Monday 14 April 2014

நன்றாக உறக்கம் வர:-





இரவில் சரியாகத் தூங்கினால் மட்டுமே பகலில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் திறம்படச் செய்யவோ,சுறுசுறுப்புடன் இயங்கவோ முடியும் .

மன வேதனை,ஏதேனும் ஒன்றைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்தல், கவலைப்படுதல்,மருந்துகள்  தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்றித்  தவிப்பார்கள்.

தூங்கும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை ஜெபித்துப் பால் அல்லது தண்ணீர் அருந்தி பின் தூங்க நன்கு உறக்கம் வரும்.

 சுத்தே சுத்தே மகாயோகினி மகாநித்ரே ஸ்வாஹா||


மேலும் உறங்கும் முன் இரு காலின் பெருவிரல்களை மென்மையாக பிடித்து விட்டு பின் தூங்க நல்ல தூக்கம் வரும்.

வாழ்க வையகம் ||       வாழ்க வளமுடன் ||

M.சூர்யா 
தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072

Monday 7 April 2014

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.


உடல் 

பசி,தூக்கம்,காமம் இவற்றைச் சரியாகக் கையாளும் முறைகள்.
ஆரோக்கியமாய் வாழும் வழிகள் ,நமக்கும் பிறருக்கும் நோய் நீக்கும் வழிமுறைகள்.

வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் குறைவாகச் சாப்பிடுதல்,குறைவாகத் தூங்குதல்,குறைவாகப் பேசுதல் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.அதற்கு என்ன செய்யவேண்டும்.

சிறு வயது முதலே காமம் தவறு என்று கற்பிக்கப்படுகிறது ஆனால் தினம் காமம் சார்ந்த அதீத ஆசைகள் எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன.சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்புப் பயிற்சிகள். 

உடல் பருமன் குறைய ,அறிவார்ந்த, நீளாயுள் உள்ள விரும்பிய குழந்தையைப் பெற்றுக்கொள்ள,கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள் மந்திரங்கள் , கணவன் மனைவிக்குள் உள்ள மனம் மற்றும் செக்சுவல் பிரச்சனை தீர உதவும் நுட்பங்கள்.      



பிராணன் 

மற்ற எந்த வழியில் செலவாகும் ஜீவ சக்தியை விட நமது சுவாசத்தின் மூலமாகவே அதிகமான உயிர்சக்தி வீணாகிறது.அதை எப்படி உடல்,மன,ஆன்ம சக்தியை பெருக்க,ஞாபக சக்தியை அதிகரிக்க,நோய் நீங்கிய நல்வாழ்வு வாழப் பயன்படுத்தும் முறைகள்.     


மனம் 

ஆன்மாவில் கர்ம வினையின் பதிவுகள் இருந்தாலும் மனம் தான் அந்த கர்ம வினைகளை எண்ணமாக,சொல்லாக,செயலாக செயல்பட வைத்து அனுபவிக்க வைக்கிறது.
கர்ம வினைகளைக் கழிக்க, அவற்றில் இருந்து விடுபட உதவும் பயிற்சிகள்.
மனதின் சக்தியைப் பல பயனுள்ள,ஆக்கபூர்வ வழிகளில்  வழிகளில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் முறைகள்.




பொருளாதாரம் 

நம் தேவைகள் நிறைவேறத் தேவையான பணம் (பொருளாதாரம்)  தடையின்றிக் கிடைத்திட,வரும் பணம் அனைத்தும் செலவாகி தீர்ந்துவிடும் வழிகளைச் சரிசெய்யும் தந்திரங்கள்,கடன் தீரக் ,கொடுத்த பணம் வசூலாக,தொழில் ,பணிசெய்யும் இடங்களில் உள்ள தீய அதிர்வுகளை நீக்க ,தொழிலில் ,வேலையில் உயரப் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள்,   




ஆன்மிகம்

வாழ்வில் மற்றும் ஆன்மீகத்தில் உயர நம் ஜாதகப்படி  வழிபட வேண்டிய தெய்வங்கள்,அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சித்தி செய்து பயனடையும் முறைகள்,எந்த பிரச்சனையையும் தெய்வஉபாசனை,பஞ்சபக்ஷி சாஸ்திரம்,சர சாஸ்திரம் (சூரியகலை,சந்திரகலை ) இவற்றைப் பயன்படுத்தி  எவ்வாறு தீர்ப்பது என்ற நுட்பங்கள்,குழந்தைகள,மனைவி,கணவன் என குடும்பத்தில் நிம்மதியாக வளமாக வாழ வழிமுறைகள், தெய்வங்களின் சக்தி வாழ்வில் கர்மாக்களை தீர்க்க எந்த அளவு உதவும்,அதை விடப் பெரிய கர்மாக்களை கடக்க உதவும் தவ முறைகள் , சக்திமிக்க தியான முறைகள்.தீய பழக்கங்கள்,தவறான தொடர்புகள் ,குடிப்பழக்கம் இவற்றில் இருந்து விடுபட.ரெய்கி மற்றும் சித்தர்கள் வழியில் மருந்தின்றி குணமாக்கும் முறை,இந்து ,கிறிஸ்தவ,இஸ்லாமிய,பௌத்த மத தியான முறைகள் மந்திர ஜெப முறைகள்.


காமம் முதல்  கடவுள் வரை எது பற்றியும் தெளிவு பெறவும் .பயிற்சிகளுக்கும் தொடர்பு கொள்க


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா
திருநெல்வேலி 
9442193072  /9788493072
ms.spiritual1@gmail.com

சுகப் பிரசவத்திற்கு மந்திரம்






விளக்கேற்றி அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து வர சுகப்பிரசவம் ஆகும்.ஜெபித்து முடித்தபின் விளக்கின் மேல் வலது கையை மூன்று முறை சுற்றி அதே கைகொண்டு வயிற்றையும் மூன்று முறை சுற்றித் தடவவும்.

மந்திரம்:-

1.ஹே | சங்கர ஸ்மரஹர பிரமதாதீ நாத|
மன்னாத சாம்ப சசிசூடஹர த்ரிசூலினி ||
சம்போ சுகப்ரசவக்ருத் பாவமே தயாசோ|
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானா மிஷ்டதாயக|
சுகந்தி குந்தளா நாவஹ  சுகப்ரசவ ம்ருச்சது||

2.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷனி
தஸ்ய ஸ்மரண மாத்ரேன விசல்யா கர்ப்பிணி பவேத்|


3.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரசா நாம யக்ஷணி 
தஸ்ய நூபுர சப்தேன விசல்யா பவது கர்ப்பிணீ ஸ்வாஹா  



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

Tuesday 1 April 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-




இன்றைய நாட்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி கூட்டுக்குடும்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இருந்தாலும், தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளிலும்  பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் குறைவே.

இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என 3 தடவை ஜெபித்து , ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என 3 தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக்  குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்து அணிந்து வர தம்பதிகளிடையே அன்பும்,இணக்கமும் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTANDING தான் காரணம்.இந்த மந்திரங்கள் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING உட்பட நீக்கி அன்யோன்யம் நல்கும்..

1.அர்த்தநாரீஸ்வர மந்திரம் 

ஓம் |
ஹும் ஜும் சஹ |
அர்த்தநாரீஸ்வர ரூபே|
ஹ்ரீம் ஸ்வாஹா ||

இந்த மந்திரத்தை ஆண் ,பெண் யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.


பெண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||

ஆண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பத்னிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com