Thursday 29 May 2014

துன்பங்கள் தீரக் கனவில் தீர்வு தரும் ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்:-


வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அநேகம் பிரச்சனைகள் வரும் போகும்.ஆனால் ,இக்கட்டான சில சூழ்நிலைகளில் ,நமக்கு என்ன செய்து அதை தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பி ஜோதிடரையோ ,குறி சொல்பவரையோ (அவர்களில் பெரும்பாலானவர்கள்MONEY MINDED)  நாடிச் சென்று பெரும் பணத்தை வீணாக செலவு செய்தும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என சொல்வோர் ஏராளம்.

இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திரத்தை தினம் உறங்கும் முன் குறைந்தது 108 எண்ணிக்கை 90 நாட்கள் ஜெபித்து வரவும்.அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.முதல் நாளும் 90ஆவது நாளும்  மட்டும் வெற்றிலை, பாக்கு,அவல்,பழங்கள் ,பால்,பன்னீர்,பாயசம் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் முடிந்ததை அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரவும்.


தவறான மனிதர்கள்,மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூக்ஷும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும்.இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.

ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர் ,பேனா வைத்துக்கொள்ளவும்.இரவில் கனவில் ஏதேனும் தேர்வினை அம்பாள் கூறினால் அதை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இதனால் எந்தத்  தீங்கும் ஏற்படாது பயமின்றிச் செய்து பயன்  பெறுங்கள்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா  -தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்



நரசிம்ம மந்திரம்.

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.





துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியமும்  நல்வாழவும் பெறுவார்கள்.

 
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா -  தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

தீர்க்கமான கண் பார்வை பெற,கண் நோய்கள் தீர


கீழே உள்ள சூர்ய மந்திரத்தை தினமும் அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண் பார்வை கிடைக்கும்.இதை செய்யும் பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து ஜெபிக்க மிக நன்று.

ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்||

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் || 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Tuesday 27 May 2014

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்





மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் அகண்ட சௌபாக்ய தன சம்ருத்திம் தேஹி தேஹி நம:||

இந்த மந்திரத்தை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணிமுதல் 7:00 மணி வரை துளசி மாலை கொண்டு 600 உரு ஜெபித்துப்  பின்னர் 90 நாட்களுக்குத் தினமும் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரத் தொடர்தோல்விகள் ,தொழில் நஷ்டம், காரியத்தடைகள், வறுமை,கடன் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திட நல்வாய்ப்புகளையும் ,அதிர்ஷ்டங்களையும் அருளும்.


வாழ்க வையகம் ||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Saturday 17 May 2014

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மி மந்திரம்






செல்வ விருத்திக்குக் கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று தொடங்கித் தொடர்ந்து 90 நாட்கள்  தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் நெய் விளக்கேற்றி 108 தடவை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறைவான செல்வம் கிடைக்கும்.

கேரளா மற்றும் கல்கத்தாவில் உள்ள பிராமணர்களால் இம்முறை பின்பற்றப்படுகிறது.

மேலும் விளக்கேற்றும் நேரத்தில் ஊதுபத்தி ஏற்றி அதை வாசல் வரை கொண்டு வந்து,என் குலதெய்வத்துடன் ,கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் என் இல்லத்தில் எழுந்தருளுங்கள் என வேண்டியபடி பின்னோக்கி நடந்து வந்து பின்னர் '' கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் இத்தீபத்தில் எழுந்தருளவேண்டும்'' என வேண்டியபடியே விளக்கு ஏற்ற வேண்டும்.இப்படி ஏற்றி வர காரியத்தடை, பணம் இருப்பின்றி விரயமாதல் இவை நீங்கி ஐஸ்வர்யமான நல்வாழ்வு அமையும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

மந்திரம்:-
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்தாலும் ,ஏலக்காய் வெல்லம் போட்டுக்  காய்ச்சிய பால் நைவேத்யம் செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி யந்திரம் வாங்கி அதைப் பால்,பன்னீர்,துளசி இலை கலந்த நீர் ,  இவற்றால் கழுவிப் பின்னர் அந்த யந்திரத்தை விளக்கின் முன்புறம் வைத்துப் பூஜை முடிந்தபின் விளக்கின் கருக்கை யந்திரத்தின் மையத்தில் வைத்து வர  யந்திரத்திற்குச் சக்தி உண்டாகும்.90 நாட்கள் கழிந்தபின் யந்திரத்தை பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கக் குறையாத செல்வம் கிடைக்கும். யந்திரத்தைப் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும் போது ஏதேனும் மஞ்சள் பட்டுத் துணியில் சிறிது பன்னீர்  தெளித்து அதில் வைக்கவும்.



                          வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Friday 9 May 2014

நோய் நீக்கும் மந்திரங்கள்

1.ஆரோக்ய ப்ரத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம் :-

வடக்கு நோக்கி அமர்ந்து முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு   கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துப் பின்னர் வலது கையின் நடு மூன்று விரல்களை  நீரைத்தொட்டபடி வைத்து  ''நான்  ஜெபித்த மந்திரத்தின் சக்தி இந்தத் தீர்த்தத்தில் இறங்கட்டும் '' என்று சொல்லிப் பின்னர்  தன்வந்திரி பகவானை வியாதிகள் குணமாக ,அதன் தாக்கம் குறைய வேண்டி அந்த நீரை அருந்தி வரவும்.கொஞ்சம் கொஞ்சமாக வியாதியும் அதன்  தாக்கமும் குறையும். முடிந்தால் அந்த நீரில் கொஞ்சம்  துளசி இலைகளைப் போட்டு ஜெபிக்க நல்ல பலன் தரும்.

ஓம் ஹ்ரீம் தன்வந்திரியே ஆரோக்ய சித்திம் ஹ்ரீம் நமஹ||


2.ரோக நிவாரண ஸ்ரீ காளி மந்திரம் :-

இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்து ''க்ரீம்'' என்று 7 தடவை ஜெபித்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி அந்த நீரை அருந்தி வர மேற்கண்ட பலன் உண்டாகும்.


வாழ்க வையகம்||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072/ 9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Thursday 8 May 2014

சத்ரு ஜெய யந்த்ரம்



எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும்   வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள  மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.

இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.

இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.

பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.


பூஜிக்கப்பட்ட  யந்திரம், ரக்ஷை, குங்கும பிரசாதம் தேவைக்கு தொடர்பு கொள்க


வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday 6 May 2014

குரு வந்தனம் :-




இது ஒரு உபநிஷத சுலோகம்.முற்காலத்தில் குருகுலத்தில் எந்த ஒரு போதனை தொடங்கும் போதும் சீடர்கள் இந்த ஸ்லோகத்தைச்  ஜெபித்த பின்னரே தொடங்கப்படும்.

வேதம் ,மகான்கள் எழுதிய நூல்கள்,உபநிஷத் போன்ற தெய்வீக நூல்களைப் படிக்கத் துவங்கும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபித்து அந்த நூலை எழுதிய மகானை, ரிஷியை மனதார வணங்கி அவரின் திருவடிகளை சிரசின் மேல் தியானித்துப் பின்னர் படிக்கத் துவங்கினால் அந்த நூலை இயற்றிய ரிஷி,ஞானி என்ன பொருளில் அதை எழுதினாரோ அந்த மெய்ப்பொருள் நமக்கு விளங்கும்.
தியானம் செய்யத் துவங்கும் முன்னரும் அவரவர் குருவை வணங்கி இதை ஜெபித்துப் பின் தியானம் செய்ய தியானம் நன்கு சித்திக்கும்.

சுலோகம்:-

ஓம் சஹனா வவது||
சஹனௌ புனக்து ||
சஹ வீர்யம் கரவாவஹை ||
தேஜஸ்வி நாவதீத மஸ்து  ||
மா வித் விஷாவஹை ||

பொருள்:-நம்மை இறைவன் பாதுகாப்பானாக||
நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும்,உழைக்கவும் இறைவன் அருள்வானாக |
நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக  ||
நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக ||

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட முத்திரையைப்  போட்டபடி  இந்த மந்திரத்தை ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday 5 May 2014

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரம்






ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி  மந்திரம் வாராஹி மந்திரங்களில் சிரேஷ்டமான ஒரு மந்திரம்.
இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால் ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம்  கனவில் வந்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்.

ஜெபமுறை :
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சந்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா ||ஓம் பீஜம் |ஹ்ரீம்  சக்தி|ட்டஹ ட்டஹ   கீலகம் ||

மூல மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் நமோ  வாராஹி || அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||

இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .
தினம் 1100 உரு வீதம் தொடர்ந்து 11 நாட்கள் படுக்கையில் அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்.ஜெபித்த இடத்தில் மாதுளம்பழம்,செவ்வாழைப்பழம்,வெண்ணை எடுக்காத  தயிர் சாதம் நிவேதனம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் || வாழ்க வையகம் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
 ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com