Thursday 31 July 2014

பாதுகா பைரவ மந்திர சாதனை




கலியுகத்தில் மக்கள் எல்லா ஒழுக்க மற்றும் சாத்திர நியதிகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு இறையருள் பெற்று நல்வால்வு வாழ பகவான் ஸ்ரீ பைரவ மந்திர சாதனையும் வழிபாடும் மிக எளிதானதாக இருக்கும் என்று  மந்திர சாஸ்திர நூல்கள்  கூறுகின்றன.

 பைரவர் சிவனது மற்றொரு வடிவமே என்றும் சிவனின் அடியவர்களைச்  சாதாரண மற்றும் மரணத்திற்கு ஒப்பான துன்பங்களில் இருந்து காத்தருள்வதே அவரது பிரதான இயல்பு எனச் சிவ புராணம் கூறுகிறது.

பாதுகா பைரவ சாதனையின் பலன்கள் :-

1.எல்லாவிதமான துன்பங்கள்,தடைகள்,மரணகண்டங்கள் இவற்றில் இருந்து தீர்வு

2.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி பெற

3.வருடத்திற்கு ஒருமுறை இந்த மந்திர ஜப சாதனை செய்து வந்தால் எதிர்காலத்தில் நமது கர்ம வினையால் நிகழவிருக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

4.வழக்குகளில் வெற்றி பெற ,எதிரிகளால் பாதிப்பு வராமல்  இருக்க

5.ஒருவரின் வாழ்வும் செல்வங்களும் பாதுகாக்கப் பெற


ஜப ( பூஜை  )முறை :-

ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று குளித்து முடித்து சுத்தமான ஆடை அணிந்து ஒரு மரப்பலகை  வைத்து அதில் கருப்பு எள் மூன்று கைப்பிடி எடுத்து குவித்து வைக்கவும்.அதன் மேல் பாதுகா பைரவ யந்திரத்தை வைக்கவும்.நெய்விளக்கேற்றி விளக்கையும் யந்திரத்தையும் குங்குமத்தால் அர்ச்சித்து இந்த சாதனையில் சித்தி அருள வேண்டவும்.

த்யான ஸ்லோகம்:-

பக்த்யாம் நமாமி பாதுகாம் தருணம் த்ரிநேத்ரம்|
காம பிரதான வர கபால திரிசூல தண்டான் |
பக்தார்த்தி நாசகரணே ததாதம் கரேஷு |
தம் கோஸ்துபா பரான் பூஷித திவ்ய தேஹம் ||


இந்த த்யான ஸ்லோகத்தை ஜெபித்து பின்னர் வலது கையில் சிறிது அட்சதை எடுத்து எந்த பிரச்சனை நீங்க  வேண்டுமோ அதை உரக்கச் சொல்லி அட்சதையை வலது கையில் வைத்தபடி தலையைச் சுற்றவும்.பின்னர் அதை எல்லாத் திசைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் தூவி விடவும்.இதன் பின்னர் ருத்ராக்ஷ மாலையை ஏந்தி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

மூல மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் |
பாதுகாய ஆபதுத்தாரனாய |
குரு குரு  பாதுகாய |
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா ||   


இந்த மந்திரத்தைத் தினம் 700 தடவை வீதம் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஜெபிக்கவும்.7 நாட்கள் கழித்து அந்த யந்திரத்தையும் ருத்ராக்ஷ மாலையையும் ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடவும்.விரைவில் நல்ல மாற்றங்களைக்  காணத் தொடங்குவீர்கள்.





வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday 21 July 2014

நிறை செல்வம் தரும் ஸ்ரீ குபேரன் வழிபாடு




ஸ்ரீ குபேரதேவன் ஐப்பசி மதம் பூராட நட்சத்திரம் தனுசு ராசி மீன லக்னத்தில் விச்ரவஸ் எனும் முனிவர் ,ஸ்வேதா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.

குபேரன் யக்ஷகணங்களின் தலைவர்.

சிவனின் தோழர் எனவே இவர் "சிவ ஸஹா " என்று அழைக்கப்படுகிறார்.குபேரன்  சிவபெருமானை வேண்டித் தவம் இருந்து வடதிசைக்கு அதிபதியாக விளங்குகிறார்.

இவர் சிவவழிபாட்டில் மிகுந்த பிரியம் உடையவராக இருந்தாலும் ஸ்ரீவித்யையில் ஷோடசிக்கு அடுத்த சிறந்த மந்திரமாகிய ஸ்ரீபஞ்சதசி மந்திரத்தை பிரியமுடன் ஜெபிப்பவர் என சில்பசாஸ்த்ரம் கூறுகிறது .

உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நன்னாளில் குபேரனின் படத்தைத் தெற்கு நோக்கி வைத்து, குபேர யந்திரத்தைச் செம்பு,வெள்ளி,தங்கம் எந்த தகட்டிலாவது வரைந்து பால், பன்னீர், மல்லிகைமலர் நிரப்பிய செம்பில் உள்ள நீர்,வலம்புரி சங்கில் உள்ள நீர்,விபூதி கலந்த நீர் இவற்றால் அபிஷேகம் செய்து ப்ராண பிரதிஷ்டை செய்து  வாழைஇலையில் பச்சரிசி பரப்பி அதில் யந்திரத்தை வைத்து வலம்புரி சங்கில் நீர் நிரப்பி வடக்கு நோக்கி அமர்ந்து கீழ்க்கண்ட குபேர மந்திரத்தை 108 முறை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.இடையில் ஏதேனும் ஒரு நாள் செய்ய முடியாமல் போனால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பம் செய்யவும்.
பெண்கள் தங்கள் மாதாந்திர இடைவெளி காலம் பூஜையைத் தடைசெய்யாதவாறு முன்னரே திட்டமிட்டு பூஜையைத் தொடங்கி 21 நாட்கள் செய்து முடிக்கவும்.

21 நாட்கள் முடிந்த பின்னர் அதை தொடர்ந்து வரும் வளர்பிறை சப்தமி அன்று ஹோம  செய்யவும்.உங்களுக்கு ஹோமம் செய்ய வசதி இல்லை அல்லது தெரியாவிட்டால் புரோகிதர்களை அணுகவும்.

ஹோமதிரவியங்கள் :- பசு நெய்,பசும் பால் ,அருகம்புல் கொண்டு 108 தடவை மந்திரம் ஜெபித்து ஹோமம்  செய்ய மந்திர சித்தியாகி செல்வம் பெருகும் வாய்ப்புகள் ஏற்படத் தொடங்கி வளவாழ்வு அமையும்.

பின்னர் தினமும் 27 தடவை மட்டும் மந்திரம் ஜெபித்து வரவும்.

ஸ்ரீ குபேர ஆகர்ஷண மந்திரம் 

குபேர த்வம் தனாதீஷ க்ருஹே தே கமலா ஸ்தித |
த்வாம் தேவி ப்ரேஷ ஆஷுத்வம் மத்க்ருஹே தே நமோ நமஹா ||


 ஸ்ரீ குபேர யந்திரம் :-



ஸ்ரீ குபேர யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடைபெற ,நல்ல குணமுடைய கணவன் அமையப் பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் :-


1. ஓம் |
    காத்யாயனி மஹாமாயே |
    மகாயோகின்யதீச்வரி |
    நந்தகோபசுதம் தேவீ  | 
    பதிம் மே குருதே நமஹ ||


ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


2. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி,  இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

3.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  


ஓம் |
ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

4.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


5.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 3     தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072


Sunday 13 July 2014

காரிய சித்திக்கான ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்





1.ஆரோக்யமான வலிமையான உடலைப் பெற

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | வஜ்ர தேஹாய |வஜ்ர நகாய |வஜ்ர முஹாய| வஜ்ர ரோம்னே |வஜ்ர நேத்ராய|வஜ்ர தந்தாய |வஜ்ர கராய| வஜ்ர பக்தாய|ராம தூதாய ஸ்வாஹா||

2.எதிரிகள் நோய்கள் தீர

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ சத்ரு சம்ஹரணாய| சர்வ ரோகஹராய |சர்வ வசீகரணாய| ராம தூதாய ஸ்வாஹா||

3.மந்திர மாந்திரீகம் ,எதிரிகள்,த்ருஷ்டி,வியாதி ,பயம் நீங்க ,காரியன் சித்திக்க


ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராடக நாசகாய | சர்வ ஜ்வரச் சேதகாய|சர்வ வ்யாதி நிக்ருந்தகாய |சர்வ பய ப்ரசமனாய |சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய|சர்வ கார்ய சித்திப்ரதாய | ராம தூதாய ஸ்வாஹா||

4. துர்தேவதைகளின் உபத்ரவம் நீங்க 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ| பூத பிரேத பிசாச |டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய | ராம தூதாய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று 1008 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் தெற்குத் திசை தொடங்கி கடிகாரச் சுற்றில்,தென்மேற்கு,மேற்கு , ,வடமேற்கு ,வடக்கு,வடகிழக்கு,கிழக்கு ,தென்கிழக்கு என 8 திசைகளிலும் தெளித்துப் பின்னர் வீட்டின் தலை வாசலிலும் தெளித்து அதன் பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மீதும் தெளித்துக் கொள்ள துஷ்ட சக்திகளின் உபத்ரவம் நீங்கும். 


5.மந்திரம் 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ க்ரஹான பூத பவிஷ்ய வர்த்தமானான் சமீப ஸ்தான் |சர்வ கால துஷ்ட புத்தி உச்சாடய  உச்சாடய| பர பலானி க்ஷோபய க்ஷோபய|மம சர்வ கார்யானி சாதய சாதய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து  வர கெட்ட புத்தி நீங்கும்.தீய சக்திகளால் தீங்கு நேராது.ஒரு நபரை பார்த்தவுடன் சரியாக கணிக்க முடியும்.
சகல காரியமும் சித்தியாகும்.


செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்,பழங்கள் வைத்துத் தேவையான மந்திரத்தை 108 வீதம் வேண்டிய காரியம் நிறைவேறும் வரை ஜெபித்து வரவும். 


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com 

Tuesday 8 July 2014

நோய் தீர்க்கும் ஸ்ரீ இந்திராக்ஷி மந்திரம்

ஓம்|
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் |
ஸ்ரீ  இந்திராக்ஷி தேவ்யை |
சீக்ரம் மம சர்வ வியாதி நிவாரய நிவாரய ஹூம் பட் ||

ஒரு செம்பில் அல்லது வலம்புரிச் சங்கில் நீர் வைத்து இந்த மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்தவாறு 108 உரு ஜெபித்து  அந்த நீரை அருந்தி வர நோய் விரைவில் குணமாகும்.

உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ செய்வதாக இருந்தாலும் தங்கள் பட்சிக்கு அரசு பக்ஷி நடக்கும் நேரத்தில் நோய் நீங்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு செய்யவும்.

வலம்புரிச் சங்கில் இந்த மந்திரத்தை ஜெபம் செய்த தீர்த்தத்தைக்   குழந்தைகளுக்கு அருந்த கொடுத்து முகத்தில் சிறிது தெளித்தால் அடிக்கடி வரும் காய்ச்சல் ,நீங்காத ஜுரம்,அடிக்கடி பயந்து அழுதல் இவை நீங்கும்.



வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்




ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||

இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து  ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.

மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.

என் நண்பர்கள் பலருக்கு இதைப் பரிந்துரைத்து அனைவரும் வியக்கும் அளவிற்கு பலன் அடைந்துள்ளனர்.நீங்களும் செய்து எல்லா நிலையிலும் உயர்ந்த வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 627358
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com