Tuesday 28 October 2014

கலைகளில் தேர்ச்சியும்,வாழ்வில் உயர்வும் தரும் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் :-







மந்திரசாஸ்திர நூல்களில் உயர்ந்த ஒன்றான மந்திர மகோததியில் இந்த மந்திரம் உள்ளது.ஸ்ரீ ராஜமாதங்கி தேவியின் 1000 திருநாமங்களில் ஒன்றே உச்சிஷ்ட சாண்டாளி. 

இம்மந்திரத்தை ஜபம் செய்து வர வாக்கு பலிதம்,கல்வி,கலைகளில் உயர்வு, சர்வ வசீகரம்,சகலகலா பாண்டித்தியம்,சங்கீதத்தில் மேன்மை,பதவி உயர்வு,நிர்வாகத்திறமை கிட்டும். 


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை,சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.

ஜோதிடர்கள்,மாணவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்கள் இம்மந்திர ஜபத்தினால் நிச்சயம் உயர்வு அடைவார்கள். 

வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்வு செய்து ஜெபத்தைத் தொடங்கவும்.தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்து வரவும்.கிழக்குத் திசை நோக்கி ஜெபிக்கவும்.யந்திரத்திற்கு 108 தடவை மூலமந்திர ஜபம் செய்து அட்சதை அல்லது வெண்ணிற பூக்களால் அர்ச்சிக்கவும்.15 நாட்களுக்கு மேல் மந்திரத்தின் சக்தி வெளிப்படத் தொடங்கும்.     


புதன்,வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை  108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள்,குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.


இம்மந்திரத்தை வெறுமனே ஜெபிப்பதை விட ஸ்ரீ ராஜமாதங்கி யந்திரம் வைத்துப் பூஜித்து ஜபம் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.

மந்திரம் :-

ஓம்|
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் |
நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
ஸ்ரீ மாதங்கீச்வரி |
ஸர்வஜன வசங்கரி ஸ்வாஹா ||



வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com





Thursday 23 October 2014

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்





களத்திர தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும்,       ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.


உமாமகேஸ்வரி  பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன் பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.

ஸ்ரீ ஸ்வயம்வர கலா மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் யோகினி  யோகினி |
யோகேஸ்வரி யோக பயங்கரி|
ஸகல ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||

வளர்பிறையில் திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத    நல்ல நாளாகப் பார்த்து சங்கல்பம் செய்து  நைவேத்யங்கள் படைத்து  விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து  108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள் ஜெபம் செய்து வரவும்.விளக்கின் பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த பின்னர் அதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும் ஹோமம் செய்து கொள்ள நிறைவான பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள் ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு         விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள  விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம் ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.

ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.             




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com

Wednesday 15 October 2014

ஆன்மீகத்தில் உயர்வும் நோய் தீர்க்கும் சக்தியும் தரும் ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்


மும்மூர்த்தி ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதூத சத்குருவாவார். யோக மற்றும் ஞான நிலையில் உயர்வு பெற விரும்புபவர்கள் ,ஆன்மீக,தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இவரை வழிபட்டு வர ஆன்மீகப்பாதையில் நிறைவான விரைவான முன்னேற்றம் காணலாம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ   



இந்த மந்திரத்தைக் வடக்கு நோக்கி அமர்ந்து பிரம்ம முஹூர்த்தம் அல்லது இரவு 11:30 முதல் 12:30 மணிக்குள் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர விரைவில் சித்தியாகும்.   

ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்ற வைத்திய முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் வைத்தியத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும்  இந்த மந்திரத்தை ஜெபித்து வர அவர்களின் குணமளிக்கும் சக்தி அதிகரிக்கும் நோயாளிகளின் வியாதி நமக்குப் பரவாமல் காக்கும். 


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com



Tuesday 14 October 2014

மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்

                                                    
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.

உதாரணம் :-

விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான்  - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான்  - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம்.  (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)  

பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு.  எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.



மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது  மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக்  குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு  என்று  மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி  எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.

குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகஸ்தியர் சாபம் நசி நசி 
பதினென் சித்தர் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி  
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 
   

 பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து    சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன்  இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும்  மூலிகையை   விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-

ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா 




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com