Saturday 30 August 2014

சகல கார்ய சித்திக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்





மனிதர்கள் யாவருமே தொடர்ந்த வெற்றியையும் சந்தோஷத்தையும் விரும்புபவர்களே. ஆனாலும்,நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை இருப்பதில்லை .
கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி வெற்றிகரமான வளமான வாழ்வு வாழலாம்.


1.பஞ்சபட்சி சாஸ்திரம் -அதிர்ஷ்ட நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               தவிர்க்க வேண்டிய நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               ஜெபிக்க வேண்டிய  பஞ்சாட்சர மந்திரம்.

2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்



1.பஞ்சபட்சி சாஸ்திரம்

ஒரு காரியத்தை நல்ல நாள், நட்சத்திரம், திதி ,யோகம் ,கரணம்  எல்லாம் பார்த்துச் செய்தாலும் அது சரிவர நடைபெறாமலோ  வெற்றி அடையாமலோ போகலாம்.ஆனால் ,பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தோல்வியடையாது.மேலும் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் நமக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட நிறம்,அதிர்ஷ்ட திசை நோக்கி மந்திர ஜபம்,தொழில் சார்ந்த பேச்சுவார்த்தை,சுபகார்யம் சத்ருஜெயம் சார்ந்த காரியங்கள் செய்ய யாவும் பின்னமின்றி வெற்றி பெறும்.
மேலும்  தவிர்க்கவேண்டிய நிறங்கள் ,நேரங்கள்,படுபட்சி நாட்கள் இவற்றை அறிந்து சுப காரியங்கள் செய்வதை விலக்க வேண்டும்.
என் நண்பரின் சகோதரிக்கு நல்ல நாள்,நட்சத்திரம்,நேரம் பஞ்சபக்ஷி சாஸ்திரப்படி படுபட்சி இல்லாத நாளாகப்  பார்த்து திருமணம் நடந்தும் மணப்பெண் எதிரிப் பட்சிக்கு  (தவிர்க்கவேண்டிய) உண்டான நிறத்தில் பட்டுச்சேலை கட்டி இருந்ததால் திருமண வாழ்க்கை முறிந்தது.

பணம்,ஆள் பழக்கம் இருந்தும் ஒரு கார்,வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை ,நீண்ட நாட்களாக கோர்ட் கேஸ் இருந்து முடிவாகாமல் உள்ளது, தொழில் சார்ந்தும் தீய சக்திகளைக் கொண்டும்  எதிரிகளால் பல தொல்லைகள் இது போன்ற பல முடியாத காரியங்களை  பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நமது அதிர்ஷ்ட நாள்,நேரத்தில் செயல்பட்டுத் தீர்வு காணலாம். 


2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.


3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.நடப்பு தசா புத்தியில் மற்றும் தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீரவும் எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கமாக அறிய .குழந்தைகள் கல்வியில் உயர்வடைய ,பல நற்காரியங்களுக்குத் தெய்வங்களின் யந்திரங்கள், ரக்ஷைகளின் மூலம்  பலன் பெறும் முறைகள்.

உங்கள்  பிறந்தநாள் ,நட்சத்திரம்,நேரம் அல்லது ஜாதகம் அனுப்பி ஜாதகத்தின் மூலம் நமக்கான அம்சங்களை ஆராய்ந்து மேற்கண்ட ஆன்மீக வழிமுறைகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை ,படுபட்சி நாட்கள் ,பலமான நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெறுவீர்களாக.


விவரங்களை கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும்.
ms.spiritual1@gmail.com

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9442193072
9788493072    
     
                  வாழ்க வையகம் ||                         வாழ்க வளமுடன் ||



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072  / 9788493072         

ms.spiritual1@gmail.com



Saturday 16 August 2014

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு


                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||


ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.

ஸ்ரீ ஹனுமான் சிவபெருமானின் 11 அவதாரங்களில் ஒருவர்(ஏகாதச ருத்ரர்களில்) .
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீதா முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ ஹனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி என்றும் சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லாத் தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
சமுத்திரத்தைத் தாண்டியவன்
சீதாசோகவிநாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்
ராவணனின் கொழுப்பைப் பரிகாசம் செய்தவன்



தினமும் குளித்து முடித்து மேற்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.மேலும்,இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவையும், அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.


3.ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||




4.பாதுகாப்பான பயணத்திற்கு :- 

தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 






வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday 13 August 2014

அதீத காம சிந்தனை நீங்க நல்லொழுக்கம் உடையவராக விளங்க உதவும் மந்திரம்


சனத்குமார : தேவரிஷி: சுக்ர :பீஷ்ம :ப்லவங்கமஹ|

பஞ்சைதானி ஸ்மரேந் நித்யம் காமஸ்தஸ்ய ந பாததே ||

இந்த மந்திரம் ஜெபித்து வர தவறான காம சிந்தனைகள்,தவறான தொடர்புகள்  குறைந்து ஒழுக்கம்  உண்டாகும்.
வளர்பிறை வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் வடக்கு நோக்கி அமர்ந்து ஆரம்பிக்கவும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday 11 August 2014

நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்




அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி  நின்று இந்த மந்திரத்தை 108 தடவை  ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை  அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-

நமக்காக ஜெபிக்கும் போது 
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 


பிறருக்காக ஜெபிக்கும் போது 

ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 

( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர்    )


யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

சூர்யா,தச்சநல்லூர் 
திருநல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

துன்பங்கள்,மனக்கவலைகள் நீங்க


சிவலிங்கத்திற்குத் தும்பைப் பூவால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து வரத் துன்பங்களும் மனக்கவலைகளும் தீரும்.


ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே |
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ ||




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா.தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Sunday 10 August 2014

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்



க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.

இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.

இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 

கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.



இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  ||


3.
ஓம் கம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு சஹஸ்த்ரவான்|
ஹ்ரீம் தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||
க்ரோம் சஹஸ்ரார ஹூம் பட் க்ரோம் ஹ்ரீம் ஓம் ||


இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் ஜெபிக்கவும். 
  

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.


மந்திர சாஸ்திரத்தில் இவரது மந்திரஜபம் கொண்டு சத்ருஜெயம், நேர்மையான காரியங்களில் வெற்றி பெறுதல் எனப்  பலவிதமான  பிரயோக முறைகள் உள்ளன.தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.


இவரது யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் இவரை ஒரே ஒரு  ஆலயத்தில்  மட்டுமே பார்க்கலாம்.
கும்பகோணம் மாவட்டம் குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் சேங்காலிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் இவரது விக்ரகம் உள்ளது.அங்கு சென்று இவருக்கு பூஜை செய்து மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.



M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday 9 August 2014

ஸ்ரீ பரசுராமர் மந்திரம்


ஓம் ராம் ராம் | ஓம் ராம் ராம் | ஓம் பரசு ஹஸ்தாய நமஹ||

ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று இந்த மந்திரத்தை விஷ்ணு ஆலயத்தில் வைத்து 108 முறை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் வீட்டில் வைத்து ஜெபிக்கலாம்.

இந்த மந்திரம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ,நில அபகரிப்பு பிரச்சனை ,வறுமை ,தவறான தொடர்பு இவற்றில் இருந்து விடுதலை தரும்.


விற்க முடியாமல் இருக்கும் வீடுகள்,இடங்கள் விற்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை அடுத்த நாள் (புதன்கிழமை ) அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் விற்காத இடத்தின் வடகிழக்கு மூலையில்  (ஈசான்யமூலை) சிறிய குழி பறித்து அதில் ஊற்றி விடவும்.விரைவில் விற்பனை ஆகிவிடும்.

வீட்டில் ,தொழில் செய்யும் இடங்களில் உள்ள தீய சக்திகளால் உண்டான பாதிப்புகள் நீங்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை வலம்புரிச்சங்கில் ஊற்றிச் செவ்வாய்க்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் பாதிப்படைந்த வீடு, கடை, தொழிற்சாலைகளில் தெளித்து விடத் தீமைகள் நீங்கும் இதை மாதம் ஒரு முறையேனும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை  அன்று செய்து வர திருஷ்டி மற்றும் எந்த தீய சக்திகளாலும் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday 4 August 2014

பொன்னும் பொருளும் சேர்ந்து கோடீஸ்வரராக ,குழந்தை பாக்கியம் பெற

பொன்னும் பொருளும் சேர்ந்து கோடீஸ்வரராக  ,குழந்தை பாக்கியம் பெறவும் பாம்பன் ஸ்ரீ குமரகுருபரர் அருளியுள்ள பதிகங்களைப் படித்துப் பயன்பெறுங்கள் .

JUST RIGHT CLICK ON THE PICTURE AND SAVE AS JPEG FILE.



வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday 2 August 2014

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

                                                                  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 



                                         ஸ்ரீ தனவர்ஷிணி  லக்ஷ்மி மந்திரம் 





தொடர்ந்த பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்   

சித்தர்கள், ரிஷிகளில் பலர் இல்லறத்தில் மனைவியோடும் நிறை செல்வத்தோடும் வாழ்ந்து நன்கு அனுபவித்துப் பின்னரே ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்கள்.எந்த ஒரு பலனுக்கும் ஒன்று இரண்டல்ல நமது வேதத்தில் ஏராளமான மந்திரப் பிரயோகங்கள் உள்ளன.

தாந்திரீக மற்றும் மந்திர சாஸ்திரத்தில் உள்ள மறைக்கப்பட்ட பல ரகசியங்களைப் பலரது நல்வாழ்விற்காக வெளியிடுகிறேன்.நான் வெளியிடும் பல மந்திரங்கள் மந்திர சாத்திர நூல்களில் உள்ளவையே இதுவரை தமிழில் புத்தகங்களில் வெளிவராதவை.சில மட்டும் வடமாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.பின்பற்றிப் பலனடையுங்கள்.


ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி  ஒரு காலத்தில் மிகுந்த வறுமையை அனுபவித்து வந்தார்  அதில் இருந்து விடுபடவும் ,மன்னர்களுக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் செல்வம் அளிக்கும் அளவுக்கு நிறைந்த செல்வவளம் உள்ளவராக விளங்கவும் அவருக்கு உதவியது இந்த மந்திரப் பிரயோகமே .

மேலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் .


பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |


ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.





வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||


M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com| 

Friday 1 August 2014

தீய பழக்கங்களில்,தவறான தொடர்புகளில் இருந்து விடுபட





நமக்கு அறிமுகமான அல்லது குடும்பத்தில் யாரேனும் மது,சூதாட்டம் ,போதைப்பொருள் அல்லது தவறான காமத்தொடர்பு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி  இருந்தால் அவர்களை நேர்வழிக்கு வரச்செய்ய சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீகப் பரிகார முறையைப் பின்பற்றி நலம் பெறுங்கள்.


இரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின்  முன் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமோ அவர் திருந்த வேண்டும் என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு  கீழ்காணும் மந்திரத்தை 108 எண்ணிக்கை உள்ள கருமணி மாலையால் 15 சுற்று  ஜெபிக்க வேண்டும்.(108*15+1620 எண்ணிக்கை ) .

விளக்கின் முன்னால் பாதிக்கப்பட்ட நபரின் போட்டோ வைத்துக்கொள்ளவும்.

ஜெபம் செய்து முடித்ததும் ஜெபம் செய்யப் பயன்படுத்திய மாலையை அந்த நபரின் போட்டோ மீது வைத்து விடவும்.5 நாட்கள் கழித்து அந்த போட்டோ, ,ஜபமாலை ,காளிபடம் ,பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்கள் (விளக்கு தவிர) இவற்றை ஆற்றில் போட்டு விடவும். விரைவில் பாதிக்கப்பட்ட நபர் திருந்தி நேர்வழிக்கு வந்து விடுவார்.

மூல மந்திரம்:-

 ஓம் க்லீம் உச்சாடய பத்ரகாளி அவதர அவதர க்லீம் ஹூம் பட்|| 


 கருமணி மாலை



வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com