Friday 29 April 2016

வாகனப் பாதுகாப்பிற்குப் பரிகாரம்



வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயின்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.


1 பாக்கு,1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1 ஸ்பூன் கருப்பு எள்,கொஞ்சம் சிகப்பு குங்குமம் இவற்றை ஒன்றை சேர்த்து  ஒரு சுத்தமான கறுப்புத்துணியில் போட்டு முடிச்சுப் போட்டு  அதை வாகனத்தில் பம்பரில் அல்லது முன்பகுதியில் எங்காவது கட்டி வைத்துவிடவும்.

இதை எந்த நல்ல நாளிலும் செய்யலாம் அமாவாசை அன்று செய்வது சிறப்பு.
ஏற்கனவே உள்ளது கிழிந்தோ,தொலைந்தோ போய்விட்டால் மீண்டும் ஒன்றைத் தயார் செய்து கட்டி வைத்துக் கொள்ளவும்.


                           வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Sunday 17 April 2016

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்



மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்

ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடியே அர்ச்சிக்கவும்.மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.அர்ச்சித்து முடித்த பின் அந்த தேங்காயை ஒரு மஞ்சள் துணியில்  முடிந்து கடை அல்லது பூஜை அறை அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.தினமும் சாமி படங்களுக்கு ஊதுவத்தி,கற்பூரம் காட்டும் பொழுது இதற்கும் காட்டிவரக் கடன்,வறுமை தீர்ந்து நிறைவான செல்வம் கிட்டும்.

மந்திரம்:

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத |
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ||


 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

துன்பம் தீர ,நினைத்தது நிறைவேற ஹனுமான் சாலிசா பிரயோகம்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளவும்.ஒரு சிகப்புநிற  காட்டன் நூல் வாங்கி அதை உங்கள் தலை முதல் பாதம் வரை அளக்கவும்.அந்தச் சிகப்பு நூலைத் தேங்காயில் சுற்றவும்.பின்னர் தேங்காயில் செந்தூரம் (ஆரஞ்சு நிறம்) கொண்டு ஒரு ஸ்வஸ்திக் வரையவும்.


பின்னர் அந்தத் தேங்காயைக் கையில் வைத்துக் கொண்டு  ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் குறைந்தது 3 தடவை அதிகபட்சம் 9 தடவை ஜெபிக்கவும்.ஜெபித்து முடித்த பின் அந்தத் தேங்காயை ஹனுமான் ஆலயத்தில் கொடுத்து விடவும்.உங்கள் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேறும்.மேலும்,வாழ்வில் பல துன்பங்கள்,தொடர் இழப்புகள், சரிவுகளைச் சந்தித்து வாழ்வா,சாவா என்ற நிலையில் உள்ளவர்களும் இதைச் செய்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்ய ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் காணலாம்.

http://anumar.vayusutha.in/sthuthi1.html





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com