Tuesday 29 December 2015

வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்



வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1
வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்
ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்


விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.


அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம் 

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |
என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 20 December 2015

மன விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் |
மஹாலக்ஷ்மீம் மம வாஞ்சிதார்த்த சித்திம் |
குரு குரு ஸ்வாஹா ||

 இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஜெபிக்கத் துவங்கி 23 ஆயிரம் தடவை ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகி நமது விருப்பம் நிறவேற ஏற்ற சூழல் உருவாகும்.

ஜப ஆரம்பத்தில் உங்கள் நோக்கம் இன்னதென்று குறிப்பிட்டு அது நிறைவேறும் பொருட்டு இம்மந்திரம் ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து பின் மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்..

ஜப ஆரம்பத்தில் விளக்கேற்றி ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி இத்தீப ஜோதியில் வந்தருள வேண்டும் என்று ஊதுவத்தி காண்பித்து 3 தடவை வேண்டவும்.பின்னர் விளக்கின் பாதத்தில் சந்தனம் ,பன்னீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்த நீரைக் கொஞ்சம்  விட்டு விளக்கிற்குச் சந்தனம் குங்குமம் வைக்கவும்.
                                          முதல் நாள் மற்றும் கடைசி நாள் சிறப்பாக நைவேத்யம் படைத்துப் பூஜிக்கவும். மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடலாம்.


வீட்டில் காலை மாலை சந்தி வேளையில் நறுமணம் வீசும்படி சாம்பிராணி அல்லது ஊதுவத்தி ஏற்றிவைக்கவும்.

ஆவாஹனாதி பூஜை விதிகள் அறிந்தவர்கள் முறைப்படி பூஜிக்கவும்.


23,000 ஜெபம் முடிந்து வேண்டிய காரியம் பலிக்கும் வரை இந்தக் காரியம் நடைபெற வேண்டி இம்மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.

ஜெப காலங்களில் சைவ உணவை மேற்கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 18 October 2015

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்




ஏதேனும் வழக்கில் சிக்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பிரயோகத்தைச் செய்யவும்.தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் காரிய வெற்றி கிடைக்காது மேலும் தெய்வ நிந்தனை ஏற்படும்.


ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
இரவில் 8 மணிக்கு மேல் விளக்கேற்றி  அதில் ஸ்ரீ காளிதேவியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டி உங்கள் கோரிக்கையை முன்வைத்து செந்நிறப் பூக்களால் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து அர்ச்சிக்கவும்.
முதல் நாளும் 11 வது நாளும் வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும் மற்ற நாட்களில் வெற்றிலை,பாக்கு,பால்,பழம் மட்டும் வைத்து மந்திரம் ஜெபித்து வழிபடவும்.இவ்வாறு  தொடர்ந்து 11 நாட்கள் செய்யவும்.
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.தினமும் திரியை மாற்ற வேண்டும்.முந்தைய நாள் பயன்படுத்திய திரியை ஒரு வெள்ளி அல்லது பித்தளை குங்குமச்சிமிழில் போட்டு வைக்கவும்.11 நாட்கள் முடிந்த பின் 12 ஆம் நாள் இரவில் எல்லாத்  திரிகளையும் போட்டு வைத்த குங்குமச்சிமிழை மூடி செந்நிரப்பூ பூக்கள் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அர்ச்சிக்கவும். பின் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி நின்று 3 தடவை  மந்திரம் ஜெபித்து ஸ்ரீ காளிதேவியை வழக்கில் வெற்றி தரவேண்டி  குங்குமச்சிமிழில் உள்ள எண்ணையைக் கொஞ்சம் எடுத்துப் புருவத்தில் தடவி வரவும். எதிரிகளால் தொல்லை நேராது.வழக்கிலும் வெற்றியுண்டாகும்.இதை வெளியில் எல்லோரிடமும் சொல்லாமல் ரகசியமாய்ச் செய்யவும்.

மந்திரம் :
ஓம் க்லீம் பீஜ ரூபிண்யை மஹாகாளிகாயை க்லீம் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Friday 16 October 2015

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்

ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில்  வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.



இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்,உண்டான நஷ்டம் நீங்கவும் வேத பரிகாரம்


வளர்பிறையில் உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து அதிகாலையில் ஆலமர வேர் ஒரு சிறு துண்டு எடுத்துக் கொள்ளவும்.வீட்டிற்குக் கொண்டு வந்து பஞ்சகவ்ய அல்லது பன்னீர் விட்டுக் கழுவி வைத்துக்கொள்ளவும்.ஒரு வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு நூல் வாங்கி செஞ்சந்தனக் கட்டையை உரைத்து  அதை அந்தப் பட்டு  நூலில் தடவி தொழில்,வியாபார ஸ்தாபனங்களில்  வாசலில் கட்டவும்.பலரால் பயன்படுத்தி வெற்றி கண்ட இம்முறையைப் பின்பற்றி நீங்களும் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.   

குறிப்பு:மரத்தின் தெற்கு பக்கம் உள்ள வேரை மட்டும் எடுக்கக் கூடாது.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Tuesday 22 September 2015

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா மந்திரம்









வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து  கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


மந்திரம்  

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ...........................வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா

முக்கிய குறிப்பு : .மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.
உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா  என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்







1.வறுமை நீங்க

ஓம் ஸ்ரீம் ஹரயே  நமஹ


2.பக்தி,ஞானம்,முக்தி பெற 

 ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ

3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற

ஓம் க்லீம் ஹரயே நமஹ

4.எதிரிகளை வெல்ல 

ஓம் ஹூம் ஹரயே நமஹ



மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத்  தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 13 September 2015

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்



வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.

சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

தரித்திரம் நீக்கி நிறைந்த செல்வம் தருவதில் தனிச் சிறப்பானது புவனேஸ்வரி வழிபாடு.இது விரைவான பலன்களைத் தரவல்லது.


இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப்  வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து வழிபடுங்கள்.


முறைப்படி ஒரு குருவிடம் தீக்ஷை பெற்று ஜெபித்து பூஜை விதிகளை அறிந்து ஜெபித்து வருவதன் மூலம் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும். 




1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா 

2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா 

3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா 



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Friday 11 September 2015

வீட்டில் திருட்டு நேராமல் காக்க ,திருடர் பயம் நீங்க ஆன்மீகத் தீர்வு




                                      சமீப காலமாக திருட்டு அதிகரித்து நகை,பணம் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதோடு  அதன் உரிமையாளர்களைக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.அனேக அன்பர்களின் வேண்டுகோளின்படி
இதற்கு எளிமையும்,வலிமையான  இரண்டு தீர்வுகளை  இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.இவற்றில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைச் செய்து பயன்பெறுங்கள்.


பரிகாரம் 1




மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை, சுத்தமான வெள்ளைப் பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். இது எளிமையான மற்றும் மிகச்சக்தி வாய்ந்த முறை.


பிரிண்ட் எடுக்க முடியாதவர்கள் குளித்து முடித்து மேற்கு நோக்கி அமர்ந்து ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் மேற்கண்ட படத்தில் உள்ள படி எழுதி
அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.


பரிகாரம் 2





மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை சுத்தமான வெள்ளை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அல்லது எழுதி அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பித்து லேமினேஷன் அல்லது  பிரேம் செய்து  வீட்டின் தலைவாசலில் மாட்டவும். தலைவாசலுக்குக் கிழக்கு ஓரத்தில் படம் இருக்கும் படி இருந்தால் மிக நல்லது.இதுவும் திருடர்கள் வராமல் காக்கும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com







Wednesday 2 September 2015

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்






மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் || 


 எளிமையான,நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள்,தேன்,பச்சரிசி,ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com



தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்




எல்லா காரியங்களிலும் வெற்றி அருளும் இம்மந்திரத்தைத் தாந்த்ரீக குருமார்கள் ரகசியமாக குருபரம்பையாக உபதேசித்து வருகின்றனர்.எனது வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் அன்பர்களின் நலன் கருதி வெளியிடுகிறேன்.

நமக்கு தொழில்,வியாபாரம்,வேலை,குழந்தைகள் படிப்பு,பள்ளியில் சேர்க்கை,பெரிய மனிதர்களின் உதவி வேண்டுதல் இப்படிப் பல தேவைகள் வாழ்வில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.அவற்றில் சரி பாதி அல்லது அதற்கு மேலான காரியங்களில் தோல்வியையும் துன்பத்தையும் சந்தித்து வருபவர்கள் ஏராளம்.ஒவ்வொரு காரிய வெற்றிக்கும் தனிப்பட்ட சிறப்பான பூஜை மற்றும் மந்திரங்களை இன்றைக்குள்ள பிஸியான காலகட்டத்தில் செய்ய இயலாது.அதற்கு ஒரு எளிதான மந்திர ரீதியான தீர்வாக இம்மந்திரம் விளங்கும்.

ஜெப விதிகள் :-

இம்மந்திரத்தைக் கிரகணத்தன்று ஜெபிக்கவேண்டும்.
வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து வடக்கு முகமாக ஜெபிக்கவும்.
முதலில் குருவை மனதில் நினைத்து ஓம் கும் குருப்யோ நமஹ என 108 தடவை ஜெபிக்கவேண்டும்.அதன் பின்னரே கார்ய சித்தி மந்திரம் 1008 தடவை ஜெபிக்கவேண்டும்.இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.

இது உங்கள் காரியங்கள் யாவிலும் வெற்றி தரும்.எந்த ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடுவதாக இருந்தாலும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வேண்டிச் செல்ல அதில் வெற்றி கிட்டும்.தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. 

தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம் 


ஓம் சர்வோதய சம்பூர்ண லாப ப்ராப்த்யர்த்தே நமஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday 16 August 2015

கர்ப்பம் கலையாமல் இருக்க ,பிறந்த குழந்தை இறப்பில் இருந்து காக்கப்பட




அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுபவர்கள் ,தொடர்ந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விடுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பிணியின் உடல் உயரத்தை அளந்து அதே அளவிற்குச் சிகப்புக் கயிறு அளந்து அதை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தால் பூஜித்து அனுப்புகிறேன்.அதை அணிந்தால் சர்வ நிச்சயமாகக் கர்ப்பம் கலையாது. கர்ப்பிணியின் பெயர் மற்றும் கர்ப்பிணியின் தாயின் பெயர் குறிப்பிட்டு ஒரு ஒரு பேப்பரில் எழுதிக் கயிறுடன் வைத்து அனுப்பவும்.

அநேகர் தொந்தரவு செய்யக் கூடும் என்பதால் எனது முகவரியை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.எனவே நேரில் வரவேண்டாம்.மேலே குறிப்பிட்ட தேவை உள்ளவர்கள் எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது முகவரியை SMS செய்கிறேன்.   

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday 9 August 2015

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும் ஸ்ரீ பகளாமுகி மந்திரம்




தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.


மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.

ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-  

ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Wednesday 29 July 2015

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்



இம்மந்திரம் எவ்வளவு கொடிய வறுமை ,கடன்,பொருளாதார முடக்கம் இவற்றைச்  சரி செய்யும்  வல்லமை கொண்டது.உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நல்ல நாளாகப் பார்த்து அல்லது ஒரு பௌர்ணமி நாளில் ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாளில் 108 உருவும் அடுத்து வரும் நாட்களில் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரவும்.மாலை 5:45 முதல் 7:30 மணிக்குள் ஜெபிப்பது சிறப்பு  அல்லது அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள்  ஜெபிக்கலாம்.தொடர்ந்து  90 நாட்களுக்கு  ஜெபித்து வர  நிறைவான பலன் கிடைக்கும்.அதன் பின்னரும் விடாமல் ஜெபித்து வர நிறைசெல்வத்துடன் வாழலாம்.

மந்திரம் :-

ஓம் | ஹ்ரீம் ஸ்ரீம் | ஸ்திர  அஷ்டலக்ஷ்மி | மம க்ரஹே நிவாசய |
குரு  குரு ஸ்வாஹா ||


நைவேத்யம் :-

முதல் நாள் வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம் வைத்து வைபடவும்,மற்ற நாட்களில் இயன்றதை படைக்கலாம்.முதல் நாள்,90 வது நாள்,மற்றும் வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் விசேஷமாக பூஜை செய்ய விரைவான பலன்களை அள்ளித்தரும்.

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday 23 July 2015

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்


கிருஷ்ணாவதாரத்தின் புகழ் பாடும் ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தின் மேன்மை பற்றிக் கூறும் விஷயங்கள் :-


ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக மேன்மையான அவதாரம் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமே.எனவே அவர் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணணே சர்வ வ்யாபியும் யாவரும்,யாவும் இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பால் உள்ள சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவில் அடங்கும் என்று விரிவாக விளக்குகிறது ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் .

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் 

க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திர ஜபம் எல்லா நலமும்,வளமும் அருள்வதோடு முடிவில் மோக்ஷமும் அருளவல்லது.விரைவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் அருள் பெற்று அவரின் சமீபம் சென்று அடைய இம்மந்திரம் உதவும்.

இம்மாதிர ஜெபத்தினால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும்.

இம்மந்திரத்தை வெண்ணையில் மந்திரித்துக் கொடுக்க அல்லது உண்டு வரக்  குழந்தை பாக்கியம் கிட்டும்.




வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Monday 29 June 2015

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரங்கள்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  மந்திரங்கள்  





யஜுர் வேதத்தில் உள்ள  உபநிஷத்துக்களில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி உபநிஷதமும் ஒன்று.பிரம்ம வர்த்தத்தில் சனகாதி முனிவரகுள் ஒரு யாகம் செய்யும் பொருட்டு கூடியிருந்தார்கள்.அப்போது அம்மரதத்தின் அடியில் வசித்து வந்த சிரஞ்சீவிகளில் ஒருவரான ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் சிரஞ்சீவித்தன்மையை எவ்வாறு அடைந்து அதைக்  கடைபிடிக்கிறீர்கள் என்று சனகாதி முனிவர்கள் கேட்டனர்.

அதற்கு ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி நான் சிவ தத்துவத்தை அறிந்த அதை அப்யாசித்ததன் மூலம் சிரஞ்சீவித்துவம் பெற்று விளங்குகிறேன் என்றார்.யுகங்களின் முடிவில் பிரளத்தில் உலகம் அழிவுரும் பொழுது
எல்லா படைப்புகளும் ,ஜீவ ராசிகளும் இறைவனான சிவபெருமானில் ஒடுங்கும்.அந்த சமயம் லோகத்தில் சிவன் மட்டுமே தன் சுயம்ப்ரகாசமான நிலையில் விளங்குவார்.அவர் வடிவில் ஒன்றான ஞான வடிவினதான தக்ஷிணாமூர்த்தியை உபாசிப்பதன் மூலம் நீங்களும் மிகச் சிறந்த ஞானத்தினை அடைந்து மேலான ஆன்ம நிலையை அடையலாம் எனக்கூறி அதற்காகப்       பின்வரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் 3 சக்தி வாய்ந்த மந்திரங்களை உபதேசம் செய்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
24 அக்ஷர ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

பிரம்மா ரிஷி
காயத்ரி சந்தஸ்
தக்ஷிணாமூர்த்தி தேவதா

ஓம்|நமோ பகவதே |தக்ஷிணாமூர்த்தே |மஹ்யம் மேதாம் |
பிரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

த்யானம் :-

ஸ்படிகம் போன்ற மேனியை உடையவரும், கரங்களில் முத்துமணி மாலை, அமிர்த கலசம்,ஞான முத்திரை தாங்கியவரும்,நாகாபரணம் பூண்டவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

9 அட்சர  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ஆம் அ: சிவாய நம ஓம் ||

த்யானம் :-

நன்மைகளை மாத்திரம் அருள்செய்யும் தென்முகக் கடவுளும்,தமது மூன்று கரங்களில் மான் மழு சூலம் ஏந்தியவரும், ஒரு கரத்தைத் தனது கால் மூட்டில் வைத்திருப்பவரும்,நாகாபரணம் பூண்டவரும்,பால் போன்ற வெண்ணிறம் உடையவரும் ,கல்லால மரத்தின் கீழ் சனகாதியர் புடை சூழ அமர்ந்த வண்ணம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தியானிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ப்ரூம் |நமோ ஹ்ரீம் |ஐம்  தக்ஷிணாமூர்த்தயே |ஞானம் தேஹி ஸ்வாஹா ||

த்யானம் :-





திருநீறணிந்த வெண்ணிற மேனியை உடையவரும்,கரங்களில் முத்துமணி மாலை,ஞான முத்திரை,வீணை,புத்தகம் இவற்றைத் தரித்தவரும் தாங்கியவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான,யானைத்தோலைப் போர்த்தியவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

யுக ஆரம்பத்தில் இம்மந்திரத்தை ஜெபம் செய்ததின் பலனாகப் பிரம்ம தேவர் படைக்கும் தொழில் பற்றிய ஞானத்தினைப் பெறுவதாக இந்த உபநிஷத் கூறுகிறது.



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday 23 May 2015

தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்




ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள்  மிகச் சிறந்த வரப்ரசாதி ஸ்ரீ நரசிம்ஹர். இவரை உபாசிப்பவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.நம் தரப்பில் நியாயம் இருந்தால் நம்மை எந்த விதமான தீமைகளில் இருந்தும் காத்து ரட்சிக்கவல்லவர் என்ற நம்பிக்கையோடு இவரை உபாசிக்கலாம்.சைவ உஅவு உண்பவர்கள் மட்டும் உபாசனை செய்யலாம்.மற்றவர்கள் சுத்தமாக இருக்கும் நாளில் மட்டும் ஜெபிக்கலாம்.


வேதத்திலும் ,தந்திர சாஸ்திரத்திலும் பல இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளில் இவரை உபாசனை செய்யும் முறைகள் உள்ளன.தந்திர சாஸ்திரம் 9 ரூபங்களில் நரசிம்ஹரை உபாசனை செய்யும் முறைகளையும் அதன் மாறுபட்ட பலன்களையும் விவரிக்கிறது.ஷண்மத ஸ்தாபகர் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த வீர நரசிம்ஹரை உபாசனை செய்தார்.இந்த உபாசனையின் பலனாக  அவர் அடைந்த பலன்கள் அநேகம்.நோய் நீங்கப்பெற்றார், காபாலிகர்கள் செய்த அபிசார மாந்திரீகப் பிரயோகங்களை வெற்றி கண்டார் இப்படிப் பலப்பல......


ஜாதகத்தில் செவ்வாய் ,ராகு,சூரியன் இவர்களில் யாரேனும் ஒருவராவது பலம் பெற்றவர்கள் இவரை முழுமுதற் தெய்வமாக எண்ணி உபாசனை செய்யத் தகுதியானவர்கள்.ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு எதிரிகளை நீக்கி ,வழக்குகளில் வெற்றி தந்து,நோய்களை நீக்கி,தடைகள் நீக்கி,பயம் போக்கி நிம்மதியான வாழ்வு தரும்.உபாசித்து உயர்வடைவீர்களாக.
ஜெப விதிமுறைகள்  :-

1) ஜெபத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கவேண்டும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.

2) பன்னீரில் நனைத்துக் காய்ந்த  சிகப்புத்துணியைத் திரியாக்கி நெய் விளக்கேற்றவும்.

3) சிகப்பு நிற ஆடை அணியவும்.

4) சிகப்புக் கம்பளி விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபிக்கவும்.

5) சிகப்பு மணி மாலையைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்.

6)  51000எண்ணிக்கை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


மூலமந்திரம் 

ஓம் க்ஷ்ரௌம் பட் 


பிரயோகம் 

மந்திரம் சித்தியான பின் பசு நெய்யால்  108 எண்ணிக்கை ஹோமம் செய்யவும்.

பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.

மந்திரத்தை தீக்ஷை பெற்று நெறிமுறை அறிந்து ஜெபிப்பது நல்ல பலனைத் தரும்

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்







மந்திரம் 
ஹ்ரீம் ஸ்ரீம் மாதங்க்யை க்ரியாசித்திம் வித்யா ப்ரதாயினி நமஹா ||

ஏதேனும் ஒரு நல்ல நாளில் தொடங்கி இம்மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர ஈடுபடும் கலைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுப்  புகழுடன் கூடிய நிலையை அடையலாம்.குறிப்பாகப் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கற்பவர்கள்,சங்கீதம், பரதம்,ஜோதிடம்,மருத்துவம் போன்ற கடினமான கலைகளைக் கற்பவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் மூலம் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.

வடக்கு முகமாக அமர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஜெபிக்க வேண்டும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Monday 11 May 2015

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்




கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.


பரிகாரம் 2:-

ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday 23 April 2015

பூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரிக்வேத மந்திரம்



இந்த ரிக் வேத சூக்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர அதி விரைவில் சொந்த வீடு,பூமி,வாகனம் இவற்றோடு கூடிய வளமான வாழ்வு அமையும்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இம்மந்திரம் பலன் தராது. கிழக்கு முகமாக அமர்ந்து முன்னால் விளக்கேற்றி வைத்துக்கொண்டு ஜெபிக்கவும்.

மந்திரம் :-

க்ஷேத்ரஸ்ய பதினாவயம் ஹிதேனேவ ஜயாமஸி |
காமச்வம் போஷயித்வா ஸனோ ம்ருளா தீத்ருசே ||



இது ரிக்வேதத்தில் உள்ள சூக்த மந்திரத்தின் ஒரு பகுதி.
ரிஷி :- வாமதேவர்.
சந்தஸ்:- அனுஷ்டுப்.


                                வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திர சுலோகம்



ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :-

சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ  சதாசர்வ அர்த்த சாதினீ |
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||



இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது.இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.குளிக்கும் முன் குளிக்கப் பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து  பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும்.இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு  கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு




செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர  கொடுத்த பணம் வசூலாகும் சூழல் விரைவில் உருவாகும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 22 April 2015

ஸ்ரீ சுப்பிரமணிய மாலா மந்திரம்




ஓம் சரஹணபவாய  ஸாம் ஸீம் ஸூம் ஸைம்  ஸௌம் ஸஹ சுப்ரஹ்மண்யாய | குமாராய, குக்குடத்வஜாய, குங்குமவர்ணாய, மஹாமோஹனாய |த்வாதசாக்ஷராய, சர்வ சத்ருஹராய,பரசைன்ய வித்வம்சகாய,தேவசேனாதிபதயே ஸ்வாஹா ||


இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து காப்பாற்றும்.எதிரிகள் பலர் இருந்தாலும் அவர்களின் தீய செயல்களை ஸ்தம்பனம் செய்து உங்களை ரட்சிக்கும். மேலும் நல்ல வசீகரண சக்தியையும் தரும்.இம்மந்திரத்தைச்  சந்தனத்தில் ஜெபித்து அணிந்து வர  ராஜ வசீகரமும் பிரம்ம தேஜசும் உண்டாகும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்







மந்திரம் 

ஓம் வஜ்ரபுவே நமஹ||


இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.

பிரயோகம் :-

கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை  இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

காரிய சித்தி தரும் ஸ்ரீ சக்தி கணபதி மந்திரம்



மந்திரம் :-

ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே |
உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக |
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச்  செல்லும் முன்,குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச்  சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும்.இம்மந்திரத்தை நான் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்திப் பலன் அடைந்திருக்கிறேன்.


                                   வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 16 April 2015

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்




கீழே உள்ள யந்திரத்தை ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை 6:00 முதல் 7:00 மணிக்குள் பன்னீர் கலந்த அஷ்டகந்த கலவையால் ஒரு தூய வெள்ளை நிறப் பேப்பரில்  எழுதிப் பூக்களால் அர்ச்சித்துச் செம்புத் தாயத்தில் போட்டுக் கழுத்தில் அணிந்து கொள்ளக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் குணம் அடையலாம்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

அழகு,செல்வம்,நற்குணம் நிறைந்த கணவன் கிடைக்க ஸ்ரீ ருக்மிணீ மந்திரம்

ஸ்ரீ ருக்மிணீ தேவி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது பெருமாள் கோயில் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து நற்குணம்,செல்வம்,அழகும் நிறைந்த கணவன் கிடைக்க அருள் செய் என்று ஸ்ரீ கிருஷ்ணனோடு சேர்ந்த ருக்மிணீ தேவியை மனதார வேண்டிய பின் மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.

பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ ஜெபித்து வரலாம்.

வீட்டில் ஜெபிப்பதானால் நெய் விளக்கேற்றி அந்தத் தீப ஒளியில் ஸ்ரீ ருக்மிணீ சமேத ஸ்ரீ கிருஷ்ணரை எழுந்தருள வேண்டிப் பின்  ஜெபிக்கவும்.இயன்றதைப் படைத்து ஜபம் முடிந்த பின் விளக்கின் கருக்கை வகிடு அல்லது நெற்றியில் இட்டு  வர விரைவில் நல்ல இடத்தில் திருணம் நடைபெறும்.




வாழ்கவளமுடன்  

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Sunday 29 March 2015

ஆதித்ய பைரவ மந்திரம்








இம்மந்திரத்தைப் புத்தாண்டு அன்று அல்லது பிறந்த நாள் அன்று ஜெபிக்கத் துவங்க வேண்டும்.தனது பிறந்த நேரத்தில் ஜெபிக்க மிக நல்ல பலன் உண்டாகும்.

உதாரணமாகத் தனது பிறந்த நாள் 10.02.1983 அன்று காலை 8:00 மணி என்றால் அந்த மந்திரத்தை 10.02.1983 காலை 8:00 மணிக்கு ஜெபிக்கத் துவங்கிப் பின் தினமும் காலையில் 8:00 மணிக்கு ஜெபித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆதித்ய பைரவ மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |


இம்மந்திரம் ஜெபிக்கும் முன் குருவை வணங்கிக் குரு வந்தன மந்திரம் ஜெபித்துப் பின் தொடங்கவும்.

இம்மந்திரம் தொழில்,வேலை மற்றும் செல்வ நிலையில் விரைவான முன்னேற்றத்தையும், நல்ல நிர்வாகத்திறன்,கிரக தோஷங்கள் நீங்குதல் இவற்றையும் அருளும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 18 March 2015

வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்







தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில்  விளக்கேற்றிக்  கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.



மந்திரம் :

ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை  கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||  


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday 15 March 2015

நன்றாகப் படிக்க - நினைவாற்றல் பெருக

ஒரு சிகப்புத் துணியில் கொஞ்சம் பெருஞ்சீரகம் வைத்து முடிந்து அதைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும் ,நினைவாற்றலும் அதிகரிக்கும்.


  


 வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday 2 March 2015

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க





குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்,அல்லது  தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி  அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டு, கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக்  குழந்தை நிம்மதியாக உறங்கும்.


பாலரக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாளிகா கண்டம் ஜ்வாலாபாவக லோசனம் |
கபாலகதாம்த்யுக்ரம் கலியே காலபைரவம் ||
 

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 26 February 2015

கனவில் தீர்வுகள் சொல்லும் ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி மந்திரம்



இதை ஒரு அமாவாசை அன்று ஜெபிக்கத் தொடங்கவும்.ஒரு புது விளக்கு வாங்கி (அகல் விளக்கு அல்லது எந்த விளக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.) அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும். குறைந்தது 108 தடவை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் .மந்திர ஜெபத்தின் எண்ணிக்கை கூடக்கூடச் சிறப்பான பலன் கிடைக்கும். 90 நாட்கள் ஜெபித்து வரவும்.ஜெபம் செய்யும் முன் விளக்கின் அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் அல்லது ஒரு ஏலக்காய் போட்டு  நீர் வைக்கவும்.ஜபம் முடிந்ததும் அந்த நீரைக் குடித்து விடவும். அவரவரது பூர்வ ஜென்ம புண்ணிய பலனைப் பொருத்துச் சிலருக்கு முன் பின்னாகப் பலிக்கும்.

முதல் நாள் பச்சைக் கற்பூரம், தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால், வெற்றிலை,பாக்கு, பழங்கள், பலகாரங்கள் வைத்து ஜெபிக்கவும்.மல்லிகை,பிச்சி அல்லது தாமரை இதழ்களால் மந்திரத்தை 27 தடவை  ஜெபித்து விளக்கின் பாதத்தில் பூவைச் சமர்ப்பிக்கவும்.

அடுத்து வரும் நாட்களில் வாழைப்பழம், கற்கண்டு மட்டுமாவது படைக்கவும்.அசைவம் தவிர்க்கவும்.

முதல் நாளைப் போல் 90 வது நாளும் சிறப்பாக நைவேத்யம் படைத்து பூஜிக்கவும்.



ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி தேவி மந்திரம் :-

ஓம் நம ஸ்வப்ன சக்ரேஸ்வரி |
ஸ்வப்னே அவதர அவதர |
கதம் வர்த்தமானம் கதய ஸ்வாஹா ||


                                    வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072  / 9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com        

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்




இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம் 

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.   


மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா || 


வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

வியாபாரம்,தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்




வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-   

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ || 

வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Thursday 19 February 2015

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்




உங்கள்  ஜாதகத்தில் ஏதாவது கிரகதோஷம் இருந்தாலோ, அல்லது தற்சமயம் நடக்கும் தசா புத்திகளால் பாதிப்பு இருந்தாலும் அந்த பாதிப்பைத் தரும் கிரகம் எதுவோ அதற்கான பரிகாரத்தைச் செய்து வர பாதிப்பு குறையும்.


இவை யாவும் அதிகச் செலவு இல்லாத எளிய பரிகாரங்கள்.


1.சூரியபகவான்  - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை  செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான்  -   வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான்  -   தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப்  பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின்   கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின்  கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான்  - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான  கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான்  - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான்  -  ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான   கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday 15 February 2015

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்





1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.  



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 12 February 2015

செரிமானக் கோளாறு போக்கும் மந்திரம்


தற்காலத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதாலும் ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட உணவுகள் உண்பதாலும் நம்மில் பலருக்கு உண்ட உணவு சரிவர செரிமானம் ஆவதில்லை.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் வயிற்றில் வலது கையை வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபிக்க உணவு விரைவில் செரிமானமாகும்.

மந்திரம் :-

நம சர்வ பூதாதிபதயே ஹும் பட் ஸ்வாஹா ||



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


                                 எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.        



சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||


                        வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com