Thursday 16 May 2019

நரசிம்ம ஜெயந்தி - 17.05.2019 இன்று

17.05.2019 இ ன்று  நரசிம்ம ஜெயந்தி.


பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து,குளித்து முடித்து  நரசிம்மரை வழிபடத் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

நரசிம்மர் பற்றிய வழிபாட்டு குறிப்புகள்
                                                                                                                                                                    1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

5. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

6. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

7.நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

8. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

9. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

10. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

11. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

12. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072                                                                                                           
டெலிக்ராம் / வாட்ஸ்அப் : 9788493072

Thursday 9 May 2019

ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி - 12.05.2019 - ஞாயிறு - வைஷாக சுக்ல அஷ்டமி


வருகின்ற 12.05.2019 வைஷாக சுக்ல அஷ்டமி ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி


சக்தி உபாசனையில் தசமஹாவித்யா என்ற பத்து பெருந்தேவியர் வழிபாடு மிகுந்த சக்தி வாய்ந்தது.

தசமஹாவித்யாதேவிகளில் பகளாமுகி என்ற அன்னையின் ஜயந்தி அதாவது அவதார தினம் வரும் 12.5.2019 (வளர்பிறை அஷ்டமி) அன்று.


வளர்பிறை அஷ்டமி திதி 11.5.2019 சனிக்கிழமை இரவு 7.13 PM துவங்கி 12.5.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.49 PM க்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பகளாமுகி தேவியை பூஜிப்பது சிறப்பு.


பகளாமுகி மூலமந்திரம்:-

ஓம் ஹ்ர்லீம் பகலாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹ்ர்லீம் ஓம் ஸ்வாஹா 

(ஹ்ர்லீம் என்பதை ஹ்லீம் என்றும் ஜெபிப்பார்கள்)

இம்மந்திரத்தை அருளிய நாரத மகரிஷியை மந்திரம் சித்தியாக வேண்டியபின் மூலமந்திரம் ஜெபிக்கவும்.

மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடவும்.

வழக்கு,தர்க்கம்,வாதம் போன்ற சூழ்நிலைகளில் முறைப்படி இவள் மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொண்டு செல்ல.வெற்றி உண்டாகும்.   

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்+சனி சேர்க்கை,செவ்வாய்+ராகு சேர்க்கை, செவ்வாய் நீச்சம் போன்ற அமைப்பு இருந்து அதனால் பாதிப்புகளை அனுபவித்து வருபவர்கள் இந்த அம்பாளை வணங்கி வருவதன் மூலம் கெடுபலன்கள் குறைந்து நலம் பெறலாம்.  

மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்.



வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com

fb link: https://www.facebook.com/surya.joy.52