Saturday 23 May 2015

தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்




ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள்  மிகச் சிறந்த வரப்ரசாதி ஸ்ரீ நரசிம்ஹர். இவரை உபாசிப்பவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.நம் தரப்பில் நியாயம் இருந்தால் நம்மை எந்த விதமான தீமைகளில் இருந்தும் காத்து ரட்சிக்கவல்லவர் என்ற நம்பிக்கையோடு இவரை உபாசிக்கலாம்.சைவ உஅவு உண்பவர்கள் மட்டும் உபாசனை செய்யலாம்.மற்றவர்கள் சுத்தமாக இருக்கும் நாளில் மட்டும் ஜெபிக்கலாம்.


வேதத்திலும் ,தந்திர சாஸ்திரத்திலும் பல இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளில் இவரை உபாசனை செய்யும் முறைகள் உள்ளன.தந்திர சாஸ்திரம் 9 ரூபங்களில் நரசிம்ஹரை உபாசனை செய்யும் முறைகளையும் அதன் மாறுபட்ட பலன்களையும் விவரிக்கிறது.ஷண்மத ஸ்தாபகர் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த வீர நரசிம்ஹரை உபாசனை செய்தார்.இந்த உபாசனையின் பலனாக  அவர் அடைந்த பலன்கள் அநேகம்.நோய் நீங்கப்பெற்றார், காபாலிகர்கள் செய்த அபிசார மாந்திரீகப் பிரயோகங்களை வெற்றி கண்டார் இப்படிப் பலப்பல......


ஜாதகத்தில் செவ்வாய் ,ராகு,சூரியன் இவர்களில் யாரேனும் ஒருவராவது பலம் பெற்றவர்கள் இவரை முழுமுதற் தெய்வமாக எண்ணி உபாசனை செய்யத் தகுதியானவர்கள்.ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு எதிரிகளை நீக்கி ,வழக்குகளில் வெற்றி தந்து,நோய்களை நீக்கி,தடைகள் நீக்கி,பயம் போக்கி நிம்மதியான வாழ்வு தரும்.உபாசித்து உயர்வடைவீர்களாக.
ஜெப விதிமுறைகள்  :-

1) ஜெபத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கவேண்டும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.

2) பன்னீரில் நனைத்துக் காய்ந்த  சிகப்புத்துணியைத் திரியாக்கி நெய் விளக்கேற்றவும்.

3) சிகப்பு நிற ஆடை அணியவும்.

4) சிகப்புக் கம்பளி விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபிக்கவும்.

5) சிகப்பு மணி மாலையைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்.

6)  51000எண்ணிக்கை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


மூலமந்திரம் 

ஓம் க்ஷ்ரௌம் பட் 


பிரயோகம் 

மந்திரம் சித்தியான பின் பசு நெய்யால்  108 எண்ணிக்கை ஹோமம் செய்யவும்.

பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.

மந்திரத்தை தீக்ஷை பெற்று நெறிமுறை அறிந்து ஜெபிப்பது நல்ல பலனைத் தரும்

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்







மந்திரம் 
ஹ்ரீம் ஸ்ரீம் மாதங்க்யை க்ரியாசித்திம் வித்யா ப்ரதாயினி நமஹா ||

ஏதேனும் ஒரு நல்ல நாளில் தொடங்கி இம்மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர ஈடுபடும் கலைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுப்  புகழுடன் கூடிய நிலையை அடையலாம்.குறிப்பாகப் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கற்பவர்கள்,சங்கீதம், பரதம்,ஜோதிடம்,மருத்துவம் போன்ற கடினமான கலைகளைக் கற்பவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் மூலம் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.

வடக்கு முகமாக அமர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஜெபிக்க வேண்டும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Monday 11 May 2015

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்




கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.


பரிகாரம் 2:-

ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com