Thursday 26 February 2015

கனவில் தீர்வுகள் சொல்லும் ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி மந்திரம்



இதை ஒரு அமாவாசை அன்று ஜெபிக்கத் தொடங்கவும்.ஒரு புது விளக்கு வாங்கி (அகல் விளக்கு அல்லது எந்த விளக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.) அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும். குறைந்தது 108 தடவை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் .மந்திர ஜெபத்தின் எண்ணிக்கை கூடக்கூடச் சிறப்பான பலன் கிடைக்கும். 90 நாட்கள் ஜெபித்து வரவும்.ஜெபம் செய்யும் முன் விளக்கின் அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் அல்லது ஒரு ஏலக்காய் போட்டு  நீர் வைக்கவும்.ஜபம் முடிந்ததும் அந்த நீரைக் குடித்து விடவும். அவரவரது பூர்வ ஜென்ம புண்ணிய பலனைப் பொருத்துச் சிலருக்கு முன் பின்னாகப் பலிக்கும்.

முதல் நாள் பச்சைக் கற்பூரம், தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால், வெற்றிலை,பாக்கு, பழங்கள், பலகாரங்கள் வைத்து ஜெபிக்கவும்.மல்லிகை,பிச்சி அல்லது தாமரை இதழ்களால் மந்திரத்தை 27 தடவை  ஜெபித்து விளக்கின் பாதத்தில் பூவைச் சமர்ப்பிக்கவும்.

அடுத்து வரும் நாட்களில் வாழைப்பழம், கற்கண்டு மட்டுமாவது படைக்கவும்.அசைவம் தவிர்க்கவும்.

முதல் நாளைப் போல் 90 வது நாளும் சிறப்பாக நைவேத்யம் படைத்து பூஜிக்கவும்.



ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி தேவி மந்திரம் :-

ஓம் நம ஸ்வப்ன சக்ரேஸ்வரி |
ஸ்வப்னே அவதர அவதர |
கதம் வர்த்தமானம் கதய ஸ்வாஹா ||


                                    வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072  / 9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com        

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்




இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம் 

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.   


மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா || 


வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

வியாபாரம்,தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்




வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-   

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ || 

வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Thursday 19 February 2015

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்




உங்கள்  ஜாதகத்தில் ஏதாவது கிரகதோஷம் இருந்தாலோ, அல்லது தற்சமயம் நடக்கும் தசா புத்திகளால் பாதிப்பு இருந்தாலும் அந்த பாதிப்பைத் தரும் கிரகம் எதுவோ அதற்கான பரிகாரத்தைச் செய்து வர பாதிப்பு குறையும்.


இவை யாவும் அதிகச் செலவு இல்லாத எளிய பரிகாரங்கள்.


1.சூரியபகவான்  - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை  செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான்  -   வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான்  -   தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப்  பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின்   கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின்  கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான்  - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான  கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான்  - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான்  -  ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான   கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday 15 February 2015

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்





1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.  



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 12 February 2015

செரிமானக் கோளாறு போக்கும் மந்திரம்


தற்காலத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதாலும் ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட உணவுகள் உண்பதாலும் நம்மில் பலருக்கு உண்ட உணவு சரிவர செரிமானம் ஆவதில்லை.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் வயிற்றில் வலது கையை வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபிக்க உணவு விரைவில் செரிமானமாகும்.

மந்திரம் :-

நம சர்வ பூதாதிபதயே ஹும் பட் ஸ்வாஹா ||



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


                                 எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.        



சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||


                        வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்





1.முடிந்த நாட்களில் ஒரு இரும்புப் பாத்திரத்தில் பால் கலந்த நீரை வைத்துக் கொண்டு அதை அரச மரத்தின் நிழலில் நின்று மர வேரில் விட்டு வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------
2.அமாவாசை அன்று ஆறு அல்லது கடற்கரையில் இதைச் செய்யவும். மூன்று தேங்காய் ,1 கிலோ நிலக்கரி எடுத்துகொண்டு அவற்றைக் கொண்டு தலையை 3 தடவை சுற்றவும்.பின், முதலில் தேங்காய்களையும் பின் நிலக்கரியையும் ஆறு அல்லது கடலில் எறிந்து விட்டு நேரே வீட்டிற்கு வந்து விடவும். வீட்டினுள் நுழையும் முன் கை,கால்களைக் கழுவிக்கொண்டு உட்செல்லவும்.

------------------------------------------------------------------------------------------------------------
3.கீழ் உள்ள மூன்று மந்திரங்களை ஜெபித்து வரலாம்.

ஓம் நவகுலாய வித்மஹே 
விஷதண்டாய தீமஹி 
தன்னோ சர்ப்ப ப்ரசோதயாத் 

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ ||

ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரௌம் சஹ கேதவே நமஹ ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரங்களைத் தினமும் 18 தடவை ஜெபித்து வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------

4.கால சர்ப்ப தோஷ நிவாரண மந்திரம் 

ஓம் குரு குரு  குல்லே ஹூம்  பட் ஸ்வாஹா ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வரலாம்.


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம்


ஜாதகத்தில் கிரகங்கள் அனுகூலமாக இல்லாமல் பலவிதமான துன்பங்கள் அனுபவித்து வருபவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர கிரக பாதிப்புகள் குறைந்து நிம்மதியான வாழ்வு அமையும்.இந்த ஜெபத்தைக் காலையில் சூரிய உதயம் முதல் 6:45 க்குள் முடித்து விட வேண்டும்.பாதகமான கிரகங்களின் தசை,புத்தி நடப்பவர்களும் இந்த ஜெபத்தைச் செய்து பலன் பெறலாம்.

சூர்ய அல்லது சந்திர கிரகணத்தன்று ஜெபிக்க விசேஷமான பலன் கிட்டும்.

பீடாநாஷன ஸ்ரீ சூர்ய மந்திரம் :-

ஓம் நமோ பாஸ்கராய சர்வக்ரஹ பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா ||   


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சனீஸ்வர சாந்தி பரிகாரம்

                                             

கீழே உள்ள யந்திரத்தைச் சனிக்கிழமை மாலை அல்லது இரவு ஒரு கருப்புப்  பேப்பரில் கரித்துண்டு கொண்டு வரையவும்.சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த யந்திரம் வரைந்த பேப்பரை 9 தடவை தன் தலையைச் சுற்றி  அதை ஒரு கிணற்றில் போட்டுவிடவும்.பின்னர் அந்தக் கிணற்று  நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ கூடாது.இது எளிய பரிகாரமாகத் தோன்றினாலும் நல்ல பலன்களைத் தரும்.அதிகம் கடன்,அவமானம்,தரித்திரம் போன்ற கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களும் இதைச் செய்து நற்பலன் பெறலாம். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 11 February 2015

முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்


ஆண்களுக்கு :-
 அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday 10 February 2015

சர்வ ரக்ஷாகர ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்






ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-

ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய | 
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||      



மஹாரக்ஷையாக,சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது.ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி,ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை  ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும் ,கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.


மருத்துவர்கள் மற்றும் ரெய்கி ,ப்ராணிக் ஹீலிங் போன்ற குணப்படுத்தும் சேவை செய்பவர்கள் ,இந்த மந்திரத்தைக் காலையில் குளித்த பின்  3 தடவை ஜெபித்துத் தலையில் நீர் தெளித்துக் கொள்ள அல்லது அட்சதை போட்டுக் கொள்ள நோயாளிகளிடம் இருந்து நோய் மற்றும் கர்ம வினை தாக்காது தடுக்கும். 

நோய் நீக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் பல ரகசியப் பிரயோகங்கள் உள்ளன.அவற்றை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.குருமுகமாக அல்லது உங்கள் அருகில் உள்ள விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.

உயர்வான பலன் தரும் முறை :-

சித்தபுருஷர்களும், யோகிகளும் இம்மந்திர சித்தியினால் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைக் காணும் பெரும்பேறு பெற்றிருந்தனர்.மந்திரம் சித்தியான பின்னர் தினமும் நள்ளிரவில் 108 தடவை ஜெபித்து வர சுதர்சன சக்கரத்தைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.ஜெபம் செய்யும் போது  பெரும் பிரகாசத்தோடு ஸ்ரீ சுதர்சன சக்கரம் விரிவடைந்து கொண்டே வரும்.அப்படி வந்தால் நீண்ட நேரம் அதைப் பார்க்காமல் கண்களை மூடி வணங்கி " உங்கள் திருவருள் என்றென்றும் எனக்குக் காப்பாக விளங்க வேண்டுகிறேன் "  என்று வேண்டிக்கொண்டு மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நீர் அருந்தவும்.       

சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.
           
                         வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday 3 February 2015

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

                                                            


மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க இந்த பரிகாரம் உதவும்.மகாராஷ்டிரா,மத்தியப்ரதேசம் போன்ற மாநிலங்களில் இதைச்  செய்கின்றனர்.


பாதிக்கப்பட்டவர் தானே செய்துகொள்ளலாம் அல்லது  குடும்பத்தில் யாராவது ஒருவர் அவருக்கு இதைச் செய்யலாம்.


பரிகாரம்:-

வளர்பிறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் செய்ய வேண்டும்.

கொஞ்சம் மஞ்சளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் குங்குமத்தை நீரில் குழைத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் கண்மை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பர் எடுத்துக்கொள்ளவும்.அந்தப் பேப்பரில் மஞ்சளால் ஒரு கோடும், குங்குமக்கலவையால் ஒரு கோடும்,கண்மையால் ஒரு கோடுமாக மொத்தம் மூன்று கோடுகள் வரையவும்.பின்,வேகவைத்த அரிசிசாதம் கொஞ்சம் அந்தப் பேப்பரில் வைத்துக்கொண்டு அந்த சாதத்தின் மேல் கொஞ்சம் தயிர் விட்டு சாதத்தின் மேல் சிகப்பு மிளகாய் விதைகள் கொஞ்சம் தூவவும்.    .

பின் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மது/ போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரின் தலை மற்றும் உடலை 11 தடவை இடமிருந்து வலமாக ஓம் நமசிவாய என்று மனதுக்குள் ஜெபித்தபடியே சுற்றவும்.


11 தடவை சுற்றி முடித்த பின் அந்த பேப்பரையும் அதில் உள்ளவற்றையும் அப்படியே ஓடும் நீர்,கிணறு,ஏரி ,குளம்,கடல்,ஆறு எதிலாவது போட்டு விடவும். பின் காலையும் கையையும் கழுவிக் கொண்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்துக் கொண்ட பின் வீட்டுக்குள் செல்லவும். 



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

மேன்மை தரும் ஸ்ரீ அக்னி சூர்யன் மந்த்ரம்



சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.சூரியன் அருளும் ஒளியையும் பிராண சக்தியையும் கொண்டே தாவரங்கள் முதல் மனிதர்கள் உட்பட யாவரும் ஜீவித்திருக்கிறோம்.எனவே வேதம் அவரை ப்ரத்யக்ஷ பரமாத்மஹா என்று போற்றுகிறது.இதையே தமிழில் நம் பாரதியார் கண்ணுக்குத் தெரிந்த கடவுளே என்று சூரியதேவனைப் போற்றுவார்.இதன் காரணமாகவே நவக்கிரஹங்களில் ஒருவராகவும், நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.ரசவாதத்தில் கூட இவரது அருளும், பங்கும் பிரதானமானது.பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர். சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட சூரியனிடம் இருந்தே அதற்கான சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.


வேதம்,உபநிஷதம் ,மந்திர,தந்திர சாஸ்திர நூல்களும் ஆதி தேவன் என்று அழைக்கப்படும் சூரியனைப் பற்றி மிக  உயர்வாகவே பேசுகின்றன.இன்றும்  பலர் வேத முறையிலும்,தாந்த்ரீக முறையிலும் சூர்யபகவானை உபாசனை செய்து வருகின்றனர்.

இங்கு நாம் பார்க்கவிருப்பது அக்னி சூர்ய மந்திரம் இம்மந்திர ஜெப பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும்.பித்ரு தோஷம் தீரும்.வேலையில்,அதிகாரிகளுடன் உள்ள பிரச்சனைகள் தீரும்.ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெறாதவர்கள் இம்மந்திர ஜபம் செய்து வர சூரியனின் அருள் பெற்று அவரது காரகத்துவ பலன்களைக் குறைவின்றிப் பெறலாம்.அதோடு வேலை,தொழில்,அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும்  கிட்டும்.இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.

அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 எண்ணிக்கை ஜெபித்து வரலாம்.
                                                 
                                                           அல்லது

ஒரே நாளில் (அமாவாசை அன்று) 1008 உரு ஜெபித்தும் முடிக்கலாம்.


ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில் செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.


சுத்தமான பசு நெய் ஊற்றி  விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு அதன் முன் கிழக்கு முகமாக அமர்ந்து, குருவையும்,குலதெய்வத்தையும்  வணங்கிக் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.

ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம் :-

ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா | 
சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||


                              வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com 

குழந்தைகளுக்குத் தீர்க்காயுள் தரும் ஸ்ரீ துர்க்காதேவி மந்திரம்



சில குழந்தைகள் கொடிய நோய்களால் பாதிப்படைந்து ஆபத்தான சூழ்நிலையில் இருப்பார்கள்.சில குழந்தைகளுக்கு ஜாதகப்படி ஆயுள் கண்டம்,பிறவியில் இருந்தே நோய்,பாதிப்புகள் இருக்கும்.இவை தீரக்  கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யவும்.


முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தைத் தினமும் வடக்கு நோக்கி அமர்ந்து 27 தடவை ஜெபித்து அந்தத் தீர்த்தத்தைக் குடிக்கக் கொடுத்து வர குழந்தைகளின் ஆயுள் கண்டம்,கொடிய நோய்களின் பாதிப்புகள் நீங்கும்.அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளுக்கும் இதைச்  செய்யலாம்.            

மந்திரம் :-

கும் கும் கும் தும் தும் தும் |துர்கே துர்கே மஹாதுர்கே|
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் |
மகாஷாஷ்தி ரூபிணி|இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு|
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ||  


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

நன்றாகப் படிக்க,ஞாபகசக்தி அதிகரிக்க,சகல கலைகளிலும் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்





சகலகலாவல்லி  ஸ்ரீ மாதங்கி மஹாமந்த்ரம்:-

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் |
ஓம் நமோ பகவதி சாரிகே சகலகலா கோவிதே | 
மம தேவி போதய போதய ஸ்வாஹா ||


இந்த மந்திரத்தை வளர்பிறை புதன் அல்லது வியாழக்கிழமை அன்று கிழக்கு நோக்கிய அம்ர்ந்து ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாள் வெற்றிலை,பாக்கு, பழங்கள்,பால்,பாயசம் படைக்கவும் ,மற்ற நாட்களில் இயன்றதைப் படைக்க்கவும்.வெண்ணிறப் பூக்களால் கீழ்க்கண்ட 16 நாமங்களால் அர்ச்சனை செய்து பின் மந்திரம் ஜெபிக்கவும்.குறைந்தது 27 தடவையும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் எண்ணிக்கை கூடக்கூட பலன் அதிகம் கிடைக்கும்.


பிரயோகம்: 1       12 நாட்கள் ஜெபத்திற்கு பின் முகத்தில் தேஜஸ் கூடும். மந்திரத்தை ஜெபித்தபடியே சந்தனக்கட்டையை  அரைத்து அந்த சந்தனத்தை நெற்றியில் அணிந்து வர சகல கலைகளிலும் மேன்மை அடைவீர்கள்.     பார்ப்பவர்கள் உங்களை அறிவில் சிறந்தவர்களாகக் கருதி நடத்துவார்கள்.

பிரயோகம் : 2   அஞ்சனம் செய்து பயன்படுத்த 100 சதவீதம் பலன் பெறலாம்.(குருமுகமாக அறிந்து கொள்ளவும்).
   

             ஸ்ரீ  ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-

ஓம் சங்கீதயோகின்யை நமஹ
ஓம் ஷ்யாமாயை நமஹ
ஓம் ஷ்யாமளாயை நமஹ
ஓம் மந்திரநாயிகாயை நமஹ
ஓம் மந்திரிண்யை நமஹ
ஓம் சசிவேசான்யை நமஹ
ஓம் ப்ரதானேச்யை நமஹ
ஓம் சுகப்ரியாயை நமஹ
ஓம் வீணாவத்யை நமஹ
ஓம் வைணிகீயை நமஹ
ஓம் முத்ரிண்யை நமஹ
ஓம் ப்ரியகப்ரியாயை நமஹ
ஓம் நீபப்ரியாயை நமஹ
ஓம் கதம்பேஸ்யை நமஹ
ஓம் கதம்பவனவாசினியை நமஹ
ஓம் சதாமதாயை நமஹ

                           வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday 2 February 2015

கஷ்டங்கள் தீர,எதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்த்ரம்



ஸ்ரீ  பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும்,அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரயோகத்தைச் செய்ய நிறைவான பலன் கிடைக்கும்.

பிரயோகம் 1:-
மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா "  என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு மஞ்சள் நூலில் தடவி  மந்திரத்தை 21 தடவை ஜெபித்து அந்தக் கயிற்றை ரக்ஷையாக அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 2:-

மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா " என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு வெற்றிலையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை 21 தடவை ஜெபித்து முடித்த பின் அந்த மஞ்சள் விழுதை ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கரைத்து வீட்டின் மேலும், வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 3 :-   இதை உடற்கட்டு மந்திரமாகவும் பயன்படுத்தலாம்.ஏதேனும் பூஜை செய்யும் முன் அல்லது காடு,பயங்கரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது இதை ஆபத்து ஏதும் ஏற்படாது காக்கும்.பயந்தவர்களுக்கு இதை 3 தடவை ஜெபித்துத் தண்ணீரில் 3 தடவை ஊதி அந்தத் தண்ணீரால் முகத்தில் தெளிக்கப் பயந்ததால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:-

ஓம் நமோ பகவதி | ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி | மம சர்வ நிந்தகானாம் சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய | ஜிஹ்வாம் முத்ரய முத்ரய |  புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம் முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய  ஸ்தம்பய | கேம் கீம் மாரய மாரய |பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ  ரக்ஷ | க்ரஹம் நிவாரய நிவாரய |வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர | தாரித்ர்யம் நிவாரய நிவாரய |சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ | தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி  மாம் ரக்ஷ ரக்ஷ |பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி  மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய  விநாசய  | சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே  ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன் உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||

 

                           வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com