர் பெருமக்களின் குருநாதரும்

9.சிவபெருமான்,அன்னைபார்வதி திருமணத்தின் போது பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமன் செய்தவரும்  

10.ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தவரும்

11.சாக்த உபாசனா சிகரமும்

12.ஸ்ரீ வித்யா உபாசனையில் துதிக்கப்படுபவரும் 

13.ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ வித்யா உபதேசமும்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்டவருமான  

ஸ்ரீ அகஸ்திய குருவே உங்கள் திருவடிகளும்,அன்னை ஸ்ரீ லோபாமுத்திரையின் திருவடிகளும் அடியேன் துரிய கமலத்தின் மேல் இருந்து நான் வாழ்விலும்,ஆன்மீகத்திலும் உயர ஆசீர்வதித்து வழிகாட்ட வேண்டுகிறேன்.
            


திருநெல்வேலி -பாபநாசம்-அகஸ்தியர் அருவியின் மேல் உள்ள கல்யாணி தீர்த்தம் என்ற புனித ஸ்தலத்தில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குரு ஸ்ரீ அகஸ்தியர் -அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா விக்ரஹம்.     

        
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
WHATSAPP/TELEGRAM NO : 9788493072

Saturday 6 July 2013

விரதங்களின் அவசியம் என்ன ?

விரதங்களின் அவசியம் என்ன ?

இறைவழிபாட்டில் விரதங்கள் அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. இந்து,இஸ்லாமிய,பௌத்த,சமண மற்றும் எல்லா மதங்களிலும் விரதங்கள் பல்வேறு காலங்களில் அனுசரிக்கப்படுகிறது.


விரதங்களின் முக்கியத்துவம் என்னவென்றால்:-

முன் அத்தியாயங்களில் சொன்னவாறு நமக்கு ஐந்து சரீர அடுக்குகள் (பஞ்சகோசங்கள்) உள்ளது. அன்னமயகோசம் என்பது உணவு மற்றும் தண்ணீரின் துணையால் உண்டாவது.

இறைவழிபாடு ,மந்திர ஜெபம் ,தியானம் இவற்றின் மூலம் நமக்கு இறையருள் கண்ணால் பார்க்கமுடியாத சக்தி அலைகளாக நம்மை வந்து அடைகிறது.அந்த சக்தி அலைகள் நமது பிராண மற்றும் மன அடுக்குகளில் வந்து தங்குகிறது உடலில் மிகச்சிறிய அளவே சேர்கிறது.எனவே அவற்றை சுத்தமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலார் முதலிய சித்தர் ஞானியர் யாவரும் சிறு தெய்வ வழிபாட்டைத்  தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.சிறு தெய்வங்களை வழிபட்டால் சித்த சுத்தி எனப்படும் மனத்தூய்மை ஏற்படாது.


மூலாதார முதலான ஏழு சக்கரங்களில் நமது சக்தி எங்கு தற்சமயம் உள்ளதோ அதற்கேற்ப நமது எண்ண ஓட்டமும்,செயல்பாடுகளும் இருக்கும்.




அன்னமய கோசம் என்ற நமது சரீரத்தில் உணவு,நீர் அதிகம் தங்கியிருந்தால் அன்னமயகோசமே வலுவான இயக்கத்தில் இருக்கும்.உணவு தண்ணீர் இவை உடலுக்குள் சென்றாலே செரிமானம் துவங்கி சரீரத்தில் கழிவுகள் உருவாகத் தொடங்கி விடும்.கழிவுகளை நமக்குள் அடக்கியவாறே ஜபம்,தியானம் ,பூஜை, ஆலயவழிபாடு செய்து வருகிறோம்.சாத்வீக தெய்வங்களாகிய சிவன்,விஷ்ணு,புவனேஸ்வரி மற்றும் ஏனைய பெருந்தெய்வங்களை வழிபட்டு  அவர்களின் சக்தி நமக்குள் வர வேண்டும் என்றால்  நமது ஸ்தூல சரீரத்தில் உணவு,தண்ணீர்,கழிவுகள்  இல்லாமல் தூய்மையாக இருந்தால் நல்லது.இதை முன்னிட்டே நமது முன்னோர்கள் வெறும் வயிற்றில் இருந்து  ஆன்மீகப்பயிற்சிகளைச் செய்ய வலியுருத்தியிருக்கிறார்கள்.


இறைவழிபாட்டிற்கு மாத்திரமல்ல தியானம்,யோகம் இவற்றிற்கும் இது பொருந்தும்.ஏனென்றால் தியான மற்றும் யோகம் இவை பிராணன் மற்றும் மனதின் உதவியால் செய்யப்படுவதால் விரதம் அல்லது வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் அதனால் கிடைக்கும் சக்தி அலைகள் முழுமையாய்ப்   பிராண  மற்றும்  மன அடுக்குகளில் தங்கி நமது ஆன்ம உயர்வுக்கு உதவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Friday 5 July 2013

மந்திர ஜபம் 3 - ஸ்ரீ பாலா மந்திரம்





மந்திர ஜபம் 3 :-

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.

சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.

தீட்சை மற்றும் பிரயோக விதிகளை அறியத் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Thursday 4 July 2013

மந்திர ஜபம் 2



மந்திர ஜபம் 2:-

1.க்ஷிப்ர கணபதி :-

ஓம்|கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியங்கள் காலதாமதமின்றி விரைவில் முடியும்.

2.ஹேரம்ப கணபதி:-

ஓம் கூம் நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மனச்சாந்தி உண்டாகும்

3.நிதிகணபதி:-

ஓம் |வக்ரதுண்டாய ஹூம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கும் .தேவைகள் நிறைவேறத் தேவைப்படும் தனம் தடையின்றி வரும் .

4.சங்கஷ்டஹர கணபதி :-

ஓம் |நமோ ஹேரம்ப |மதமோதித|மம சர்வ சங்கஷ்டம் நிவாரய|ஹூம் பட் ஸ்வாஹா||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.இதனை சங்கடஹரசதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி)அன்று ஆரம்பித்து செய்யவேண்டும். வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது அதனால் தோஷம் உண்டாகும்,பல பிரச்சனைகள் வரும்.கிருஷ்ணபரமாத்மாவே அவ்வாறு பார்த்ததனால் பல சங்கடங்களை அனுபவித்தார்.மேற்கண்ட கணபதி வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தியில் செய்து தன மனக்கவலை நீங்கப்பெற்றார்.நீங்களும் இதை செய்து துன்பம் நீங்கிய வளவாழ்வை வாழுங்கள்.

5.கடன் தீர கணபதி வழிபாடு :-

கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.

ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||

ருஊநாசன கணபதி:-    

ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா || 

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு  கடனும் விரைவில் தீரும்.

கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 - 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது  திரும்பசெலுத்தினால் கடன் விரைவில் தீரும்.புதன் கிழமை கடனை திரும்பச்செலுத்தக்கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும்.
கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச்செலுத்த,அடகு வைத்த பத்திரம்,நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் சூழ்நிலை வராது.


6.அர்க்க கணபதி:-

ஒம்|நமோ கணபதயே|அர்க்க கணபதே|வரவரத சர்வஜனம் |மே வசமானய ஸ்வாஹா ||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர சூர்யன் மற்றும் நவக்ரஹ சாந்தி உண்டாகும்.அதாவது நவக்ரகங்களால் உண்டான தோஷம் விலகும்.   

7.அபீஷ்டவரத கணபதி:-

ஓம்|ஸ்ரீம் ஸ்ரீம் கணாதிபதயே |ஏகதந்தாய |லம்போதராய|ஹேரம்பாய|நாளிகேரப்ரியாய|மோதக பக்ஷணாய|மமாபீஷ்ட பலம் தேஹி |ப்ரதிகூலம் மே நச்யது |அனுகூலம் மே வசமானய ஸ்வாஹா||    

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியம் சித்தியாகும்.தொடர்ந்த ஜெபத்தின் பலனாக தொட்ட காரியம் எல்லாம் சிறந்து விளங்கும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday 3 July 2013

மந்திர ஜபம் :1

மந்திர ஜபம் :1

 51 பிரதான கணபதி மந்திரங்கள் இருக்கின்றன அவற்றில் சில பயனுள்ள பிரயோகங்களை காணலாம்.

1.தருண கணபதி :-

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம்| நமோ பகவதே நித்ய யௌவனாய |யுவதி ஜன சமா ச்லிஷ்டாய |கணபதயே நமஹ ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வியாதிகள் யாவும் நீங்கும்.

2.புத்தி கணபதி

ஓம் |ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வாக்குவன்மை ,கல்விகேள்விகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தில் (பள்ளிக்கு அனுப்பும் சமயம்) தேனில் ஜெபித்து நாவில் தடவ நல்ல படிப்பும் ,வாக்குவன்மையும் உண்டாகும்.எழுத்துப்பணி,ரெப்ரசெண்டேடிவ்,ஜோதிடர் போன்ற  வாக்கு        சாதுர்யம் தேவைப்படும் துறையில் உள்ளோர் ஜெபிக்க சிறந்து விளங்கலாம்.


3.சந்தான கணபதி:-

ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.வெண்ணையில் ஜெபித்து தம்பதிகள் உண்டு வர விரைவில் குழந்தைபாக்கியம் உண்டாகும்.கீழ்க்கண்ட மந்திரமும் இதே பலன் தரும்.

4.திருதாரி சந்தான கணபதி:

ஓம் \ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||


5.துர்கா கணபதி:-

ஓம்|ஹ்ரீம் கம் ஹ்ரீம்|தும் துர்கா புத்ராய|சக்தி ஹஸ்தாய ,மாத்ருவத்சலாய |
மகாகணபதயே நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.விளக்கில் துர்க்கையையும்,கணபதியையும் ஆவாஹனம் செய்து மாதுளம்பழம்,அவல் ,பொரி,கடலை,வெற்றிலை,பழம்,பாக்கு வைத்து விளக்கின் பாதத்தில் குங்குமம் போட்டு ஜெபித்து அந்த குங்குமத்தை இட்டு வர துன்பங்கள் விரைவில் நீங்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday 2 July 2013

மந்திர ஜெபம்

மந்திர ஜெபம் :-



தெய்வங்களிடமிருந்து அருள் பெற நாம் ஸ்தோத்திரம், கவசம், நாமாவளி, மந்திரம் இவற்றைச் செய்து வருகிறோம்.நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்புடன் அழைத்தால் எந்தத் தெய்வமும் உடனே வந்து அருள் செய்யும்.நமக்கு அந்த  அளவுக்கு அன்பும் பக்தியும் செய்யத் தெரியாததால் நாம் மேற்காணும் வழிகளைப் பின்பற்றுகிறோம்.அவற்றுள் மிக விரைந்து பலன் தருவது மூலமந்திரங்களே.

மூலமந்திரங்களை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு சில விதிமுறைகள் உள்ளன அவற்றைப் பின்பற்றினால் உயர்ந்த பலன்கிட்டும்.

எல்லாருக்கும் எல்லா மந்திரங்களும் பலிப்பதில்லை.மேலும் தேவையில்லாத
துர்மந்திரங்களை ஜெபிக்காமல் சாத்வீக மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் விநாயக மந்திரத்தைச் சித்தி செய்து கொள்ளவேண்டும்.

எல்லாத் தெய்வ வடிவங்களுக்கும் ஒரு உயர்ந்த தத்துவார்த்த விளக்கம் உள்ளது.

விநாயகருக்கான  விளக்கம்.

1.விநாயகருக்கான தனிப்பெரும் அடையாளம் துதிக்கை.அதன் பொருள் மூச்சு ஆழமாக இழுக்கப்பட வேண்டும்.

2.காதுகள்-வலது காதிலிருந்து இடது காது வரை துதிக்கையையும் சேர்த்து
உற்று நோக்கினால் ஓம்கார வடிவம்.

3.இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்ச இயக்கம்,ஜோதிடம்,வைத்தியம் யாவற்றையும் அறிந்த ரிஷி,சித்தர்கள் யானையான விநாயகருக்கு எலியை வாகனமாக ஏன் வைத்தார்கள் என்பதற்குத் தரும் விளக்கம்.எலி எப்போதும் வெளிச்சத்தில் நடமாடுவதோ,தங்குவதோ கிடையாது.அதுபோல்
மூலாதாரத்திற்கு அதிதெய்வமான  கணபதி எலியின் மேல் அமர்ந்திருப்பது   எலியைப்போல் மனம் இயல்பு நிலையில் அல்லது மூலாதாரச்சக்கரம் செயல்படுகின்றநிலையில் இருள் போன்ற தீய மற்றும் அற்ப விஷயங்களைப் பற்றியே சிந்திக்கவும், செயல்படவும் செய்யும்.எனவே, அதுபோன்ற மாயையில் இருந்து உயர எலியாகிய நம் மனம் கீழேயும்,நம் மூச்சு ஆழமாகவும் இழுக்கப்பட்டு யோக நிலையில் இருந்து நம் வினைக்கு நாமே நாயகனாக இருக்க வேண்டும் என்பதாகும்.


விநாயகருக்கு 51 வகையான வடிவங்கள் உண்டு அதற்கென்றுள்ள  பிரத்யேக மந்திரங்களும் உள்ளன.அவற்றில் சில மந்திரங்களையும்,பலன்களையும் பார்க்கலாம்.


ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

1.ஓம் ||ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ||க்லௌம் கம் கணபதயே|| வரவரத சர்வ ஜனம் மே|| வசமானய ஸ்வாஹா||

மேற்கண்டவாறு இம்மந்திரத்தை 5 இடங்களில் சிறிது நிறுத்தி ஜெபிக்கவும்.இதனைக் கிழக்கு முகமாக அமர்ந்து முதல் நாள் 27 முறை பின்னர் 54,108 என்று இயன்றவரை ஜெபித்துவரவும்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இம்மந்திரத்திற்கு ரிஷி கனக ரிஷி.

மந்திர சாஸ்திரத்தின் உயர்ந்த வித்தையான ஸ்ரீ வித்யையில் இதுவே முதல் உபதேசமாக வழங்கப்பட்டு வருகிறது,மேலும் இதுவே  மந்திர சாஸ்திரத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் கிட்டும் பிரதான பலன் சத்வகுண சுத்தி எனப்படும் எண்ணத்தூய்மை.தேஜஸ்,செல்வம்,சௌபாக்கியம்,மனிதன் உட்பட சர்வ ஜீவராசிகளும் வசீகரம் ஆகி அதாவது எல்லா உயிர்களுடனும் இணக்கமான உறவு கொண்ட நல்வாழ்வு கிடைக்கப்பெறும்.

இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பது 100 % பலன் தரும்.அல்லது இளஞ்சூரியன் உள்ள நேரத்திற்குள் ஜெபிப்பது நலம்.வசதி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கையில் ஜெபிக்கலாம்

சித்தி பெற்ற குருவிடம் மந்திரங்களை முறைப்படி உபதேசம் (தீட்சை) பெற்று வழிபாடு பற்றிய போதுமான விஷயங்களைத் தெரிந்து
ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

ஆன்மீக வாழ்வு


                                                    குரு வாழ்க குருவே துணை 
மந்திர ஜபம்:-

காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்குப் பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டுமுறை பற்றி.

இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.
பல்லாயிரம் ஞானியரை,சித்தமஹா புருஷர்களையும்,இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்றுவிக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம் .

ரிஷிகள்,முனிவர்கள்,சித்தர்கள்,ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்தக் கடல் நீரைப் பருகியவர்கள்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அந்தக் கடலைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.நமது ஞானப்பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மானுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை அடையலாம்.

ரிஷி என்ற வார்த்தையின் பொருள் ''மந்திர த்ரஷ்டா '' அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக்கருணையால் அதை உணர்ந்தவர்கள்.மனிதகுலத்திற்கு உணர்த்தியவர்கள்.

எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட.அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்
கொண்டால் உள்ளபடியே சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும்,செல்வமும் மட்டும் இறை வழிபாட்டின் பயன்களல்ல.படைப்புகளில் எல்லா  ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம்  அளிக்கப்பட்டவன்.
ஏனென்றால் ,எந்த மரமும்,விலங்கும்,பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.மனிதன் மட்டுமே நல்லவன்,கெட்டவன்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,யோகி,ஞானி,மகான் என்று   தான் விரும்பியபடி வாழவும் ,விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும் வல்லவன்.அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட.      

இன்று நாம் வழிபட்டு வரும் தெய்வங்களுள் சிலர் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள்தான்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072