Thursday 28 July 2016

மன அமைதியும்,வளமான வாழ்வும் தரக்கூடிய எளிய தாந்த்ரீக தியானம்.



ஆண்கள் புருவநடுவிலும் ,பெண்கள் அனாஹத சக்கரம் என்று கூறப்படும் நெஞ்சுக்குழியிலும் மனம் வைத்து அங்கு ஒரு ஜோதி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உள்மூச்சு இழுக்கும்  பொழுதும்,வெளிமூச்சு விடும்போது  ஹ்ரீம் என்ற மந்திரத்தை மனத்தால் ஜெபிக்கவும்.இதை 5 முதல் பத்து நிமிடங்கள் செய்து வரவும்.உங்களுக்கு லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நல்ல பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.அவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.அல்லது மாலை வேளையில் 5: 30 முதல் இரவு 9:30 மணிக்குள் செய்ய நல்லது.

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!


M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 27 July 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க



செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில்

லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம பாஹிமாம்  
உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரக்ஷமாம்

என்று ஜெபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீய சக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com




Tuesday 19 July 2016

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்

இது  பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால்  மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா || 

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com


புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம்

குறிப்பு :-   பிரம்மச்சாரிகள் அல்லது முழுநேர ஆன்ம சாதகர்கள் மட்டுமே இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.குடும்பஸ்தர்கள்,திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஜெபித்தால் முழுநேர யோகியின் மனோநிலை வந்து விடும்.எனவே குண்டலினி விழிப்பு,ஆன்மீக உயர்வு நாடுபாவரக்ள் ஜெபித்துப் பயன்பெறலாம்.இது வட இந்திய சாதுக்கள் பயன்படுத்தப்படும் மந்திரம்.

மந்திரம் 

ஓம் ஹ்ரீம் ஹூம் கே மச்சே க்ஷஹ ஸ்த்ரி ஹூம் க்ஷேம் ஹ்ரீம் பட் த்வரிதாயை நமஹ ||




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

பிறவித்தளை நீங்க,ஆன்மீக முன்னேற்றம் பெற மிருத்யுஞ்சய மந்திரம்


மிருத்யுஞ்சய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம் |
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி சம்சார பயநாசனம் ||

இந்த மிருத்யுஞ்சய மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வரச் சிவ சரணாகதி ஏற்பட்டு இல்வாழ்க்கைத் துன்பங்கள்,பயம்,சஞ்சலங்கள்,நோய்கள் யாவும் நீங்கிப் பிறவிப் பயனை அடைய வழிபிறக்கும்.

1,25,000 தடவை ஜெபிக்க மந்திர சித்தி ஏற்படும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்

மந்திரம்  1:

ஓம் காம் காமமாலினி  பதிம் மே வசமானய ட்டஹ  ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக்  கலவையைத் தொட்டு  இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும்  ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
 ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி  என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday 16 July 2016

சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்

ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி,தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும்.


சனீஸ்வர ஸ்லோகம்:-

கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |
சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |
நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே ரௌத்ரதேஹாய நமஸ்தே  சண்டகாயச |
நமஸ்தே  மந்த சஞ்சாய நமஸ்தே  சௌரயேவிபோ
நமஸ்தே  யம சஞ்சாய சனைஸ்சர நமோஸ்துதே |
 பிரசாத குரு தேவேச தீனஸ்ய ப்ரணதாஸ்யச |

வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Monday 11 July 2016

வாழ்வில் உயர்வான நிலை அருளும் ஸ்ரீ துர்கா மந்திரம்



இது தந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆவாஹன மந்திரம்.இம்மந்திரம்  எளிமையாக இருந்தாலும்  உங்கள் வாழ்வில் ஸ்ரீ துர்கா மாதாவின் அருளை ஆகர்ஷித்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க உதவக்கூடியது.

பூஜா விதிகள் :


இம்மந்திர ஜெபத்தை நவராத்திரியில் ஆரம்பித்து நவராத்திரி காலமான 9 நாட்களுக்கும் செய்யவேண்டும்..

துர்கா தேவியின் படம் வைத்து அதன் முன் விளக்கேற்றி ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

மஞ்சள் நிற ஆடை அணியவும்.

வடக்கு நோக்கி அமர்ந்து  ருத்ராக்ஷம் அல்லது ஸ்படிக மாலையால் காலையிலும் இரவிலும் 540 தடவைகள் ஜெபிக்க வேண்டும். (108*5=540).

பழங்கள் ,இனிப்பு வகைகள் நைவேத்யம் செய்யவும்.

ஜபம்,பூஜை முடிந்த பின் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

பூஜா காலங்களில் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.அது நிறைவான பலனை குறைக்கும்.



மந்திரம் 


ஓம் ஹ்ரீம் பகவதி ஆகச்ச ஓம் நமஹா 



வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Sunday 10 July 2016

பாதுகாப்பும் செல்வமும் தரும் ஸ்ரீ பைரவ மந்திரமும் ஹோமமும்





இது பைரவரின் நவாட்சர மந்திரம் இதை 14000 உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.பின்னர் பத்தில் ஒரு பங்கு அதாவது 1400 எண்ணிக்கை பால் கொண்டு ஹோமம் செய்தால் மந்திரம் பூரண சித்தியாகி விடும்.இதை பயன் கள் :-நம்மைச் சுற்றி நடக்கும் தீய சக்திகளின் தொந்தரவுகள்,தொடர்ந்த உடல் நலக் குறைபாடுகள்  நீங்கும்,உணவு,உடைக்குப் பஞ்சம் என்ற நிலை மாறி நிரந்தரமான பணப் புழக்கம் உண்டாகும்.


மந்திரம் 

ஓம் நமோ பைரவாய ஸ்வாஹா




வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Friday 8 July 2016

அதிகமான பலன்கள் தரும் யந்திரம்




இந்த யந்திரத்தை  எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை  வரிசையாகப் பார்க்கலாம்.


பிரயோகம் 1:-     ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச்  செய்யலாம்.இது போன்ற காரிய வெற்றிக்குச் செய்யும் பொழுது பூர்ஜபத்ரம் அல்லது தூய வெள்ளை பேப்பரில் அஷ்டகந்தம்  கொண்டு  மாதுளை மரக்குச்சியில் தொட்டு இந்த யந்திரம் வரையவேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்டி ஒரு தாயத்தில் போட்டு வலது கையின் மேல்பாகத்தில் அணிந்து கொள்ளவும்.குறிப்பிட்ட காரியம் நிறைவேறியபின் அதைக் கழட்டிப்  பூஜை அறையில் வைத்து விடவும். முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது அதே யந்திரத்தை மேற்சொன்ன முறைப்படி அணிந்து கொள்ளலாம்.


பிரயோகம் 2:-     வீடு மற்றும் அலுவலகத்தில் பேய்,பிசாசுகள்,கண்திருஷ்டி ,கேட்ட சக்திகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த யந்திரத்தாய் வீடு அல்லது அலுவலகத்தின் முகப்பில் எளிதில் பார்வையில் படும்படி வரையவேண்டும்.அஷ்டகந்தம் மற்றும் பசுநெய் கலந்து வரைய வேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்ட எல்லா தீய சக்திகளில் இருந்தும் காக்கும்.

பிரயோகம் 3:-     தோட்டம்,வயல் ,நர்சரி கார்டன் இவற்றில் விளைச்சல் அதிகரிக்க பிரயோகம் 1 ல் கூறிய முறைப்படி வரைந்து வயல் அல்லது தோட்டத்தில் புதைத்து வைக்க விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday 7 July 2016

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்




1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.

2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித்  தீபம்  ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை  எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.

3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.

4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.

5.ப்ரஹ்ம முஹூர்த்த  நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.

6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.

7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.

8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.

9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

10.கரித்துண்டுகளை  வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.

11.கூர்மையான பொருட்களை  அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com