Monday 20 February 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 26.02.2017 அன்று


சித்தர்களை ,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றி கவலைகள்,வறுமை,கடன் இல்லாமல் சர்வ ஐஸ்வர்யத்துடன்  வாழ உதவும் ஆன்மீக ரகசியங்களைப் பயிற்சி அளிக்க உள்ளோம்.

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.


பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :

1.கர்ம வினையின் இயக்கமும்,அதைக் கடக்கவும்,தீர்க்கவும்
சித்தர்கள்,மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் நிறைவான
செல்வமும்,செல்வாக்கும் பெற்று வாழவும், வேலை மற்றும்
தொழிலில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.நமக்குப் பிடித்தபடி வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய
வேண்டிய பயிற்சிகள்.

4.அதீத காமம்,கோபம்,மந்தபுத்தி,தள்ளிப் போடும் குணம்
மற்றும் எந்தத் தீய குணங்களையும் சரி செய்யும் வழிகள்.

5.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின்
சர சாஸ்திர ரகசியங்கள்.

6.தொடர்ச்சியான காரியத்தடை,முன்னேற்றமின்மை நீங்கி
சகல காரியமும் சித்தியடைய உதவும்  வழிமுறைகள்.

7.குலதெய்வம்,அதிர்ஷ்ட தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின்  உத்தரவாதமான அருள் உதவி பெற உபாசனை ரகசியங்கள்.

8.குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாழ்வில் அவசியமான
தேவைகளை நிறைவேற்றும் தெய்வ வழிபாடுகள்.

9.மந்திர ஜெபத்தால் கிடைக்கும் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும்,அதனால் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

10.உடனடியாகப் பலன் தரும் மேற்கத்திய மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்படும் மந்திரங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்.

11.எதிரிகளாலும்,எந்தத் தீய சக்திகளாலும் எந்தவிதமான தீங்கும்
நேராமல் காத்துக் கொள்ள உதவும் தெய்வ ரகசியங்கள்.

12.தவறான மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களிடம் சிக்காமல்
சுபதெய்வங்களின் உதவியால் நம் பிரச்சனைகளை நாமே சரிசெய்து
கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகள்.


வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை
அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி :     26.02.2017
பயிற்சி நேரம்:    காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : தச்சநல்லூர் ,திருநெல்வேலி
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர்.


பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் விபரம் மற்றும் பயிற்சிக்                           கட்டணம் பற்றிய விபரங்களைக் கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

9442193072
9788493072



பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, நோட்டு,பேனா,பயிற்சிப் புத்தகம் வழங்கப்படும்.

----------------------------------------------------------


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072 
ms.spiritual1@gmail.com 

Friday 10 February 2017

ஸ்ரீ பஞ்ச முக ஹனுமான் மந்திரங்கள்

  


ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களை அழிக்க ராவணன் செய்ய இருந்த கொடிய யாகத்தை அழிக்கத் தனது சக்தியுடன் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கருடர், ஸ்ரீ வராஹர்,ஸ்ரீ ஹயக்ரீவர் என்ற நான்கு தெய்வ ரூபங்களின் ஆசியையும்,அவர்களின் முகத்தையும் ஒருங்கே பெற்று ஐந்து முகங்களுடன் அவதரித்த வடிவம் தான் ஸ்ரீ பஞ்சமுக ஹனுமன்.

ஸ்ரீ ராகவேந்திரருக்கு இவர் ப்ரத்யக்ஷமாகக் காட்சியளித்து அருளினார்.

இந்த பஞ்சமுக ஹனுமான் உபாசனை மிக வலிமையானது.  விரைவான,நிறைவான பலன்களைத் தரவல்லது .

ஒவ்வொரு முகத்திற்கென்று தனிப்பட்ட மந்திரங்களும், திசையும், பலன்களும் உள்ளன.அவற்றை வரிசையாக ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம் .


1.ஹனுமன் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - கிழக்கு
பலன் - எதிரிகளின் தொல்லைகள் தீரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும்.  

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பூர்வ கபிமுகே | 
சகல சத்ரு ஸம்ஹரணாய ஸ்வாஹா ||

  

2.நரசிம்மர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -தெற்கு 
பலன் - பயம்,பேய்,பிசாசு,பில்லி,சூனியம்,ஏவல்,முனி,தோஷங்கள் போக்கும்.

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | தக்ஷிணமுகே கராளவதனாய | நரஸிம்ஹாய | சகல பூத பிரேத ப்ரதமனாய ஸ்வாஹா || 



3.கருடர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -மேற்கு 
பலன் - நோய்கள்,தோல் வியாதி,தீராக் காய்ச்சல்,சர்ப்ப தோஷம்,விஷ ஜந்துக்களால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும்.

மூலமந்திரம்:-
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பச்சிம முகே கருடாய |சகல விஷஹரணாய ஸ்வாஹா ||



4.வராஹர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - வடக்கு  
பலன் - சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | உத்தர முகே ஆதி வராஹாய |சகல சம்பத்கராய ஸ்வாஹா ||



5.ஹயக்ரீவர் முகத்திற்கான  மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை - மேலே பார்த்த படி உள்ள முகம்  
பலன் - சகல ஜன வசீகரம்,வாக்குவன்மை,நினைவாற்றல்,
வித்தைகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | ஊர்த்வ முகே ஹயக்ரீவாய | சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ||



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com