Thursday 21 December 2017

காணாமல் போனவர்கள்,கடத்தப்பட்டவர்கள் மற்றும் பிறருடைய கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டவர்கள் விரைவில் திரும்பி வர / கிடைக்கச் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம்.




உங்கள் குடும்பத்தில் யாரேனும் கடத்தப்பட்டால் சட்டப்படியான முறையான நடவடிக்கைகளைச் செய்வதோடு, இந்தப் பரிகாரத்தையும் செய்ய விரைவில் அவர்கள் மீண்டு வர உதவியாக இருக்கும். 


தினம் அதிகாலையில் எழுந்ததும் தெற்கு நோக்கி நின்று பாதிக்கப்பட்ட நபரின் பெயரை 31 தடவை சொல்லிவர விரைவில் தீர்வு கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday 19 December 2017

புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தாந்த்ரிக பரிகாரம்



திருமணமாகி உங்கள் மகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பும் பொழுது ஒரு ஜாரில் தண்ணீர் நிரப்பி அதில் 11 மஞ்சள் போட்டு உங்கள் மகளின் தலையை 7 தடவை சுற்றிய பின் தண்ணீரை யார் காலிலும் மிதிபடாதபடி ஊற்றி விடவும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

அதிர்ஷ்டம்,அழகு,மன அமைதி தரும் வெள்ளி மோதிரம்


வலது கையின் சுண்டு விரலில் வெள்ளி அணிவதன் மூலம் பல நல்ல பலன்களைப் பெறலாம்.


1.ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.

2.மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.


3.தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும்,தொழில்,வியாபாரம்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம்.

4.வாழ்வில் செல்வ வளமும்,அதிர்ஷ்டமும் பெருகும்.

5.அழகும்,மன அமைதியும் உண்டாகும்.

6.கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

7.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.


8.கோபத்தைக் குறைத்து,வசீகர சக்தியை அதிகரிக்கும்.

9.மூட்டு வலி,மனநிலை பாதிப்பு,மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.   

10.மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Monday 11 December 2017

சர்வ கார்ய சித்தி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ப்லூம் ஐம் நம ஸ்வாஹா 



கிரஹணம் அன்றோ அல்லது ஒரு சுபமான திதியுடன் கூடிய  நாளில் இம்மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து 12,500 எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும்.

12,500 ஜெபத்தில் இம்மந்திரம் சித்தியாகி விடும்.


அதன் பின் மந்திரத்தைக் கீழ்க்கண்ட பிரயோகங்களுக்குப்  பயன்படுத்தலாம். 



1.எதிரிகள் தொல்லை நீங்கி நண்பனாக மாற


உங்கள் எதிரியின் முகத்தை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 7 தடவை ஜெபித்து வலது கையால் முகத்தை லேசாகத் தடவவும்.இதைச்  செய்து வர நமக்குத் தொல்லை தருபவர்கள் கூட மெல்ல மெல்ல  நம்  நண்பர்களாக மாறிவிடுவார்கள்.    

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளால் பிரச்னைகளைச் சந்தித்து வருபவர்களும் ஜெபிக்கலாம்.



2.காரியத்தடைகள் நீங்க 

முக்கியமான வேலைகளில் ஈடுபடும் முன் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின்னர் செயலில் இறங்க, காரியத் தடைகள் நீங்கும்.


3.வழக்குகளில் வெற்றி உண்டாக 

கோர்ட் கேஸ்,வாய்தா மற்றும் வழக்கு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் பொழுது இம்மந்திரத்தை 21 தடவை ஜெபித்த பின் ஈடுபட வெற்றி உண்டாகும்.



4.வெளியூர்ப் பயணம் சிறப்பாக அமைய

தொழில்,பணம் தொடர்பாக  வெளியூர்,வெளிமாநிலம் செல்பவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் முன் குளித்து முடித்து, அந்த ஊரின்  அருகில் உள்ள ஏதேனும் குளம்,ஏரி,ஆறு,கடல் இவற்றில் ஒன்றின் அருகில் அமர்ந்து  அல்லது நின்று 108 தடவை ஜெபித்த பின் திட்டமிட்ட நபர் அல்லது இடத்திற்குச் செல்ல சிறப்பான மரியாதையும்,தொழில் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியும்,உயர்வும் உண்டாகும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com  

Monday 4 December 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - தென்காசியில் - 10.12.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 



2.செல்வ வளம் பெற உதவும் எளிமையான மற்றும் விரைவான பலன் தரும் மந்திரங்களும்,விதிமுறைகளும்.



3.ஒன்று அல்லது இரண்டு மந்திங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெபித்து வருவதன் மூலம் அனைத்து வகையான நன்மைகளையும் வாழ்வில் பெறும் ரகசியம் 



4.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.



5.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்கள் அருளிய பயிற்சி முறைகள்.


6.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.


7.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.


8.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.



9.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.


10.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.


-------------------------------------------------------------------------------

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

*************************************
வகுப்பு முடிந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்றால் என்ன? விதி என்றால் என்ன? அதை நாம் மாற்ற முடியுமா?
நாம் விரும்பியபடி நாம் வாழ முடியாமல் தடுப்பது எது ?
சரியை,கிரியை,யோகம்,ஞானம் போன்ற ஆன்மீகப் பாதையில் எது சிறந்தது ? இதில் எனக்கான பாதை எது? வாழ்க்கையை நிறைவும், மகிழ்ச்சியும்,ஞானமும் உள்ள விதம் சரியான
கோணத்தில் வாழ்வது எப்படி? மற்றும் காமம் முதல் கடவுள் வரை அனைத்தயும் பற்றி தெளிவு பெறுவீர்கள்.

-------------------------------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,
மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  10.12.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : யோகா டவர்ஸ்,தென்காசி 
107,தெற்கு மாசி வீதி,காசிவிஸ்வநாதர் கோயில் பின்புறம், 
தென்காசி 

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்

------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக்  கட்டணம் பற்றிய விபரங்களை கீழ்க்கண்ட மொபைல் எண்ணில்  தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 
suryatamil1.blogspot.com