Friday 29 June 2018

திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அய்யாவின் உபன்யாசங்கள் கேட்க உதவும் அப்ளிகேஷன்





https://play.google.com/store/apps/details?id=icm.kinchitkaram.androidapp


இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் வேளுக்குடி கிருஷ்ணன் அய்யாவின் உபன்யாசங்கள் அனைத்தையும் கேட்டு மகிழ்வதோடு அவரது உபன்யாசங்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களும் தெரிந்து கொள்ளலாம்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     

ms.spiritual1@gmail.com

Thursday 21 June 2018

வேலை செய்யும் இடத்தில் / அலுவலகத்தில் எல்லோருடனும் இணக்கம் உண்டாக்கும் தாந்த்ரீகக் குறியீடு

இந்த யந்திரத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது விளக்கின் முன் வைத்து,வேலை செய்யும் இடத்தில யாராலும் பிரச்னை ஏற்படாமல் எல்லோரோடும் இணக்கம் உண்டாகட்டும் என்று வேண்டிய பின் லேமினேஷன் செய்து  அலுவலகத்தில் உங்கள் இருப்பிடத்தில் இந்தப்
படத்தைப் பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.


அலுவகத்தில் இல்லாமல் மார்க்கெட்டிங் போன்ற வேலையில் உள்ளவர்கள்  சட்டைப்பை அல்லது மணிபர்சில் வைத்துக் கொள்ளவும்.








நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.
சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

Wednesday 20 June 2018

சேமிப்பு அதிகரிக்க தாந்த்ரீகப் பரிகாரம்





சிலருக்கு என்னதான் சம்பாதித்தாலும் கையில் பணம் அறவே சேமிப்பாக நிற்பதில்லை.இந்தக் கவலை தீரக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச்  செய்யுங்கள்.


வன்னி மரத்தின் வேரில் கொஞ்சம் எடுத்து  ஒரு இரும்பு டப்பாவிற்குள் 
போட்டு மூடி வைத்து அதை உங்கள் பணப்பெட்டி அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ள பணம்சேமிப்பு அதிகரிக்கும்.




நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

Saturday 16 June 2018

அதிசய பலன் தரும் தாந்த்ரீகப் பரிகாரங்கள் - 1

1.உங்களையோ / குழந்தைகளையோ நாய்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்து தொந்தரவு செய்தால் அல்லது பார்த்ததும் குரைத்துக் கொண்டே இருந்தால் கருப்பு கயிற்றில் 7 முடிச்சுகள்  போட்டு முழங்காலுக்குப்  பக்கத்திலோ அல்லது கணுக்காலிலோ கட்டிக் கொள்ளத் தொந்தரவு இருக்காது.


அதன் பிறகும் தொல்லை இருந்தால், அந்த நாயைப் பார்த்ததும் அடிக்கவோ திட்டவோ,பயந்து ஓடவோ செய்யாமல் கைவிரல்களை முறுக்கி கொண்டு,பற்களைக் கடித்துக் கொள்ள நாய் உங்களை ஒன்றும் செய்யாது.



2.அதிகம் பொய் பேசும் குழந்தைகள் திருந்த, தினமும் அதிகாலையில் சூரியனைப் பார்த்தபடி தர்ப்பணம் கொடுப்பது போல் நீர் விட்டு வரச் செய்ய நல்ல குணம் பெறுவார்கள்.


3. பயணங்களில் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருபவர்கள் அல்லது எப்பொழுதும் குறிப்பிட்ட வேலையாய் பயணம் சென்று வெற்றி பெறாமல் வெறும் கையுடன் திரும்புபவர்கள் பயணம் கிளம்பும் முன் பைரவருக்கு தேங்காய் வாங்கி அர்ப்பணித்து வேண்டிக்கொண்டு செல்ல சுபமாகும்.


4.கடன் தீர்ந்து செல்வவளம் பெற மந்திரம்


"கோவல்லபாய ஸ்வாஹா"

என்ற மந்திரத்தைத் தினமும் உங்களால் முடிந்தவரை ஜெபித்து வரவும்.
ஜபம் 1,50,000 எண்ணிக்கையைத் தொடும் நாள் முதல் பலனை அனுபவிக்கத்
துவங்குவீர்கள்.



5.முகத்தில் கரும்புள்ளிகள் (Black Spots) அதிகம் இருந்தால் வெள்ளி டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்து அதை 5 மணிநேரத்திற்குப் பின் குடித்து வரவும்.
காலை,மாலை இரண்டு வேளையும் செய்து வர விரைவில் கரும்புள்ளிகள்
நீங்குவதோடு முகவசீகரமும் உண்டாகும்.


6.குழந்தைகள் பசியெடுக்காமல்  அல்லது ஓழுங்காகச் சாப்பிடாமல் இருந்தால் ஒரு எலுமிச்சம்பழம் எடுத்துக் கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதிற்குள் நினைத்துக் கொண்டே குழந்தையின் வயிற்றை 11 தடவை
சுற்றவும்.பின்னர்,அந்தப் பழத்தை நசுக்கி எறிந்து விடவும்.இப்படி 11 நாட்கள் செய்து வர, குழந்தைக்கு நன்றாகச் சாப்பிடத் துவங்கி ஆரோக்கியமாய் வளரும்.


7.எதிரிகளால் தொடர் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் உணவில் உப்பு சேர்க்காமல் இருக்கவும்.
இது எதிரிகளால் வரும் தொல்லைகளைக் குறைத்து மன நிம்மதி தரும்.


8.அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தாலும், புறம் பேசி வந்தாலும் தினமும் வாசல் கதவு அருகில் மாலை நேரத்தில் 3 மெழுகுவர்த்தி ஏற்றி வர சில நாட்களில் பிரச்சனைகள் குறைவதோடு அவர்களை நண்பர்களாகவும் மாற்றிவிடும்.


9.பணம் வாங்கியவர் தராமல் இழுத்தடித்தால், உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நீலநிறப் பூவைச் சமர்ப்பித்து அந்த நபரின் பெயரை சொல்லி வேண்டி வரவும். தொடர்ந்து 43 நாட்கள் செய்து வரவும்.அதன் பின் அவரிடம் பணம் கேட்கவும்.



10.தொழிலில் பங்குதாரருடன் பிரச்சனை தீர கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வரவும்.

1). செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

2). தானாக விழுந்த ஒரு அரசமர இலையில்  2 சொட்டு தேன் விட்டு அந்த இலையை ஓடும் நீரில்   விட்டு விடவும்.


11. உங்களிடமுள்ள விலைமதிப்பு மிக்க பொருட்கள் தொடர்ந்து பழுதடைந்தோ அல்லது தொலைந்தோ வந்தால்,சனிக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் எள்ளால் செய்யப்பட இனிப்பு வகைகளை ஒரு ஸ்கை ப்ளூ நிறத் துணியில் முடிந்து தர்மம்  செய்து வரவும்.இழப்புகள் தடுக்கப்படும்.


12.வீட்டில் மீன்,நாய்,பசு,பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து இறந்து வந்தால் குடும்பத்தில் எதேனும் பெரிய நோய் பாதிப்பு அல்லது உயிர் பாதிப்பு ஏற்படலாம்.அப்படியான  சூழ்நிலை இருந்தால்,வருடம் தோறும் வீட்டின் மூத்த உறுப்பினரின் ஜாதகப்படி நல்ல நாளாகப் பார்த்து பித்ரு தோஷ ஹோமம் செய்யவும்.வருடம் 1 முறை என தொடர்ந்து 5 வருடத்திற்குச்  செய்து வரவும்.பேரிழப்பு தடுக்கப்படும்.


13.சிறு வயது முதலே வறுமையையும்,கஷ்டங்களையும் அதிகமாக அனுபவித்து வருபவர்கள்,யாரிடமும் எதையும் நன்கொடையாகவோ, தானமாகவோ,பரிசாகவோ பெறாமல் இருப்பது நல்லது.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru