Tuesday 29 December 2015

வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்



வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1
வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்
ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்


விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.


அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம் 

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |
என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 20 December 2015

மன விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் |
மஹாலக்ஷ்மீம் மம வாஞ்சிதார்த்த சித்திம் |
குரு குரு ஸ்வாஹா ||

 இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஜெபிக்கத் துவங்கி 23 ஆயிரம் தடவை ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகி நமது விருப்பம் நிறவேற ஏற்ற சூழல் உருவாகும்.

ஜப ஆரம்பத்தில் உங்கள் நோக்கம் இன்னதென்று குறிப்பிட்டு அது நிறைவேறும் பொருட்டு இம்மந்திரம் ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து பின் மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்..

ஜப ஆரம்பத்தில் விளக்கேற்றி ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி இத்தீப ஜோதியில் வந்தருள வேண்டும் என்று ஊதுவத்தி காண்பித்து 3 தடவை வேண்டவும்.பின்னர் விளக்கின் பாதத்தில் சந்தனம் ,பன்னீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்த நீரைக் கொஞ்சம்  விட்டு விளக்கிற்குச் சந்தனம் குங்குமம் வைக்கவும்.
                                          முதல் நாள் மற்றும் கடைசி நாள் சிறப்பாக நைவேத்யம் படைத்துப் பூஜிக்கவும். மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடலாம்.


வீட்டில் காலை மாலை சந்தி வேளையில் நறுமணம் வீசும்படி சாம்பிராணி அல்லது ஊதுவத்தி ஏற்றிவைக்கவும்.

ஆவாஹனாதி பூஜை விதிகள் அறிந்தவர்கள் முறைப்படி பூஜிக்கவும்.


23,000 ஜெபம் முடிந்து வேண்டிய காரியம் பலிக்கும் வரை இந்தக் காரியம் நடைபெற வேண்டி இம்மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.

ஜெப காலங்களில் சைவ உணவை மேற்கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com