Thursday 17 August 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - கரூர் மாவட்டம் குளித்தலையில் 20.08.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு 




பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 

2.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.

3.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்களின் ஆன்மீக ரகசியங்கள்.

4. நமது சூக்கும உடலில் உள்ள 7 சக்கரங்களையும் தூய்மை செய்து  சக்தியூட்டும் பயிற்சிகள்.

5.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.

6.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.

7.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.

8.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.

9.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.

10.செல்வ வளம் பெற ஜெபிக்க வேண்டிய மந்திரங்களும்,பின்பற்ற 
வேண்டிய விதிகளும்.


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹீலிங் மற்றும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தூய்மை செய்து அவற்றின் இயக்கம் சரி செய்யப்படும்.  


தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோமாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  20.08.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : 

அரசு வழக்கறிஞர்.Mr.நாகராஜன் 
பழைய கோர்ட் தெரு 
குளித்தலை 
கரூர் மாவட்டம்  
தொலைபேசி:7010554355  /  8903673696

குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்.

குளித்தலை பேருந்து நிலையம் அருகில். 

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் விபரம் பற்றி அறிய 7010554355 அல்லது 8903673696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

மொபைல்   : 9442193072
வாட்ஸ்அப்  : 9788493072

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 



Friday 4 August 2017

ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்த்ரம்


ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்த்ரம் 

ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே
ஸ்ரீ காமேஸ்வர்யை தீமஹி
தந்நோ ஷ்யாமளா ப்ரசோதயாத்


வெள்ளிக்கிழமை காலை அல்லது இரவு சுக்ர ஹோரையில் குளித்து முடித்து ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் குங்குமம் பரப்பி இம்மந்திரத்தை வெற்றிலைக் காம்பால் எழுதி 108 தடவை ஜெபித்து அந்தக் குங்குமத்திற்குத்  தூபம்,தீபம்,கற்பூரம் காட்டிய பின் ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொள்ளவும்.
(வெள்ளிக் குங்குமச் சிமிழ் சிறப்பான பலனைத் தரும்).

இம்மந்திரம் ஜெபித்து உருவேற்றிய குங்குமம் சர்வ வசீகரம் தரும்.

தம்பதிகள் அணிந்து வர அன்யோன்யம் அதிகரிக்கும்.

தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் அணிந்து கொள்ள அதிகமான வாடிக்கையாளர்களை  ஈர்க்கலாம்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP : 9788493072
ms.spiritual1@gmail.com 

Wednesday 2 August 2017

செல்வவிருத்தி தரும் ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம்




இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கி பொன்,பொருள் சேர்க்கையுடன் வளமான வாழ்வு கிடைக்கும்.


இம்மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது,

ஓம் ஸ்ரீ பார்கவ ரிஷியே நமஹ என்று 3 தடவை சொல்லி எனக்கு இந்த மந்திரம் பலிக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று பார்கவ ரிஷியை வேண்டிய பின் மந்திரம் ஜெபிக்கவும்.




ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம் 

ஓம் க்ஷ்ம்ர்யூம்  | க்ஷிப்ர கணபதயே | ஸ்வர்ண கேஹே வ்யவஸ்திதாய |
ஸ்வர்ணப்ரதாய | க்லீம் வஷட் ஸ்வாஹா || 


அன்பர்களின் வசதிக்காக மந்திரம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது 

OM KSHMRYOOM KASHIPRA GANAPATHAYE SWARNA GEHE WYAVASTHITHAAYA SWARNA PRATHAAYA KLEEM VASHAT SWAHA


சதுர்த்தி அன்று ஆரம்பிக்கவும்.(உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளாக இருக்க வேண்டும்.)

விநாயகர் படம் அல்லது விக்கிரகம் முன் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.
முதல் நாள் சுண்டல்,கொழுக்கட்டை,அவல்,பொரிகடலை, அச்சுவெல்லம், பழங்கள் வைத்து சிறப்பாக பூஜை செய்யவும்.அருகம்புல்லால் அர்ச்சிக்கவும்.


அடுத்து வரும் நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்யவும்.

சதுர்த்தி, சங்கடஹர  சதுர்த்தி நாட்களில் நைவேத்யம் சிறப்பாகப் படைத்து வழிபடவும்.

ருத்ராட்சம் அல்லது ஸ்படிக மாலையால் ஜெபிக்கவும்.


விரைவான பலன் பெற பிரயோகம்:

வெள்ளெருக்கு வடக்கு வேரில் செய்யப்பட்ட கணபதிக்கு ஆவாஹனாதி பூஜைகள் செய்து அவர் முன் அமர்ந்து இம்மந்திரம் ஜெபித்து வர சகல காரியத் தடைகள்,ஏவல்,பில்லி,சூனியம்,தீவினைகள் விலகி உயர்வான வாழ்வு அமையும்.


நன்றி,வாழ்க வளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE:9442193072
WHATSAPP : 9788493072