Tuesday 26 January 2016

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்




உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம் 



   


வாழ்கவளமுடன்

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 21 January 2016

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்



தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான எந்திரங்கள் எண் யந்திரங்களே .குறிப்பிட்ட பலன்களைப் பெரும் விதமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பீஜ மந்திரங்களின் நியூமராலஜி கணக்கின் படி எண் யந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

கீழே உள்ள யந்திரங்களைச் செம்புத் தகட்டில் எழுதினால் பலன் அதிகம். முடியாதவர்கள் சுத்தமான வெள்ளைப் பேப்பரில் சிகப்பு மையால் அல்லது குங்குமத்தால் எழுதி வைத்துக்கொள்ளவும்.பின்னர் யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து விளக்கில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை எழுந்தருள வேண்டி பால்,பழங்கள்,கற்கண்டு,பாயசம் வைத்து யந்திரத்தித்தைச் செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் குறைந்தது 27 தடவையாவது கீழே உள்ள மந்திரம் ஜெபித்து அர்ச்சித்து வைத்துக் கொள்ளவும்.

ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்| லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச |மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||  

எண் 1ல் உள்ள யந்திரத்தைப் பர்சிலும் எண் 2 ல் உள்ள யந்திரத்தைப்  பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில்  இடத்தில் வைத்துக் கொள்ளவும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Saturday 16 January 2016

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வர




ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அரசமரத்தில் இருந்து 11 இலைகளைப் பறித்துப் பன்னீரால் சுத்தம் செய்து  செஞ்சந்தனத்தை அரைத்துக் குழைத்து அதைக் கொண்டு அந்த இலைகள் ஒவ்வொன்றிலும் "ராம் ராம்"  என்று 4 தடவை எழுதவும்.பின்னர் அந்த 11 இலைகளையும் அனுமன் விக்ரகம் உள்ள ஏதேனும் கோவிலில் அனுமனின் பாதத்தில் வைத்து வணங்கிக் கொள்ளவும்.


இந்தப் பரிகாரத்தைத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் சரியாகி நல்ல நிலைக்கு வரும்வரை செய்துவரவும்.இடையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏதாவது ஒரு திங்கள்கிழமை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.முடிந்த திங்கட்கிழமைகளில் செய்து வர நற்பலன்களைக் காண்பீர்கள்.





வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Wednesday 13 January 2016

துஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்திரம்



சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிக்கும் போதோ அல்லது சில தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் பொழுதும் எதிர்பாராத ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.எனவே பூஜை அல்லது மந்திர ஜபம் செய்யும் முன் விபூதியை கையில் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 11 தடவை ஜெபித்து கிழக்கு,தெற்கு,மேற்கு,வடக்கு என்று நான்கு  திசைகளிலும் பூமி  மற்றும் ஆகாயத்திலும் சிறிது தூவிப் பின்னர் தலை உச்சியிலும்,நெற்றியிலும் இட்டுப் பின்  அமர்ந்து பூஜை,ஹோமம்,ஜெபம் செய்ய எந்த தீய சக்தியும் தேவதையும் உங்களுக்குத் தீங்கு செய்ய இயலாது.


ஜோதிடர்களும் குளித்து முடித்து ஜோதிடம் பார்க்க  இம்மந்திரத்தை ஜெபித்த பின் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவர்களை உள்ளே அழைத்துப் பலன் கூறவும். ஏன் என்றால் தீய சக்திகள்,பேய்,பிசாசு,தோஷம்,பில்லி,சூன்யம்,ஏவல் போன்றவற்றால் கஷ்டம் அனுபவிப்பவர்கள் உங்களை நாடி வந்து பலன் கேட்க வரும் பட்சத்தில் அவர்களிடம் உள்ள சக்திகளாலோ,தோஷத்தாலோ உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.எனவே இதைச் செய்து கொள்ள உங்களுக்கு கவசமாக விளங்கும்.


வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நாளாகப் பார்த்து 11 நாட்களுக்குத் தினமும் 1008 தடவை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.பின் மேற்கூறிய படித் தேவையான நேரங்களில் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாழவும்.


திசைகட்டு மந்திரம் 

வஜ்ரக்ரோதாய மகாதண்டாய தச திஷோ பந்த் பந்த்  ஹூம் பட் ஸ்வாஹா ||



வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்




உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.


1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி  மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப்  பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை  ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள   மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை  தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்






உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.


1.வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அம்பாள் விக்ரகம் அல்லது படத்தின் முன் பஞ்சு அல்லது தாமரைத் தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி  "ஓம் ஆனைமுகன்  வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக" என்ற துதியை 3 தடவை சொல்லி விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில்  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் " என்ற மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.


ஜெபித்து முடித்த பின் திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளவும்.


அந்தக் குங்குமத்தை ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழில் எடுத்து வைத்துக் கொண்டு,தினமும் குளித்து முடித்த பின் நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.


2. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.


3.ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள்  செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


4.ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


குங்குமப்பூ 


5. 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் குளிக்கும் நீரில் கொஞ்சம் குங்குமப்பூ போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வர விரைவில் திருமணமாகும்.


பிரிஞ்சி இலை 



6.ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும்.



7.சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனீச்வரரால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072



Friday 8 January 2016

தொழில் விருத்தி தரும் ஜன ஆகர்ஷண யந்த்ரம்





மலேசியா ,தாய்லாந்து,இந்தோனேசியா,சிங்கப்பூர்,இந்தியா,வங்காளதேசம்   போன்ற நாடுகளில் அனைத்து மதத்தினராலும் பயன்படுத்திப் பலன் கண்டுவரும் ,தொழில் ஸ்தாபனங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தி உள்ள   ஜன ஆகர்ஷண சுலைமான் யந்திரம்.இது சாதாரண பேப்பரில் வரைந்து உருவேற்றப்பட்டிருந்தாலும் நிறைந்த பலன் தரக் கூடியது.


பலரும் இந்த யந்திரத்திற்குத் தூபம் காண்பித்துப் பூஜித்து வந்ததன் பலனாகத் தங்களது கடை,தொழில் ஸ்தாபனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகஅளவு வரத் துவங்கிப்  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.



விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட செல்போனுக்குத் தொடர்பு கொண்டு தகவல் பெறவும்.ஒரு வாரத்தில் லேமினேஷன் செய்து அனுப்பி வைக்கப்படும். அத்துடன் பயன்படுத்தும் முறைகள் குறித்த கையேடும் அனுப்பி வைக்கப்படும்.     


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /97884930472


Tuesday 5 January 2016

செல்வவிருத்தி தரும் தாந்த்ரீகப் பிரயோகம்




தொடர்ந்த பணப்புழக்கமும்,செல்வ நிலையில் உயர்வும் தரும் இந்த தாந்த்ரீக பிரயோகம் மிக எளிமையான ஆனால் வலிமையான் ஒன்று.இதை அன்பர்கள் யாவரும் செய்து பலன் பெற வாழ்த்துகிறேன்.

இதைச் சங்கடஹர  சதுர்த்தி அன்று வெள்ளை அல்லது மஞ்சள் நிற விரிப்பு விரித்துக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து செய்யவும்.

தேவையான பொருட்கள் :-
மஞ்சள் துண்டு ஒன்று
மஞ்சள் காட்டன் அல்லது பட்டுத் துணி
தேங்காய் ஒன்று
கொட்டைப்பாக்கு ஐந்து



கொட்டைப்பாக்கையும் தேங்காயையும் மஞ்சள்பொடி தடவி வைக்கவும். பின்னர் மஞ்சள் துண்டு,தேங்காய்,ஐந்து கொட்டைப்பாக்கு இவற்றை மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கட்டவும்.அதற்குக் கற்பூரம், சாம்பிராணி தூபம், ஊதுவத்தி தூபம் கட்டவும்.இந்தப் பிரயோகத்தைச் செய்யும் பொழுது மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ  "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹா" என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே  செய்யவேண்டும்.  

பின்னர் சக்தி வாய்ந்த இந்த செல்வவசியத் தேங்காய்முடியை வீடு அல்லது கடையில் சுத்தமான இடத்தில் வைக்கச் செல்வம் பெருகத் துவங்கும்.இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம்.வீட்டாரைத் தவிர வெளி நபர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச்  செய்யவும்.வெளிநபர்கள் யாரிடமும் சொல்ல விரும்பினால் செய்த பின்னர் சொல்லிக் கொள்ளலாம்.
தினமும் அல்லது சங்கட சதுர்த்தி,திங்கள்கிழமை,வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் அதற்கு கற்பூரம் ,ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காட்டி வர சக்தி குறையாமல் இருக்கும்.

வாழ்க வையகம்  || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072
Whatsapp: 9788493072
Youtube Channel: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw