Sunday 15 October 2017

தொழில் விருத்தி ,தன விருத்தி யந்திரம்


இந்த யந்திரத்தின் பலன் :-
அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து வ்ரும். 
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில் சார்ந்த கடன்கள் தீரும்.
-----
இந்த பூஜையைச் செய்யும் நாளில் உங்களுக்கு ஆகாத திதி,நட்சத்திரம் மற்றும் படுபட்சி நாட்களைத் தவிர்த்து அதிர்ஷ்டமும்,பலமும் கூடிய நாளில் செய்யவும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில்  அல்லது  வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வியாழக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகட்டில் வரைந்து பயன்படுத்தினால் நீண்ட கால பயனைத் தரும்.

வெள்ளித்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில் வரையவும்.

தங்கத்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் வரையவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகடு பயன்படுத்த முடியாதவர்கள் செம்புத் தகட்டில் யந்திரத்தை எழுதவும்.
 
நெய் விளக்கேற்றி விளக்கிற்குச் சந்தனம்,குங்குமம் வைத்துப் பூக்களால் அலங்கரிக்கவும்.அர்ச்சிக்கவும்.

வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பால் பாயசம் வைக்கவும்.

யந்திரத்தைப் பால்,இளநீர்,பன்னீர் விட்டுக் கழுவி,விபூதி போட்டு ஒரு சுத்தமான துணியால் துடைத்த பின் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து எழுதவும்.

யந்திரம் வரைய  இரும்பு பயன்படுத்தாமல் செம்பு,பித்தளை அல்லது வெள்ளிக் குச்சி பயன்படுத்தவும்.மாதுளை மரக்குச்சி பயன்படுத்தலாம்.

யந்திரம் வரைந்த பின்,பச்சரிசி பரப்பி அதன் மேல் யந்திரத்தை வைத்துச்   சந்தனம்,குங்குமம் வைத்து  நான்கு மூலையிலும் ஜவ்வாது தடவி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வரியை நமஹ"  என்று 108 தடவை ஜெபித்து  மல்லிகை,முல்லை,பிச்சி போன்ற வெண்ணிறப் பூக்களால் யந்திரத்திற்கு  அர்ச்சனை செய்யவும். 

அர்ச்சனை செய்த பின் விளக்கிற்கும்,யந்திரத்திற்கும் தூபம்,தீபம் காட்டவும்.

பூஜை முடிந்ததும் ஒரு சிறிய மண்பானையில் யந்திரத்தை வைத்து அதனுள்  கொஞ்சம் பூக்கள் போட்டு, கீழ்க்கண்ட நான்கு பொருள்களையும் பானையில் போட்டு மஞ்சள் துணியால் பானையின் வாய்ப்பகுதியை மூடவும்.பூஜை செய்த அன்றே நல்ல நேரமிருந்தால் அன்றும் அல்லது இன்னொரு நல்ல நாள்,நல்ல நேரத்திலோ தொழில் ஸ்தாபனத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ள நபர் அல்லது முதலாளி அமரும் இடத்தின் கீழ் பானையைப் புதைத்து வைக்கவும்.  

பானையில் யந்திரத்துடன் போட வேண்டிய பொருட்கள்:-
கொட்டைப்பாக்கு கொஞ்சம் 
மஞ்சள் கொஞ்சம் 
தனியா (கொத்துமல்லி விதை) கொஞ்சம் 
வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் 


நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072


WHATSAPP : 9788493072

Wednesday 4 October 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று  தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும். 


நன்றி.வாழ்கவளமுடன் 

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072

WHATSAPP : 9788493072

எதிர்பாராத பணவரவைத் தரும் ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத ஏதேனும் ஒரு நல்ல நாளில் வடக்குப் பார்த்து அமர்ந்து இந்த மந்திர ஜெபத்தை செய்யவும்.

துர்கா தேவி சிலை அல்லது படத்திற்கு பூக்கள் அணிவித்து,அதன் முன்  நெய் விளக்கேற்றி ,ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

நாள் ஒன்றுக்கு 1188 (108*11=1188) எண்ணிக்கை வீதம் தொடர்ந்து 1 வாரம் ஜெபிக்கவும்.

துர்கா தேவிக்கு நைவேத்யமாக இனிப்புகள் படைக்கவும்.பூஜை முடிந்த பின் ,சிறு பெண் குழந்தைகளுக்கு இனிப்புப் பலகாரங்கள் கொடுக்கவும்.

மூல மந்த்ரம்:-

ஓம் ஸ்ரீம் க்லீம் க்ரீம் தேவத்யை நமஹ : குரு குரு ரித்தி வ்ருத்தி ஸ்வாஹா 

நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072



Sunday 1 October 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - சென்னையில் 08.10.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 


2.செல்வ வளம் பெற உதவும் எளிமையான மற்றும் விரைவான பலன் தரும் மந்திரங்களும்,விதிமுறைகளும்.

3.ஒன்று அல்லது இரண்டு மந்திங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெபித்து வருவதன் மூலம் அனைத்து வகையான நன்மைகளையும் வாழ்வில் பெறும் ரகசியம் 

4.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.

5.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்கள் அருளிய பயிற்சி முறைகள்.

6.நமது சூக்கும உடலில் உள்ள 7 சக்கரங்களையும் தூய்மை செய்து  சக்தியூட்டும் பயிற்சிகள்.

7.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.

8.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.

9.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.

10.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.

11.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.

-------------------------------------------------------------------------------

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

*************************************
வகுப்பு முடிந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்றால் என்ன? விதி என்றால் என்ன? அதை நாம் மாற்ற முடியுமா? நாம் விரும்பியபடி நாம் வாழ முடியாமல் தடுப்பது எது ?
சரியை,கிரியை,யோகம்,ஞானம் போன்ற ஆன்மீகப் பாதையில் எது சிறந்தது ? இதை எனக்கான பாதை எது? வாழ்க்கையை நிறைவும், மகிழ்ச்சியும்,ஞானமும் உள்ள விதம் சரியான
கோணத்தில் வாழ்வது எப்படி? மற்றும் காமம் முதல் கடவுள் வரை அனைத்தயும் பற்றி தெளிவு பெறுவீர்கள்.
*************************************


வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹீலிங் மற்றும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தூய்மை செய்து அவற்றின் இயக்கம் சரி செய்யப்படும்.  

-------------------------------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,
மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  08.10.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : K.M.L.நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர் -ரெட் ஹில்ஸ் ரோடு,புதிய லட்சுமி புரம்,கொளத்தூர்  
சென்னை 600009


பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம்(ரெட்ஹில்ஸ்) செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி சிக்னல்  ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும் 


வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்கண்ட இரு நபர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.
திரு.சக்திவேல்  -   9841530789
திரு.செல்வம்     -   9841685645
------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

மொபைல்   : 9442193072
வாட்ஸ்அப்  : 9788493072

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 

ms.spiritual1@gmail.com