Friday 27 December 2013

ஸ்ரீ வாராஹி வழிபாடு

                                    





கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே|| 

அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .

ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள் .எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள்.எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ''எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்,வாத,பித்த வியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள் :-

புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்:-

தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

மாதுளம்பழம் மிகச் சிறப்பு.



ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம்:-

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹ|
ருந்தே ருந்தினி நமஹ|
ஜம்பே ஜம்பினி நமஹ|
மோஹே மோஹினி நமஹ|
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர்  முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||


ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை -லகு வார்த்தாளி
உபாங்க தேவதை :-ஸ்வப்ன வாராஹி
பிரத்யங்க தேவதை :திரஸ்கரணி

ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம் :-

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நமஹ|| 

இவள் ஸ்ரீ மகாவாராஹியின்  அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம்.இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட்ட:  ட்ட:  ஸ்வாஹா||

அல்லது 

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட்ட:  ட்ட:  ஸ்வாஹா|| 

இவள் ஸ்ரீ  மகாவாராஹியின்  உபாங்க தேவதை.இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை,தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக்  காப்பாள்.இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால்  11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை நிறைவேற்றி  ,பிரச்சனைகளைத் தீர்ப்பாள்.இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர்.


ஸ்ரீ திரஸ்கரணி  மூல மந்திரம் :-

ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரே|சகலபசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா||    

இவள் மாயைக்கு அதிபதி .இவளை வழிபட மாயை நீங்கும்.மனகுழப்பங்கள் தீரும்.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-

1.வாக்கு வன்மை,சபைகளில் பேர் பெற,கல்விஞானம் பெற:-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||

2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-

ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||  

3.செல்வவளம் பெருக:-

க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

5.எல்லா வகையான பயமும் நீங்க :-
    
ஓம் ஹ்ரீம் பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி|சர்வ பூதப் பிரேத பிசாச பயங்கரி |சர்வ பயம் நிவாரய சாந்திர்ப்பவது மே  சதா||   

6.வறுமை நீங்க :-

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய  த்வம்சய||

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

1.பஞ்சமி 
2.தண்டநாதா
3.சங்கேதா 
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா 
6.வாராஹி 
7.போத்ரிணி 
8.சிவா 
9.வார்த்தாளி 
10.மகாசேனா 
11.ஆக்ஞா சக்ரேச்வரி 
12.அரிக்னீ  

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் நலம் பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்துத் தினமும் படித்து வரத் தேவை நிச்சயம் நிறைவேறும். 

காரியசித்தி ஏற்பட,பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை,யந்திர,மந்திர,ஹோமம் ,ரக்ஷை, உள்ளது .ஸ்ரீ அச்வாரூடா , ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள் ,அரசாங்க காரியங்களில் வெற்றி தருவதுடன் ,எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும் .பதிப்பின் நீளம் கருதி இத்துடன்  ஸ்ரீ மஹாவாராஹி உபாசனை  பற்றிய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.


வராஹி உபாசனை பல நன்மைகளையும் ,உடனடி பலனையும் தருவது.இதில் பல பிரயோக ரகசியங்கள் உள்ளன.எனவே, முறைப்படி சாப நிவர்த்தி செய்து தீக்ஷை பெற்று ஜெபிப்பது உத்தமம்.

கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மஹா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே|| 

வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் ||


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072
ms.spiritual1@gmail.com

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம் 2

மனமும்,விழிப்புணர்வும் 
மனம் நம்  நண்பனாக வேண்டுமானால் நாம் அதனோடு இணக்கமான உறவு  கொண்டிருக்கவேண்டும்.இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே அதன்  அனைத்து முகங்கள் ,பரிமாணங்களையும் அறிய முடியும்.அதன் பின்னே தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.

எப்படி????........ பார்க்கலாம் .

புத்தரிடம் ஒருமுறை ஒரு சீடர் "இன்பம்,துன்பம் என்றால் என்ன? அதன் உண்மை நிலை என்ன?"

"நம் பார்வையில் தான் உள்ளது.இருந்தாலும்,கொஞ்சம் விளக்குகிறேன்.
உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்".

"சரி அப்படி என்றால் நம் மனம் போன போக்கில் நடப்பது என்று அர்த்தமா?"

"இல்லை.முதலில் நீ என்றால் என்ன? நீ உன் பெயரா,உடலா, பிராணனா மனமா எது நீ என்று கண்டுபிடி .ஞானிகளின்  கூற்றை அப்படியே நம்பாதே, வெறும் புத்தகங்களைப் படித்து விட்டுப் பிதற்றாமல் உன் சொந்த அனுபவத்தில் அவற்றை அறிந்து கொள்.அப்பொழுது  மட்டுமே நான் என்றால் என்ன என்று முதன்முறையாக அறிய வருவாய் .அந்தத் தெளிவு ஏற்பட்ட பின் நான் கூறியதை (உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்") மறுபரிசீலனை செய்து பார்."

சட்டமோ,சமூகமோ நம்மைத் தண்டிக்காது என்ற ஒரு நிலை வந்தால் நம்மில் எத்தனை பேர் உண்மையான ஒழுக்கத்தோடு இருப்போம்?.உள்ளபடியே எனக்கு ஒழுக்கத்தில் உடன்பாடு இல்லை.ஒழுக்கம் ஒரு காலத்தில் நம் சுபாவமாக மாறினால் சரி ஆனால் நாம் மரணம் வரை ஒழுக்கத்தை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறோமே அன்றி ஒழுக்கம் உள்ளவர்களாக இல்லை.உதாரணமாக, நான் குளித்து 10 நாட்கள் ஆகின்றன என்று வைத்துக்கொள்வோம் ஒரு கோட் வாங்கி அணிந்து கொள்கிறேன் என் உடலைத் தாண்டி நாற்றம் வெளியில் அதிகம் வராமல் அந்த கோட் தடுக்கிறது.மீண்டும் 10,20 நாட்கள் குளிக்கவில்லை இன்னும் ஒரு கோட் அதன்மேல் அணிந்து கொள்கிறேன். முன்போல்,இந்தப் புதிய கோட்டும் நாற்றம் வெளியில் அதிகம் வராமல் தடுக்கிறது.ஆனால,உள்ளுக்குள் நான் கெட்ட நாற்றம் வீசுபவனாகவே இருக்கிறேன்.இது போல் நாம் ஒருவரை விஞ்சி ஒருவர் நல்லவராகக் காண்பித்துக்கொண்டும்,நடித்துக்கொண்டும் இருக்கிறோமே தவிர  உண்மையில் நாம் அவ்வாறு இல்லை.

ஏன்.??

ஒழுக்கம் ஊருக்கு ஊர்,சமயத்திற்குச் சமயம் மாறுபடும்.புத்த மதத்தில் மட்டும் 13,000 க்கும் அதிகமான செயல் திட்ட ஒழுக்க முறைகள் உள்ளன என்று ஓஷோ கூறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகள் இருளடைந்த ஒரு அறைக்குள்ளோ,குகைக்குள்ளோ    ஒரு மெழுகுவர்த்தியோ ஒரு விளக்கோ ஏற்றினால் அந்த ஒளி சுடர் விட்டுப்  பிரகாசிக்க பல நாட்களோ ,அதிகநேரமோ பிடிக்காமல் உடனே அதன் ஒளி  அங்கு பரவி வெளிச்சம் தரும்.அதுபோல், விழிப்புணர்வு ஒன்றே உண்மையான ஒழுக்கம்.பல புத்தகங்கள்,அறிவுரைகளைப் பின்பற்றிப்  பல  நூறு ஒழுக்க விதிகளைப் பின்பற்றுகிறேன் என்று இயல்பு மீறி வாழக்கூடாது.

உங்களில் ஒருவரின் கைரேகை இந்த உலகில் இப்போது உள்ள, இதற்கு முன் வாழ்ந்த யாருடனும் பொருந்தாது.உங்களைப்போல் இன்னொருவர் இல்லை, உலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் என்றுமே இருந்ததில்லை. எனவே, பொதுவான ஒழுக்கம் என்று ஒன்றே கிடையாது.ஒவ்வொருவரும் வேறு, வேறு மனோ இயல்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

முன் பதிவில் கூறியபடி,அவரவர் கர்ம வினை மனதின் அடியாழத்தில் பதிந்துள்ளது இதையே சம்ஸ்காரம் என்கிறோம்.அது இறைநியதிப்படி உரிய காலங்களில் எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் பரிணமிக்கிறது.இதைப் புரிந்து கொண்டு மனதில் நன்கு இருத்த வேண்டும்.
எல்லாமே,கர்மாவின் படியே நடக்கிறதென்றால் பின் ஆன்மீகத்தில் பல மகான்கள் நம்மை விட மிக மேலான நிலைகளை எட்டி இருக்கிறார்களே என்ற கேள்வி எழுவது நியாயமே.அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வாழ்க்கையில்,எந்த வகையான முன்னேற்பாட்டைச் செய்துவிட முடியும்,எந்த வகையானஒழுக்கத்தின் மூலம் சரியானபடி   வாழ்ந்து விடமுடியும்.

ஒழுக்கம் ஒரு தற்காலிகமான உதவி ,ஆனால் விழிப்புணர்வு கர்ணனின் கவசம் போல் நம்முடன் எப்போதும் இருந்து உதவும் அதோடு மட்டுமின்றி மேலும் கர்மப் பதிவுகளை பெருக்கிக் கொள்லாமல் இருக்கவும் உதவும்.

தனியாக வீட்டில்  இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.பெரிய வீரன்,மெத்தப்படித்தவன் என யாராக இருந்தாலும் சரி,என்ன செய்வோம், உடனே டிவியை ஆன் செய்வோம் அல்லது பேப்பர் ,புத்தகம் என படிப்போம் ஆனால் சும்மா இருக்க  நம்மில் எத்தனை பேரால் முடியும். நண்பர்கள், உறவினர்கள் உட்பட யாருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசும்,நேரம் செலவிடும்  நாம் நம்முடன் நேரம் செலவிடுவது கிடையாது. ஏனென்றால் நம்மைக் கண்டு நமக்கே பயம்.

ஏனென்றால்,நாம் பிறர் முன் நமது நல்ல முகத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் ,தீய பதிவுகள்,எண்ணங்கள் நமக்குள் அப்படியே உள்ளதால் நாம் தனிமையில் இருக்கும் போதும்,தியானம் செய்யும் போதும் அந்த சம்ஸ்காரங்கள் மேல் எழுந்து வருகின்றன.இவற்றை நாம் தவம் செய்து அழிக்காத வரை நமக்கு மன அமைதி கிட்டாது. சரி,இதற்கு, என்ன செய்யலாம்?
தியானம் செய்யும் சமயம் இந்த வகையான சிந்தனைகள் வந்தால் அவற்றோடு சண்டையிடாமல்,உடன்படாமல் அந்த எண்ணங்களை சும்மா கவனித்தாலே போதும்.அவை வெளியேறி அவற்றின் வீரியம் குறைந்து விடும்.ஆங்கிலத்தில் சொல்வதென்றால் AT MEDITATION HOURS ''NEITHER CO-OPERATE ,NOR CONDEMN YOUR THOUGHTS" .

ஆரம்பத்தில் இது ஒரே நாளில் கைவராவிட்டாலும், தொடர்ந்த பயிற்சியினால் இது கைவரும்.

குழப்பமான மனநிலையில் எடுக்கும் முடிவுகள் குழப்பத்தையே கொண்டு வரும்.இது வரை பல்லாயிரம் பேரைத் தவறாக எண்ணியிருப்போம், கோபத்தில் அடிக்க அல்லது திட்ட நினைத்திருப்போம் ஆனால் செய்திருக்க மாட்டோம் அதன் பதிவுகள் அடுத்து எவர் மேலாவது காமமோ, கோபமோ வந்தால் முன்னதாக அடக்கிவைத்துள்ள காமம்,கோபத்தின் எஞ்சிய பதிவுகளுடன் சேர்ந்தே வெளிப்படும் எனவே நம்மால் அந்த உணர்வுகளை கவனமாகக் கையாள முடிவதில்லை.முந்தைய பதிவில் சொன்ன மூச்சைக்  கவனிக்கும் பயிற்சியை முறையாய்ச் செய்து வர வாழ்வைத் தெளிவுடன் நடத்தத் தேவையான விழிப்புணர்வும் அமைதியும் உண்டாகும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 8 December 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம்,கர்ம வினையும் கடக்கும் வழிகளும் 1

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்  - மனம்:-

முந்தைய பதிவுகளில் இரண்டு தளங்களான உடல்,ப்ராணன் பற்றி ஓரளவு தெளிவு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.இப்பொழுது அதற்கு அடுத்த தளமான மனம் பற்றி பார்க்கலாம்.

பிராணனை விட அதி நுட்பமான சக்தி நிறைந்த அடுக்கே மனம்,மனம் செயல்படும் வரை மட்டுமே நம் உடலில் உயிர் நிற்கும்.

உதாரணமாக:-
உடல்+மனம் = உயிர்
உடல்-மனம் = பிணம்

கோமா நிலையில் உள்ளவர்களுக்கும் கூட மனம் உறக்க நிலையில் இருக்கும்.மனம் அறவே தன் செயல்பாட்டை நிறுத்தி விட்டால் மரணம் ஏற்படும்.

யாவற்றையும் அறியவும்,அறிந்ததை நினைவில் இருத்தவும், அவற்றைத் தேவையான தருணங்களில் நினைவு கூர்ந்து செயல்படவும் மனம்  அவசியம். மனம் இன்றி எதுவும் செய்ய முடியாது.

அநேகர் மனதை அடக்க வேண்டும் என்று கடினமாக முயற்சிக்கின்றனர் அப்படி அடக்கினால் மட்டுமே இறைவனை அறியவும்,ஆன்மீகத்தில் உயரவும் முடியும் என்று நினைக்கின்றனர்.உண்மை அதுவல்ல.மனதை அடக்க முடியாது அப்படி அடக்கியதாக நினைத்துக் கொண்டாலும் அது தற்காலிகமானதுதானே தவிர நிரந்தரமல்ல.

மனம் தன் இயல்பில் வெறும் களிமண் போன்றது அது  நன்மையானதோ தீமையானதோ இல்லை அது நடுநிலையானது.நாம் வாழும் முறையில் இருந்தே அது தன்னை சரியாகவோ,தவறாகவோ வடிவமைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் ஒரு நபரை அடிக்கின்றோம் நாமே இறுதியில் வெற்றி பெற்றோம் என வைத்துக்கொள்வோம்.இதில் நமக்கு அந்நியமான ஒருவரைத்  தாக்கி வெற்றி பெற்றோம்.இதற்குப் பதிலாகக் கண்ணாடியில் தெரியும் நம் உருவையே எதிரியாகப் பாவித்து அதைத் தாக்கினால் நம் கைகளில் கண்ணாடி உடைந்ததால் காயம் ஏற்படுமே தவிர அந்த உருவம் எந்த பாதிப்பும் இன்றி முன்போலவே இருக்கும்.அதுபோல நாம் மனதை வலிந்து அடக்கினால் மூளைக்கோளாறு,இயல்பாக வாழமுடியாமல் போய் வாழ்வே சாபமாகும்.

நண்பன் நம் சொல்லை கேட்பானா அல்லது எதிரி நம் சொல்லை கேட்பானா.நண்பனே கேட்பான்.எனவே முதலில் செய்ய வேண்டியது முறையான பயிற்சிகளின் மூலம் மனதை நட்பாக்கிக்  கொள்ளவேண்டும்.

மனதை ஏதோ எதிரியாகவும்,மிகத் தவறானதாகவும் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர் வினை உண்டு எனவே மனதை எதிரியாக நினைத்தால் அது உங்களிடமும் எதிர் இயல்பாக செயல்பட்டு இணக்கமற்ற சூழலை உண்டாக்கும்.

மனமும்,அதன் இயக்கத்தைப் பற்றிய தெளிவும் இல்லையென்றால் ஆன்மீகப் பயணத்தைச் சரியாகத் தொடங்கி நடத்தவோ,வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடவோ முடியாது.


கர்மவினை:-

கர்மா என்றாலே நம்மில் பலர் பயம் கொள்கின்றனர்.உண்மையில்,கர்மா என்ற சம்ஸ்கிருத சொல்லின் பொருள் செயல் என்பதே.

கர்ம வினை மூன்று வகை.

1.சஞ்சித கர்மா
2.பிராரப்த கர்மா
3.ஆகாம்ய கர்மா

1.சஞ்சித கர்மா - மனிதனாய்,மிருகமாய்,மரமாய் எனப் பல்லாயிரம் பிறவிகளில் நாம் வாழ்ந்த வாழ்வில் செய்த புண்ணிய,பாவங்களின் சேர்க்கையே சஞ்சித கர்மா.

2.பிராரப்த கர்மா - இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வந்த  வினைகள்

3.ஆகாம்ய கர்மா - இந்த ஜென்மத்தில் புதிதாகச் சேர்க்கும் வினைகள்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா எனப்படும் முற்பிறவிகளில் நீங்கள் செய்த நன்மை தீமைகளின் கணக்கு 80,000 நன்மைகள் 20,000 தீமைகள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1 லட்சம் பதிவுகள்.

எப்படி 3 வேளைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் உண்ண முடியாதோ அதுபோல் பல ஜென்மங்களில் செய்த கர்மாக்களை மொத்தமாய் இந்த ஒரு பிறவியிலேயே கழிக்கமுடியாது.எனவே   அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொண்டு (உதாரணமாக:ஒரு பத்தாயிரம் பதிவுகள்=8,000 நன்மைகள்,2,000 தீமைகள்) இந்த ஜென்மத்தை அனுபவிக்கப் பிறந்து வருகிறோம் இது பிராரப்த கர்மா.

இந்த ப்ராரப்த கர்மாவில் உள்ள பதிவுகளின்படி நம் வாழ்வில் நன்மை ,தீமைகள் நடக்கும்.அவை நடப்பதற்கான சூழல்,மற்றும் எண்ணங்களை ஏற்படுத்துவதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.
எனவே தெய்வங்களையோ நவக்ரஹங்களையோ திட்டுவதோ, குறை கூறுவதோ கூடாது.நாம் கொண்டு வந்த நமது சொந்த (கர்மா) செயல்களுக்கான பலன்களையே நாம் அனுபவித்துக் கழிக்க உதவுகின்றனரே அன்றி நம்மை வதைப்பது அவர்களின் நோக்கமல்ல.உதாரணமாக:நாம் பூர்வ ஜன்மத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிப்படைந்த சமயம் உதவி செய்திருக்கிறோம் என்றால் நமது ப்ராரப்த கர்மத்தில் அந்த பதிவு இருந்தால் அதற்கான நன்மை நமக்கும் தேவையான நேரத்தில் யாரிடமேனும் இருந்து உதவி வரும்.இதுபோல் நன்மை தீமைகளை அடையச் செய்வதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.எனவே அவர்களுக்கு கர்ம தாதா எனப்பெயர்.  

இங்கு தான் நாம் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வருகிறது.
பிறப்பு எடுத்து வந்தது முன்வினையில் ஒரு பகுதியைக் கழிக்க ஆனால் நாம் இந்தப் பிறவியில் மேலும் வினைகளைக் கூட்டவே செய்கிறோம்.அப்படிக்  கூடும் வினைகளுக்கே ஆகாம்ய கர்மா  என்று பெயர்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா = 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.
பிராரப்த கர்மா =10 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.
எஞ்சிய கர்மா சஞ்சிதத்தில் = 90000 இருக்கும்.

மனமுதிர்ச்சி இன்றியும் , இறை வழிபாடு என்ற பெயரிலும்  எந்த துன்பத்தையும் அனுபவிக்க மாட்டேன் அப்படி அனுபவித்தால் நீ என்ன வலிமையான தெய்வம் என்று இஷ்ட தெய்வத்தையோ இறைவனையோ குறை கூறி நிந்தனை செய்யும் அளவுக்கு மனப் பக்குவம் இன்றிக்  குழந்தைகளாகவே இருக்கிறோம்.என்னதான் இறைவழிபாடு செய்தாலும் சில கர்மாக்களின் பலனை நாம் அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இறைவழிபாடு அந்தக் கர்மாக்களைத் தள்ளி வைக்கும் ஆனால் முழுமையாகக்  காப்பாற்றாது இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்.தவமும் தியானமும் மட்டுமே அவற்றைக்  கடக்க உதவும்.

நமக்குச் சிறு வயது முதலே நம் பெரியவர்கள் மற்றும் சமுதாயத்தால் அனேக விஷயங்கள் இன்ன விஷயம் இப்படித் தான்,இதெல்லாம் செய்யக்கூடாது   எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி, எதைச் செய்யவேண்டும்,சரியாக வாழ்வது எப்படி எனக் கற்பிக்கக்  கூடியவர்கள் நம் குடும்பத்திலோ, வெளியிலோ யார் உள்ளார்கள் என்று தேடித்தான் பிடிக்க வேண்டும்.


வந்ததே கர்மாவைக் கழிக்கத்தான் நமக்கு வரும் நன்மையோ,தீமையோ எல்லோரும் செய்வது காரியமே காரணம் நமது கர்மங்களே என்று உணர்ந்து வாழ்வைச்  சரியாகவும்,விழிப்புணர்வுடனும் வாழ்ந்து தானம்,தவம்,தியானம் செய்து கர்மவினைச் சக்கரத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல ஏக பரம்பொருளும்,மகான்களும் நமக்கு அருள்புரிந்து வழிநடத்தட்டும் .

அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா-தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர ,காரியத்தடை நீங்க:-

பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர ,காரியத்தடை நீங்க:-




ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று அல்லது ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாபங்கள் தீரும், சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

காலைக்கடன்களை முடித்துக் குளித்தபின் ஈர  வஸ்திரத்துடன் சூரியனை  நோக்கி கைகூப்பி நின்று கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

மந்திரம்: ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்| சஹசிவ சூரியாய |வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா ||



குறிப்பு:
பித்ரு சாபம் மற்றும் பிற சாபங்களின் பாதிப்புகள் நீங்க ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து பரிகாரத்திற்குச் சரியான நேரம்  குறித்து  பரிகாரம், ஹோமம்,பூஜை, தானதர்மம் செய்ய முழு பலன் கிட்டும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072