Tuesday 27 June 2017

வறுமை நீக்கும் மந்திரங்கள்

அன்றாடச் செலவுக்கே கஷ்டப்படுபவர்கள் தினமும் குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி அமர்ந்து கீழே உள்ள இரண்டு மந்திரங்களில் உங்களுக்கு எது எளிமையாக உள்ளதோ அம்மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரத் தரித்திரம் நீங்கித் தேவையான அளவு பணப் புழக்கம் உண்டாகும்.

நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து ஜெபிக்கவும்.

இம்மந்திர ஜெபத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று துவங்கவும்.


மந்திரம் 1.

ஓம் நமோ சபரிதேவ்யை | மம தரித்ரம் சிந்தய சிந்தய |
சீக்ரம் தனகாமம் குரு குரு ஸ்வாஹா  ||


மந்திரம் 2

.ஓம் க்ரீம் காளிகே தரித்திரதா விநாசின்யை ஹூம் பட் 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP 9788493072
ms.spiritual1@gmail.com


Tuesday 6 June 2017

மரண பயம் நீங்க,தீராத நோய்கள் தீர எம தர்மராஜா மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய |
பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||


மரண பயம் கொண்டவர்களின் பய உணர்வு நீங்கவும்,தொடர்ந்த  மற்றும் தீராத வியாதிகளின் பாதிப்பால் அவஸ்தைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் 108 முறை அல்லது அதற்கும் அதிகமாக ஜெபித்து வர மரண பயம் விலகும்,நோய்கள்  தீரும் அல்லது அவஸ்தை குறையும்.
இது மிக பிரசித்தமான மந்திரம்.

இதன் முன்னும்,பின்னும் சம்புடீகரணமாக மிருத்யுஞ்சய மந்திரத்தைச் சேர்த்து ஜெபித்து ஹோமம் செய்ய அகால மரணம்,வியாதிப் படுக்கை இவை ஏற்படாது.


குறிப்பு:-

இந்த மந்திர ஜபம் மற்றும் ஹோமம் நமக்கு நாமே செய்துகொள்ளும் பொழுது லக்கினத்தில் அல்லது 7 ஆம் இடத்தில் மாந்தி அல்லது ராகு இல்லாதபடி இருக்கும் நேரம் பார்த்துச் செய்யவும்.

பிறருக்காகச் செய்யும் பொழுது பூஜை செய்பவருக்கும்,பாதிக்கப் பட்டவருக்கும் படுபக்ஷி மற்றும் கிரக நிலைகள்  பார்த்து நல்ல நாள்,நேரம் பார்த்து செய்யவும்.இல்லை என்றால் செய்பவருக்கே பாதிப்பு நேரலாம்.

மரண கண்டம் ,நோய்ப் படுக்கை தீர பாதிக்கப்பட்ட நபரின் உருவமும்,     எமதர்மராஜரின் உருவமும் செய்து அல்லது வரைந்து பூஜித்து சில பிரயோகங்களைச் செய்தால் பூரண பலன் கிட்டும் என மந்திர சாஸ்திரம் கூறுகின்றது.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com