Tuesday 22 September 2015

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா மந்திரம்









வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து  கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


மந்திரம்  

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ...........................வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா

முக்கிய குறிப்பு : .மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.
உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா  என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்







1.வறுமை நீங்க

ஓம் ஸ்ரீம் ஹரயே  நமஹ


2.பக்தி,ஞானம்,முக்தி பெற 

 ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ

3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற

ஓம் க்லீம் ஹரயே நமஹ

4.எதிரிகளை வெல்ல 

ஓம் ஹூம் ஹரயே நமஹ



மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத்  தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday 13 September 2015

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்



வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.

சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

தரித்திரம் நீக்கி நிறைந்த செல்வம் தருவதில் தனிச் சிறப்பானது புவனேஸ்வரி வழிபாடு.இது விரைவான பலன்களைத் தரவல்லது.


இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப்  வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து வழிபடுங்கள்.


முறைப்படி ஒரு குருவிடம் தீக்ஷை பெற்று ஜெபித்து பூஜை விதிகளை அறிந்து ஜெபித்து வருவதன் மூலம் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும். 




1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா 

2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா 

3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா 



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Friday 11 September 2015

வீட்டில் திருட்டு நேராமல் காக்க ,திருடர் பயம் நீங்க ஆன்மீகத் தீர்வு




                                      சமீப காலமாக திருட்டு அதிகரித்து நகை,பணம் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதோடு  அதன் உரிமையாளர்களைக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.அனேக அன்பர்களின் வேண்டுகோளின்படி
இதற்கு எளிமையும்,வலிமையான  இரண்டு தீர்வுகளை  இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.இவற்றில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைச் செய்து பயன்பெறுங்கள்.


பரிகாரம் 1




மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை, சுத்தமான வெள்ளைப் பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். இது எளிமையான மற்றும் மிகச்சக்தி வாய்ந்த முறை.


பிரிண்ட் எடுக்க முடியாதவர்கள் குளித்து முடித்து மேற்கு நோக்கி அமர்ந்து ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் மேற்கண்ட படத்தில் உள்ள படி எழுதி
அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.


பரிகாரம் 2





மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை சுத்தமான வெள்ளை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அல்லது எழுதி அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பித்து லேமினேஷன் அல்லது  பிரேம் செய்து  வீட்டின் தலைவாசலில் மாட்டவும். தலைவாசலுக்குக் கிழக்கு ஓரத்தில் படம் இருக்கும் படி இருந்தால் மிக நல்லது.இதுவும் திருடர்கள் வராமல் காக்கும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com







Wednesday 2 September 2015

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்






மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் || 


 எளிமையான,நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள்,தேன்,பச்சரிசி,ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com



தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்




எல்லா காரியங்களிலும் வெற்றி அருளும் இம்மந்திரத்தைத் தாந்த்ரீக குருமார்கள் ரகசியமாக குருபரம்பையாக உபதேசித்து வருகின்றனர்.எனது வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் அன்பர்களின் நலன் கருதி வெளியிடுகிறேன்.

நமக்கு தொழில்,வியாபாரம்,வேலை,குழந்தைகள் படிப்பு,பள்ளியில் சேர்க்கை,பெரிய மனிதர்களின் உதவி வேண்டுதல் இப்படிப் பல தேவைகள் வாழ்வில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.அவற்றில் சரி பாதி அல்லது அதற்கு மேலான காரியங்களில் தோல்வியையும் துன்பத்தையும் சந்தித்து வருபவர்கள் ஏராளம்.ஒவ்வொரு காரிய வெற்றிக்கும் தனிப்பட்ட சிறப்பான பூஜை மற்றும் மந்திரங்களை இன்றைக்குள்ள பிஸியான காலகட்டத்தில் செய்ய இயலாது.அதற்கு ஒரு எளிதான மந்திர ரீதியான தீர்வாக இம்மந்திரம் விளங்கும்.

ஜெப விதிகள் :-

இம்மந்திரத்தைக் கிரகணத்தன்று ஜெபிக்கவேண்டும்.
வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து வடக்கு முகமாக ஜெபிக்கவும்.
முதலில் குருவை மனதில் நினைத்து ஓம் கும் குருப்யோ நமஹ என 108 தடவை ஜெபிக்கவேண்டும்.அதன் பின்னரே கார்ய சித்தி மந்திரம் 1008 தடவை ஜெபிக்கவேண்டும்.இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.

இது உங்கள் காரியங்கள் யாவிலும் வெற்றி தரும்.எந்த ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடுவதாக இருந்தாலும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வேண்டிச் செல்ல அதில் வெற்றி கிட்டும்.தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. 

தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம் 


ஓம் சர்வோதய சம்பூர்ண லாப ப்ராப்த்யர்த்தே நமஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com