Sunday 18 October 2015

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்




ஏதேனும் வழக்கில் சிக்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பிரயோகத்தைச் செய்யவும்.தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் காரிய வெற்றி கிடைக்காது மேலும் தெய்வ நிந்தனை ஏற்படும்.


ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
இரவில் 8 மணிக்கு மேல் விளக்கேற்றி  அதில் ஸ்ரீ காளிதேவியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டி உங்கள் கோரிக்கையை முன்வைத்து செந்நிறப் பூக்களால் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து அர்ச்சிக்கவும்.
முதல் நாளும் 11 வது நாளும் வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும் மற்ற நாட்களில் வெற்றிலை,பாக்கு,பால்,பழம் மட்டும் வைத்து மந்திரம் ஜெபித்து வழிபடவும்.இவ்வாறு  தொடர்ந்து 11 நாட்கள் செய்யவும்.
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.தினமும் திரியை மாற்ற வேண்டும்.முந்தைய நாள் பயன்படுத்திய திரியை ஒரு வெள்ளி அல்லது பித்தளை குங்குமச்சிமிழில் போட்டு வைக்கவும்.11 நாட்கள் முடிந்த பின் 12 ஆம் நாள் இரவில் எல்லாத்  திரிகளையும் போட்டு வைத்த குங்குமச்சிமிழை மூடி செந்நிரப்பூ பூக்கள் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அர்ச்சிக்கவும். பின் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி நின்று 3 தடவை  மந்திரம் ஜெபித்து ஸ்ரீ காளிதேவியை வழக்கில் வெற்றி தரவேண்டி  குங்குமச்சிமிழில் உள்ள எண்ணையைக் கொஞ்சம் எடுத்துப் புருவத்தில் தடவி வரவும். எதிரிகளால் தொல்லை நேராது.வழக்கிலும் வெற்றியுண்டாகும்.இதை வெளியில் எல்லோரிடமும் சொல்லாமல் ரகசியமாய்ச் செய்யவும்.

மந்திரம் :
ஓம் க்லீம் பீஜ ரூபிண்யை மஹாகாளிகாயை க்லீம் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Friday 16 October 2015

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்

ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில்  வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.



இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்,உண்டான நஷ்டம் நீங்கவும் வேத பரிகாரம்


வளர்பிறையில் உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து அதிகாலையில் ஆலமர வேர் ஒரு சிறு துண்டு எடுத்துக் கொள்ளவும்.வீட்டிற்குக் கொண்டு வந்து பஞ்சகவ்ய அல்லது பன்னீர் விட்டுக் கழுவி வைத்துக்கொள்ளவும்.ஒரு வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு நூல் வாங்கி செஞ்சந்தனக் கட்டையை உரைத்து  அதை அந்தப் பட்டு  நூலில் தடவி தொழில்,வியாபார ஸ்தாபனங்களில்  வாசலில் கட்டவும்.பலரால் பயன்படுத்தி வெற்றி கண்ட இம்முறையைப் பின்பற்றி நீங்களும் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.   

குறிப்பு:மரத்தின் தெற்கு பக்கம் உள்ள வேரை மட்டும் எடுக்கக் கூடாது.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com