Wednesday 14 September 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி சென்னையில்

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி

25.09.2016 ஞாயிறு அன்று சென்னையில் 

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்கள்

M.சூர்யா,திருநெல்வேலி மற்றும் திரு.அலிபாய்,திருநெல்வேலி

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மத,இஸ்லாமிய,மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்..
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 

10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள். 

12.எந்தத் தீயசக்திகள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கவும், உங்கள் பிரச்சனைகள் யாவற்றுக்கும் அலிபாய் அவர்களிடம் கேட்டுத் தீர்வுகளைப் பெறலாம்.


வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.



M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!

பயிற்சி நாள் :- 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,500 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் மண்டபத்திற்கு வந்தே குளித்து முடித்து தயாராகிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

K.M.L. நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர்  - ரெட்ஹில்ஸ் ரோடு 
புதிய லட்சுமி புரம்
கொளத்தூர் 
சென்னை 600099
9442193072 / 9788493072  
பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் : ரெட்டேரி சிக்னல் 

வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளவும்.
திரு.சக்திவேல்  - 9841530789

கீழ்க்கண்ட என்னுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 1,500 டெபாசிட் செய்துவிட்டுத் தகவல் தெரிவிக்கவும். 

வங்கியில்பணம்செலுத்தமுடியாதவர்கள்நேரில்வந்து கட்டணம் செலுத்தலாம்.

M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,                                                           TIRUNELVELI BRANCH,A/C NO.32986914404
IFSC CODE:SBIN0000932 BRANCH CODE:932

--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Monday 12 September 2016

சர்வ ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ காளிதேவி மந்த்ரம்


காளி மந்திரங்களில் அனைத்தும் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் ஜெபித்து சித்தி செய்யக் கூடியதல்ல.ஆனால்,இம்மந்திரம்  சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுத்து வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்து தெளிய வேண்டிய எல்லா இன்பங்களையும் நிறைவாகக் கொடுத்துப் பின் சாதகனை ஆன்மீக உயர்வுக்கு அழைத்துச் செல்லும்.இது லட்சுமி மந்திரங்களுக்குச் சமமானது விரைவாக பலன் அளிக்கக் கூடியது.


ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று ஜபம் ஆரம்பம் செய்வது நல்லது.


மந்திரம் :-
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் காளிகே க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Saturday 10 September 2016

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்



மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம்  பரமேஸ்வர்யை நமஹ


இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-


ஐம் இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின் அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம்   வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.

க்லீம் -  இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம்  - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம்  - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம்  - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள் சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.


இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.

இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து  குறைந்தது 108 எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும்   நாட்களில் வீட்டில் வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

எதுவும் குறைவில்லாதபடி வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Thursday 8 September 2016

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம்

தினமும் ராகு காலத்தில் ராகு பகவானையும்,துர்க்கையையும் வழிபட்டு வாருங்கள்.

ராகு மந்திரம்

ஓம் ப்ராம்  ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராகுவே நமஹ

துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
     

Thursday 1 September 2016

மனம் விரும்பியபடி மனைவியும்,மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்






ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று சுக்ர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளைப்  பேப்பரில் மாதுளை மரக்குச்சியினால் அஷ்டகந்தத்தைத் தொட்டு வரைந்து கொள்ளவும்.அதற்கு ஊதுவத்தி காண்பித்த பின்  கற்பூரம் ஒன்றை ஏற்றி அதில் அந்த யந்திரத்தை எரித்து விடவும்.அந்தச்சாம்பலை  ஏதாவது பழங்கள் காய்க்கும்  மரத்தின் வேர்ப் பகுதியில் தூவி விடவும்.இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி செய்யும்.இந்த பூஜைமுறையைச் செய்யும் பொழுது கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே செய்யவும்.

இதைச் செய்த பின் தினமும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வர திருமணத் தடை நீங்கி மனம் விரும்பும் படி மனைவியும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியோடு கூடிய வாழ்க்கையும் ஏற்படும்.



மந்திரம் :-

ஓம் மனோரமாம் பார்யாம் தேஹி மே ஸ்வாஹா ஹ்ரீம் ஓம்  

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com