Wednesday 19 November 2014

ஸ்ரீ ஹனுமான் பயவிமோசன மந்திரம் :-





அஞ்சனாகர்ப்ப சம்பூதாய கபீந்த்ரோ சர்வோத்தம |
ராமப்ரிய நமஸ்துப்யம் ஹனுமந் ரக்ஷ ரக்ஷ சர்வதா ||


இரவில் தூங்கும் போது துர்சக்திகள் பிடித்து அழுக்குவது,பயங்கர கனவு கண்டு விழித்துக்கொள்வது ,அமானுஷ்ய சத்தங்கள் காதில் விழுந்து பயப்படுதல் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை,பாக்கு,பழங்கள்,உளுந்துவடை படைத்து  முன்னால் விபூதி அல்லது செந்தூரம் வைத்து மேற்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.பின்னர் உறங்கும் முன் அந்த விபூதி அல்லது  செந்தூரத்தை நெற்றி அணிந்து கொள்ள மேற்சொன்ன தீமைகள் ஏற்படாது.தினமும் இவ்வாறு செய்து வரவும்.

வீட்டில் பேய், பிசாசு,மந்திரங்களால் அல்லது  தீய சக்திகளின் தொல்லை இருந்தால் இந்த மந்திரத்தைத் தேய்பிறை செவ்வாய்கிழமை (அன்று இப்பூஜையைச் செய்பவருக்குப் படுபக்ஷி நாளாக இருக்ககூடாது)   ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை, பாக்கு,பழங்கள், உளுந்துவடை படைத்து  முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கொஞ்சம் துளசி இலைகளைப்  போட்டு ,விபூதி வைத்து மந்திரத்தை 1008 தடவை  ஜெபம் செய்யவும்.ஜபம் முடிந்ததும் அந்த விபூதியை செம்பில் உள்ள நீரில் போட்டு  அந்த தீர்த்தத்தை வீட்டின் உட்புறம் ,வெளிப்புறம்,வீட்டில் உள்ளோர் மீதும் வெற்றிலை கொண்டு தெளித்து விடவும்.இவ்வாறு 3 செவ்வாய்க் கிழமைகள்  செய்ய எந்த துஷ்ட சக்திகளாலும் துன்பம் நேராது.


                      வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
  


Monday 17 November 2014

ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம ஸ்லோக பாராயணமும் பலன்களும்:-



ஸ்ரீ சிவ சஹஸ்ரநாமம் சிவபெருமானின் 1008  திருநாமங்களைக் கொண்டது .அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.



1.வேத அத்யாயனம்,தியானம்,மந்திரஜபம் பலிக்க:- 

மந்த்ரவித் பரமோ மந்திர: ஸர்வபாவகரோ ஹர:
கமண்டலுதரோ தந்வீ  பாணஹஸ்த : கபாலவாந்||    
வேதகாரோ மந்த்ரகாரோ வித்வாந் சமர மர்த்தன:|
மஹாமோக நிவாசீ ச மஹாகோரோ வசீகர:||    
அதர்வசீர்ஷ :ஸாமாஸ்ய:ருக் சஹஸ்ராமிதேக்ஷன:|
யஜூர் பாத புஜோ குஹ்ய :பிரகாசோ ஜங்கமஸ் ததா :||
    
கிழக்கு முகமாக அமர்ந்து தினமும் 27 தடவை ஜெபித்து வர வேதபாராயணம்,மந்த்ரஜெபம்,தியானம் சித்திக்கும்.  


2.பேய்,பிசாசு துர்சக்திகளின்  தொல்லை நீங்க :-

நிஸாசர :பிரேதராஜோ பூதசாரீ மகேஸ்வர :|
பஹுபூதோ பஹுதர: ஸ்வர்ப்பானு ரமிதோ கதி:||

இதைத் தினமும் 27 தடவை  வடக்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம்  செய்து ஜெபித்து வர  அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

3.கிரகதோஷம் நீங்க:-
ஸஹஸ்ராக்ஷோ விசாலாக்ஷ : சோமோ நக்ஷத்ர ஸாதக:|
சந்த்ர சூர்ய :சனி:கேது:க்ரஹோ க்ரஹபதிர் வர :||

வடக்கு முகமாய் அமர்ந்து 27 தடவை ஜெபித்து வர கிரகதோஷங்கள் நீங்கும்.

 4.எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலனைப்பெற 

தேவாசுர குருர்தேவோ தேவாசுர நமஸ்க்ருத :|
தேவாசுர மஹாமாத்ரோ தேவாசுர கணாஸ்ரய:||
தேவாசுர கணாத்யக்ஷோ தேவாசுர கணாக்ரனீ:|
தேவாதிதேவோ தேவர்ஷி : தேவாசுர வரப்ரத :||
தேவாசுரேஸ்வரோ விஸ்வோ தேவாசுர மகேஸ்வர:|
சர்வதேவமயோசிந்த்யோ தேவதாத்மாத்ம சம்பவ :||

இதை சிவாலயத்தில் அல்லது சிவலிங்கத்தின் முன் 27 தடவை ஜெபித்து வர சர்வ தேவதைகளின் அனுக்ரஹம் உண்டாகும். 
    
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்||


M.
சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 /9788493072        
ms.spiritual1@gmail.com


Sunday 16 November 2014

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாம ஸ்லோகங்களும் பலன்களும்






ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000  திருநாமங்களைக் கொண்டது .அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.இது அனுபவத்தில் கண்டது.


1.காரியத்தடைகள் நீங்க 

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.


2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க 

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய :|
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம்  செய்து ஜெபித்து வர  எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.


3.கல்வியில் முன்னேற்றம் உண்டாக :-

சரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரி நந்தன ஸ்ரீ நிகேதன :|
குருகுப்த பதோ வாசா சித்தோ வாகீஸ்வரேச்வர :||

இதைத் தினமும் 18 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து கல்வி,கலைகளில் உயர்வுபெற வேண்டிச் சங்கல்பம்  செய்து ஜெபித்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


4.செல்வம் பெருக,தியானம் சித்திக்க  :-

தனதான்யபதிர் தந்யோ  தனதோ தரணீதர :|
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||

இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும் ,ஆன்மீக,தியான நிலையில் உயர்வும்  கிட்டும் .

5.நாகதோஷம் நீங்க,புத்திர ப்ராப்தி உண்டாக :-

ஸ்தம்பகாகார  கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

இந்த  ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர  சர்ப்பதோஷம் நீங்கும்.சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதை அரசமரமும்,வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.


6.வழக்குகள்,எதிர்ப்புகளை வெல்ல 

மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன :|
பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன :||

வாக்குவாதம்,வழக்குகளுக்குச் செல்லும் பொழுது  இந்த ஸ்லோகத்தை 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து குங்குமம் அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.

7.கிரக தோஷ பாதிப்புகள் விலக :-

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக :|
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம  சசீ ரவிஹி :|
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||

இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday 10 November 2014

கடன் தீர உதவும் ஆன்மீக ரகசியங்கள்

                                                                     வாழ்க வளமுடன்





கடன் தீர்க்கும்  கணபதி மந்திரம் 

ஓம்| கணேசாய | ருணம் சிந்தி வரேண்யம் | ஹூம் நம பட் || 

இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர்  தலை உச்சியில் முத்திரை போட்டு ''ஓம் ஸ்ரீ கனகரிஷியே நமஹ'' என்று 3 தடவை சொல்லி மந்திரம் பலிக்க வேண்டிக்கொள்ளவும்.

கிழக்கு முகமாக அமர்ந்து  குறைந்தது 27 தடவை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபிக்கலாம்.

பிரயோகம் :-

இரவில் அல்லது பகலில் யாரும் பாராமல் இருந்து விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.

எண்ணிக்கை கூடக்கூட கடன் தீர்ந்து எல்லா நிலைகளிலும் விருத்தி உண்டாகும்.

90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.

கணபதி ஹோமம் முடிந்ததும் கணபதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச் சாம்பலை வெற்றிலையில் நெய் விட்டு தர்ப்பையை கருக்கி வைத்த மையை  அணிந்து வரவும்.


2.ஸ்ரீ சங்கடஹர கணபதி பிரயோகம் :-

சங்கடஹர சதுர்த்தி அன்று அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சகரிடம் சொல்லி மறுநாள் அந்த மாலையில் கொஞ்சம் வேண்டும் என்று வாங்கி அந்த அருகம்புல்லில் கொஞ்சம் மட்டும் எடுத்து  ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த  நீரை  வீட்டில் உள்ளோர் முகத்தில் தெளித்து பின்னர் வீடு முழுவதும் தெளித்து விட்டு மீதம் உள்ள  அருகம்புல்லை வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு துணியில் சுற்றி வீடு,அலுவலகம் ,கடைகளில் சாமிபடத்தின் முன்னால்  அல்லது  ஈசான்ய மூலையில் வைக்கத் தரித்திரம், பீடை, காரியத்தடை  விலகி சுபிட்சம் உண்டாகும்.


ஸ்ரீ சங்கடஹர கணபதி மந்திரம் :-

ஒம் நமோ ஹேரம்ப மதமோதித |
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய|
ஹூம் பட் ஸ்வாஹா || 

சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.


3.ஸ்ரீ பைரவ மந்திரம்

தேய்பிறை அஷ்டமி  தோறும் சிவாலயத்தில் உள்ள பைரவருக்குப் பாலாபிசேகம் செய்து அந்த ஆலயத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபிக்கத் தொடங்கவும்.

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன  பைரவ மந்திரம்

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணாகர்ஷன பைரவாய ஹூம் பட ஸ்வாஹா  

ஸ்வர்ணாகர்ஷன பைரவ யந்திரத்தை வெண்ணிற அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும். மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.


செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1:30 மணிக்குட்பட்ட நேரத்தில்  கடன் தொகையில் ஒரு சிறு பகுதியையாவது திரும்பச் செலுத்தவும்.விரைவில் கடன் தீரும்.


செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பச்சை நிற பட்டுத் துண்டு வாங்கி பன்னீர் கலந்த தண்ணீரில் அலசிக் காயவைக்கவும்.மறுநாள் புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அந்தத் துண்டில் சிறிது கிழித்து அல்லது வெட்டி அதில் சிறிது வெந்தயம் போட்டுப் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். தொடர்ந்து பணவரவு உண்டாகும்.

             வாழ்க வையகம் !!!                                          வாழ்கவளமுடன் !!!

M.சூர்யா 
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072  / 9788493072

ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com