Wednesday 27 September 2017

தீமைகளை நீக்கும் எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்


1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து  தீமைகள் விலகும்.


2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் நிறமாக இருந்தாலோ உங்களுக்கு மாந்த்ரீக ரீதியாக ஏதோ தீமை செய்யப்பட்டுள்ளது அல்லது அதிகமான கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்து கொள்ளவும்.

3.ஹனுமான் சிலை அல்லது படத்தின் முன் ஒரு விளக்கேற்றி 2 கிராம்பு எடுத்து அதை அந்த தீப ஜோதியில் எரித்து விடவும்.அதன் பின் ஹநுமானுக்கு தூபம்.தீபம் காட்டவும்.

4.முக்கியமான காரியமாக வெளியில் செல்லும் பொழுது,வீட்டின் தலை வாசலில் கருப்பு மிளகு கொஞ்சம் வைத்து அதை மிதித்த பின் வெளியில் கிளம்ப காரிய சித்தியாகும்.

5.கொஞ்சம் கருப்பு மிளகு,கொஞ்சம் பணம் அல்லது நாணயங்களை வைத்து ஒரு கருப்புத் துணியில் வைத்துக் கட்டி அதை யாருக்காவது தானமாகக்  கொடுத்து விடவும்.இதனால் சனீஸவர பகவானால் ஏற்படும் தோஷங்கள், கெடுபலன்கள் குறையும். 


6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்லவும்.


7.ஐந்து அல்லது அதற்கு அதிகமாகவோ ஊதுவத்தி ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை ஜெபித்தபடி வீடு அல்லது அலுவலகத்தின் 4 திசை மற்றும் 4 மூலைகளிலும்,வானை நோக்கியும் பூமிக்கும்  என 10 திசைகளிலும் காட்டி வர துஷ்ட சக்திகள் ,கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.

   
நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072


Friday 15 September 2017

கணவன் மனைவி அன்புடன் வாழ உதவும் காமதேவன் மந்திரம்


இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஜெபித்து வரவும்.

தினமும் சுக்ர ஹோரையில் ஜெபித்து வர விரைவான,நிறைவான பலன் கிடைக்கும்.

வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும்.

கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

சந்தனத்தை ஓம் க்லீம் காமதேவாய நம  என்று 3 தடவை ஜெபித்து குழைத்து நெஞ்சிலும் நெற்றியிலும் அணிந்து கொள்ளவும்.

ஓம் க்லீம் காமதேவாய நம  என்று 3 தடவை ஜெபித்துக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்ளவும்.

சிவாலயத்தில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து ஜெபித்தால் விரைவில் பலிதமாகும்.

ரதி மன்மதன் படம் வைத்து அதன் முன் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் காமதேவன் யந்திரம் வைத்து அதன் மேல் நெய் விளக்கேற்றவும்.யந்திரம் வைக்க இயலாதவர்கள்,குங்குமத்தால் க்லீம்
என்று எழுதி  அதன் மேல் நெய் விளக்கேற்றவும்.

முடிந்தால், ரதி மன்மதன் படத்தின் அருகில் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் குங்குமத்தால் க்லீம்  என்று எழுதி  அதன் மேல் தம்பதிகள் போட்டோ ஒன்றை வைத்து ஜெபிக்கலாம்.

-------------------
ஆண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும் 

ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பத்னி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய  ஸ்வாஹா ||  

-----------------------------
பெண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும் 

ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பதி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய  ஸ்வாஹா ||
----------------
வெள்ளிக்கிழமை அன்று பகல் 6 முதல் 7 மணிக்குள் அல்லது இரவில் 8 முதல் 9 மணிக்குள் நெய்விளக்கேற்றி, அந்த தீபத்தில் ரதிதேவியையும், மன்மதனையும் எழுந்தருள வேண்டிய பின் இம்மந்திரத்தை ஜெபித்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து வரவும்.


நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072


Monday 11 September 2017

காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்



ஏதேனும் குறிப்பிட்ட காரியத்தில் அல்லது எடுத்த காரியங்களில் எல்லாம் தடைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் காலையில் 108 தடவை ஜெபித்து வர அவர்களது காரியங்கள் யாவும் இறையருளால் தடையின்றி நடந்தேறும்.

வளர்பிறை வியாழன் ,ஞாயிறு அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

முதல் நாள் அவள்,பொறிகடலை,தேங்காய்,வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் உங்களால் இயன்றதைப் படைத்து வழிபடவும்.

மந்திரம் :-

ஓம் க்லௌம் கம் கணபதயே மம வாஞ்சித கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா


OM GLOUM GAM GANAPATHAYE MAMA VAANCHITHA KAARYA SIDDHI KURU KURU SWAHAA


நன்றி.வாழ்கவளமுடன் .


M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
 MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072