Monday 6 January 2014

ஆன்மீக முன்னேற்றத்திற்கு அகஸ்தியர் கூறும் மந்திரங்கள் :-


அகஸ்தியர் தனது "பரிபூரணம் 1000" என்ற  நூலில் பின்வரும் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும் எனக் கூறுகிறார்.

பிரம்மச்சரியம் :-திருமணத்திற்கு முந்தைய பருவம் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.

மந்திரம்: "அம் கிலி  சிம்"  என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.



கிரகஸ்தம் : -  திருமணம் செய்து மனைவி ,குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்கள்.

மந்திரம்: "ஓம் றீங் அங் உங்"  என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும். 

சந்நியாசிகள்:-

"ஓம் ஐம் க்லீம் சௌம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.


வானப்ரஸ்தம் :-

50 முதல் 75 வயதுக்குள் உள்ளவர்கள்.வாழ்ந்து முடித்த பெரியவர்கள்.

மந்திரம்: "ஓம் அம் சிவ வசி " என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.

அவரவருக்கு எந்த வாழ்வு நிலை பொருந்துகிறதோ அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


சித்தர் விதிகளின் படி முறைப்படி தீட்சை பெற்று நியமங்களுடன் ஜெபித்து வர நல்ல பலன்கள் உண்டாகும்.மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072