Tuesday 24 June 2014

செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்

இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப்  போற்றி வழிபடப்படுகிறாள்.

மந்திர சாஸ்திர நூல்களான மந்திர மகாநிதி,குலார்ணவ தந்திரம் ,தத்த சம்ஹிதை முதலான எல்லா புகழ்பெற்ற நூல்களும் இவளை உயர்வாக குறிப்பிடுகின்றன.ஒவ்வொரு குறிப்பிட்ட பயனுக்கும் ஒரு தெய்வத்தை வணங்குவோம் ஆனால் இவளை வழிபட கல்வி,செல்வம்,வீரம்,என யாவும் கிட்டும்.இவள் ஒரு தெய்வமே .

இவளை உபாசிக்க இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது.பூர்வ ஜன்ம புண்யம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும்.
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தின் போது அவர்களது குரு வசிஷ்டர் :- "இந்த உலகத்தில் செல்வம் இல்லாதவன் உறவினர்களால் கூட மதிக்கப்படமாட்டான் .உயர் புகழும் செல்வமும் பெற புவனேஸ்வரி வழிபாடே ஆகச் சிறந்தது.இவளை வழிபடுபவனும் அவன் தலைமுறைகளும், வறுமையைக் காணமாட்டார்கள் " என ஸ்ரீ ராமனிடம் கூறினார்.ராம ராஜ்ஜியம் செழிப்புடன் விளங்க ராமரின் புவனேஸ்வரி வழிபாடே காரணம்.

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா துவாரகா நகரத்தைப் பெற உதவியதும் இவளை வழிபாட்ட பயனே .

எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.

நமது பூமியைப்போல் 224 உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி.புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

இவள் ரிஷிகளாலும்,தெய்வங்களாலும் பூஜிக்கப்படுபவள்.

இந்த மந்திர ஜெபத்தை பௌர்ணமி அன்று தொடங்கவும்.மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி  உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

நெய் விளக்கேற்றி  விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து ,வாழையிலையில் பச்சரிசி பரப்பி  அதில்  புவனேஸ்வரி யந்திரம் வைத்து  அந்த யந்திரத்தை குங்குமம்,ரோஜா இதழ்கள்  மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து  3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும்.இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும்.பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம்,பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.

இந்த ஜப முறை கலியுகத்தில் விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.

மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||

கடை,அலுவலகம் இவைகளில் ஹ்ரீம் என்ற மந்திரம் மேலே வரும்படி பெயர்பலகை வைக்க ,விசிட்டிங் கார்டிலும் மேலே ஹ்ரீம் என்று வரும்படி அடித்து விநியோகிக்க தொழில் அபிவிருத்தி,ஜன ஆகர்ஷணம்,தன ஆகர்ஷணம்  உண்டாகும்.தொழில் ஸ்தாபனங்கள் ,வீடு ,கடை இவற்றின் வாசலில் மஞ்சளால் ஹ்ரீம் என்று எழுதி அருகில் ஒரு ஸ்வஸ்திக் வரைந்து  வைக்க திருஷ்டி,எதிரிகளும் தீய எண்ணம் போன்றவை வேலை செய்யாது மேலும் அனேக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.


இது போக புவனேஸ்வரி மந்திரத்தின் முன்னும் பின்னும் அனேக பீஜங்களைச் சேர்த்துப் பல காரியங்களுக்கு ஜெபிக்கும் பிரயோக முறைகள் உள்ளன.அவற்றை விளக்கினால் பக்கம் அதிகமாகும்.


புவனேஸ்வரியை வழிபட விருப்பம் உள்ளவர்கள் உபதேசம் (தீக்ஷை) பெற்று ஜெபிப்பது சிறப்பு.


புவனேஸ்வரி பீஜம் வரையப்பட்ட யந்திரத்திற்கு மல்லிகை மலர்களால் புவனேஸ்வரி பீஜத்துடன் கூடிய சஹஸ்ரநாமங்களால் அர்ச்சனை செய்து அவள் பீஜ மந்திரத்தை 1008 ஆவர்த்தி ஜெபித்து அந்த யந்திரத்தை இடது கையில் கட்டிக்கொள்ள  கொடிய தரித்திரம் ,வறுமை ,நோய் இவற்றுடன் எப்போதும் துன்பங்களையே சந்தித்துவருவோரின் துயரங்களும்  நீங்கும்.


வேதம்,மந்திர சாஸ்திரத்தில் உள்ள யாரும் எளிதில் வெளியிடாத மறைக்கப்பட்ட பல பயனுள்ள மந்திரங்களை யாவரின் நலம் வேண்டியும் வெளியிடுகிறேன்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
9442193072 / 9788493072 

Monday 23 June 2014

அழகு ,மனஅமைதி தரும் ஸ்ரீ சந்திரபகவான் மந்திரம்:-



திங்கள் கிழமைகள் தோறும்  ( நான்காம்பிறை நாள் தவிர ),மற்றும் பௌர்ணமி தோறும் இரவில் 8 முதல் 9 மணிக்குள்  ஸ்ரீ சந்திர பகவானை வணங்கி தீபம்,தூபம் காட்டி வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை  கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை  அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர அழகு கூடுவதுடன் ,மன அமைதி கிட்டும் ,அதிகம் கோபம் கொள்பவர்கள் சாந்த குணம் பெறுவர் . பார்வதி தேவியின் அருளும்,மஹாலக்ஷ்மியின் அருளும்  உண்டாகும்.முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.

மந்திரம்:

ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ ||



வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9788493072

Sunday 22 June 2014

தொழில் விருத்திக்கு ஸ்ரீ பகளாமுகி மந்திரம்



ஓம் ஐம் ஹ்லீம்|
வியாபார விருத்திம்|
ஹ்லீம் ஐம் ஓம் ||

ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு முகமாக  விளக்கேற்றி மேற்கு நோக்கி அமர்ந்து விளக்கின் முன்னால் மஞ்சள் பட்டுத்துணி வைத்து விளக்கிற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி 18 தடவை மஞ்சள் அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும்.பின்னர் மஞ்சள் பட்டுத்துணியில் மஞ்சளால் (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) கீழ்நோக்கிய முக்கோணம் ஒன்று வரைந்து அதனுள் ஹ்லீம் என்று எழுதி முக்கோணத்தின் மூலைகளிலும் நடுவிலும்  குங்குமம் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயும் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபித்து மஞ்சள்  துணியில் தேங்காயை முடிந்து கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் முதலாளி அமரும் இடத்தில் உள்ள விளக்கின் அருகில் வைக்க எதிரிகளின் தொல்லை,திருஷ்டி இவை நீங்குவதுடன் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.


வெள்ளி,செவ்வாய்,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் செம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீடு ,கடை,அலுவலகங்களில் தெளிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday 16 June 2014

வீட்டில் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்


மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வடகிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரைத்  தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்குத் திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளைச்  சொம்பில் அல்லது டம்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாகப் படுக்கை அறை அல்லது சமையல் அறைச் சுவர்களில் உள்ள அலமாரிகளைப் பூஜை அறையாகப் பயன் படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி  
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

திருஷ்டி பரிகாரங்கள்



ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com


Saturday 14 June 2014

ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு



ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு 

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே  ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும்.ஞானம்,மோக்ஷம்,நற்குணங்கள் தரும்.(க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.   


ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே.அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக  இயற்றப்பட்ட கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு.சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.


தத்தாத்ரேயர் வழிபாடு யோகிகளால் அதிகம் பின்பற்றப் பட்டு வருகிறது. விரைவில் பலன் தரக் கூடியது.

தத்தாத்ரேயரை உபாஸிக்க விரும்புவோர்  ஒரு குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று உபாசனை விதிகளை நன்கு அறிந்து ஜெபிப்பதே உயர்வுக்கு வழி.


ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

பொருள்: மாலை,கமண்டலம் ,உடுக்கை, ஈட்டி ,சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும்  அத்ரி மகரிஷியின் மகனுமான                           ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.


ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி 

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய  தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.


ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.



2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில்  இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.


தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி  இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை  வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக்  குடியேறுபவர்கள்  யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட  நன்மை உண்டாகும். 


இதை செய்யும் சித்தி செய்த உடல்கட்டு மந்திரம் போட்டுக் கொள்ளவும்.



முற்பிறவிப் பாவவினைகள் தீர, கர்மவினையின் பதிப்பால் தீராவியாதி,வறுமை நீங்க :-

அத்ரி புத்ரோ மஹாதேஜ தத்தாத்ரேயோ மஹாமுனியே |
தஸ்ய ஸ்மரண மாத்ரேன சர்வபாபை ப்ரமுச்யதே ||

இந்த மந்திரத்தை தினம் ஜெபிக்க நன்று .ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்கப்  பன்மடங்கு பலன்தரும்.


சித்த புருஷர்களாக ,யோகிகளாக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து வர உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடையலாம்.

1.ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயாய நமஹ |

2.ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ||



ஸ்ரீ தத்தாத்ரேயரைத்  தரிசிக்க :-

யதுகுலோ வனிகம் வௌஷட் ||

இந்த மந்திரத்தை இரவில் படுக்கையில் அமர்ந்தபடியே ஜபித்து வர ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்கலாம்.



சந்தானபாக்கிய ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:     

தூரிக்ருத பிஸாச்சார்த்தி  ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|
யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||

இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குருஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.


குருவிடம் தீட்சை பெற்று உபாசனை விதிகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு ஜெபிக்க ஜபம் சித்திக்கும்.


வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்|||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
9442193072 / 9788493072

Sunday 8 June 2014

காயத்ரி மந்திரங்களும் பயன்களும் 1




ஓம் |
பூர் புவ ஸுவஹா |
தத் சவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோனஹ ப்ரசோதயாத் ||

இது வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் மந்திரம்|| இதை ஒரு குருவிடம் முறைப்படி சாபநிவர்த்தி செய்து உபதேசம் பெற்றுத்தான் ஜெபிக்கவேண்டும்.

இது தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரங்கள் .உள்ளன.அவற்றிற்கு மேற்கண்ட நியமங்கள் தேவை இல்லை.யாவரும் ஜெபிக்கலாம்.அசைவம்  சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும் .

1.ஸ்ரீ மஹாகணபதி காயத்ரி மந்திரம்

ஓம் ஏகதந்தாய வித்மஹி |
வக்ரதுண்டாய தீமஹி |
தன்னோ தந்தி ப்ரசோதயாத் ||

இதை ஜெபித்து வர காரியத்தடைகள் நீங்கும்.எல்லா வளமும் நலமும் அமையும்.குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை ஜெபித்து கணபதியை வேண்டிச் செல்ல காரிய சித்தி கிட்டும்.கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை ஜெபித்துக் கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமை ஜெபிக்கத்  தொடங்கலாம்.


2.ஸ்ரீ ஷண்முக காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே |
மஹாசேனாய தீமஹி |
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத் ||


எதிரிகளின் தொல்லை நீங்கும்,அடிக்கடி பில்லி,சூனியம் ,திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஜெபித்து குங்குமம் அணிந்து வர பாதிப்புகள் ஏற்படாது.சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

3.ஸ்ரீ விஷ்ணு காயத்ரி 

ஓம் நாராயணாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி |
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் ||

செல்வம்,செல்வாக்கு,வசீகர சக்தி உண்டாகும்.

4.ஸ்ரீ சிவ காயத்ரி
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே |
மகாதேவாய தீமஹி |
தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ||

மங்களம் ,வீரம்,தைர்யம் ,ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்

5.ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் சதுர்முகாய வித்மஹே |
ஹம்சாரூடாய தீமஹி |
தன்னோ பிரம்ம ப்ரசோதயாத் ||

ஞாபகசக்தி,வாக்கு சித்தி ,படைப்பாற்றல் உண்டாகும்.

6.ஸ்ரீ ராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே |
சீதா வல்லபாய தீமஹி|
தன்னோ ராம ப்ரசோதயாத் ||

நன்னடத்தை ,நிதானம் ,ஹனுமன் அருள் உண்டாகும்.

7.ஸ்ரீ கிருஷ்ண  காயத்ரி

ஓம்  தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய  தீமஹி|
தன்னோ  கிருஷ்ண ப்ரசோதயாத் ||

சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம்  உண்டாகும்.


8.ஸ்ரீ இந்திர காயத்ரி
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே |
வஜ்ரஹஸ்தாய தீமஹி|
தன்னோ இந்திர ப்ரசோதயாத் ||

சகல விதமான மாந்திரிக,மனோரீதியான ,திருஷ்டி முதலான பாதிப்புகள் நீங்கும்.

9.ஸ்ரீ ஹனுமன் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே |
வாயுபுத்ராய தீமஹி|
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் ||

வீரியம்,தைர்யம்,புலனடக்கம்,சகலகலா பாண்டித்யம்,எடுத்த செயலைத்  திறம்படச் செய்யும் தன்மை உண்டாகும்.

10.ஸ்ரீ சூர்ய காயத்ரி

ஓம் பாஸ்கராய வித்மஹே |
திவாகராய தீமஹி|
தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ||

பார்வைக்கோளாறு,பித்ரு தோஷம் நீங்கும்.மேலாண்மைத்திறன்,பதவி உயர்வு,அரசு வேலை கிடைக்கும்.மிகுந்த மந்த புத்தி,மந்தமாக செயல்படுபவர்கள் தொடர்ந்து ஜெபித்து வரச் செயல்வேகம் உண்டாகும்.

11.ஸ்ரீ சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே |
ஹேமரூபாய தீமஹி|
தன்னோ சந்திர ப்ரசோதயாத் ||

நிம்மதி, அமைதி,அழகு,மனோசக்தி கிட்டும். அதிகம் கோபப்படுபவர்கள் இதை ஜெபித்து வரக் கோபம் குறையும்.இதை ஜெபித்துக் குங்குமம்,அல்லது மஞ்சள்  அணிந்து வர அழகு கூடும்.

12.ஸ்ரீ யமதர்மராஜா காயத்ரி

ஓம் காலரூபாய வித்மஹே |
தண்ட தராய தீமஹி|
தன்னோ யம ப்ரசோதயாத் || 

மரணபயம் நீங்கும்,அகால மரணம் ஏற்படாது.தொடர் விபத்துக்கள் ஏற்படாது தடுக்கும்.


13.ஸ்ரீ வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் || 

எண்ணம்,சொல்,செயல் இவற்றில் மென்மையாகச் செயல்படும் குணம் உண்டாகும்.பலரும் ஒன்று கூடி வருண திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து மழைபெய்ய வேண்டினால் மழை வரும். 

14.ஸ்ரீ  அக்னி காயத்ரி

ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே |
அக்னிதேவாய தீமஹி|
தன்னோ அக்னி ப்ரசோதயாத் || 

பெண்கள் குளித்து முடித்து சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது.ஹோமம் செய்ய நெருப்பு உண்டாக்கும் பொழுது இதை ஜெபிக்கலாம்.விளக்கு ஏற்றும் பொழுதும் இதை ஜெபிக்கலாம்.

வாழ்க வையகம் ||  வாழ்கவளமுடன் ||

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Friday 6 June 2014

மனம் அடங்க,தியானம் சித்திக்க உதவும் மந்திரம்:-



முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து நீர்  அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும்.தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ,ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி இந்த மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும்.

தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும்.அனுபவித்துப் பாருங்கள்.

மந்திரம்:-

ஓம் நமோ பகவதே |
மஹாபல பராக்ரமாய|
மனோபிலஷிதாம் |
மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072