Wednesday 31 May 2023

நானே எனக்கொரு போதிமரம் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 4.6.2023 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

நானே எனக்கொரு போதிமரம் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 4.6.2023 ஞாயிறு மதியம் 2 மணி  முதல் 4:30 மணி வரை



நானும் வாழ்க்கையில் உடல் நலம்,மன நலம்,செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.ஆனால்,அதற்கான வழி என்ன,எங்கே, எப்படிச்  சரியாகத் துவங்குவது போன்ற வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல விரும்பும் பலரின் கேள்விகளுக்குப் பதிலாக இந்த வகுப்பு இருக்கும்.


மனதளவில் புதிதாய்ப் பிறந்தது போல் வாழ்க்கையை இனி வரும் நாட்களில்  வாழ விரும்புவர்களுக்கு இந்த வகுப்பு  ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும்.


1.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?


வாழக்கையில் நாம் விரும்பியபடி உறவுகள் நண்பர்கள் மாறாவிட்டாலும் நாம் நினைத்தபடி நாமே ஏன் மாற முடிவதில்லை ? பல நேரங்களில் எனக்கே என்னைப் பிடிப்பதில்லை போன்ற எண்ணம் தோன்றுகிறது.எனக்கே என்னையும் என் செயல்பாடுகளையும் பிடிக்கும்படி என்னை மாற்றிக் கொண்டாலே போதும்.நான் நிம்மதியாக இருப்பேன்,அடுத்தடுத்து முன்னேற உழைப்பேன்.ஆனால்,வழி தெரியவில்லை 


எனக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள் ?


2.ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.இந்த மனநிலையைச் சரி செய்வது எப்படி ?


3.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?


4.உடலுக்கு உணவைப் போல் மனதிற்கு மகிழ்ச்சி அவசியமான தேவை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால்,மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போல் அவ்வளவு எளிதில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே ஏன் ?

எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம்,வெறுமை நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?


5.சுயமுன்னேற்ற வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொண்ட விஷயங்கள் மற்றும் சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் படிக்கும் பொழுதும் இருக்கும் மனநிலை / மனஉறுதி மிகச் சீக்கிரமே தளர்ந்து போகிறதே ஏன் ?.

சிறு சிறு தோல்விகள்,பிறரின் விமர்சனங்களுக்கு சீக்கிரமே மனம் உடைந்து போகிறேன்.தன்நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மனதில் மாறி மாறி வரும் நிலையில் நம்மை மனோ ரீதியில் வலிமையாக வைத்துக் கொள்வது எப்படி ? 


6.நம்மைப் பின்னோக்கி இழுக்கும் பலவீனங்களைச் சரிசெய்தால் மட்டுமே முன்னேறிச் செல்வது சாத்தியம்.

நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று சரியாகத் தெரிந்து கொளவ் வேண்டும்.வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.பலவீனம் நம்மை இனியும் தாழ்த்தாமல் இருக்க என செய்ய வேண்டும் ? 


7.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவே கடினமாக உழைக்கிறேன் என்ற பெயரில் உடலையும்,மனதையும் கெடுத்துக் கொள்பவர் பலர்.அவர்கள் எப்படி உழைப்பின் பலனை ரசித்து மகிழ முடியும். 

உழைக்கவும் வேண்டும்.அதே நேரத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்.அப்பொழுது  மட்டுமே ஊக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும் சக்தி நம்மிடம் நிலைக்கும். அதற்கான வழிமுறைகள்.


8.எத்தனையோ ஞானிகள்,மஹான்களின் தத்துவங்கள்,பயிற்சிகளைக் கற்றும் ஏன் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.அவர்களின் போதனைகள் நம் வாழ்வில் பிரதிபலிக்காதது ஏன் ? அவர்களின் மனோபாவம் நமக்கும் வாய்க்குமா ?


9.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்வதும் உறவுகளை சரியாக நிர்வகிக்கத் தெரிந்தால் நம் நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும்.அதற்கான சில ரகசியங்கள்.


10.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம்,பிறரை  அடக்கி ஆள நினைத்தல்,தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலைக் கேடுகளைச் சரி செய்யும் முறைகள் .

 

11.மனமும் அதன் தன்மையும்,மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


12.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக்  கெடுக்கிறதே  ஏன் ? இதைச் சரி செய்வது எப்படி?


13.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா ? 

 

14.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 


15.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில் அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

16.மன அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?


வகுப்பின் முடிவில் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்வீர்கள்.அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மற்றபடி அந்த நெருப்பை அணையாமல் காத்துக் கொண்டால் முன்னேற்றம் உங்கள் கையில். 


உங்கள் வாழ்க்கையை நல்லவிதமாய் மாற்றும் இந்த வகுப்பிற்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் .உங்களில் நீங்கள் முதலீடு செய்வதற்குச் சமம்.


பயிற்சிக் கட்டணம் :RS.1000

தேதி : 4.6.2023 - ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை 


பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072







Thursday 25 May 2023

தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் ஏற்பட ஸ்ரீ பார்வதீச மந்திரம்

தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் ஏற்பட ஸ்ரீ பார்வதீச மந்திரம் 



கண்திருஷ்டி,பொறாமை மற்றும் மாந்திரீகம் காரணமாகத் தம்பதிகளுக்குள்  ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டிருந்தாலும் இம்மந்திரத்தைத் தினமும் கிழக்குத் திசை பார்த்து அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் உண்டாகும்.


ஸ்ரீ பார்வதீச மந்திரம் 

ஓம் ஹ்ரீம் யோகின்யை யோகவித்யாயை | 

சர்வ சூக்ஷ்மாயை சாந்திரூபாயை |

ஹர ப்ரியங்கர்யை பகமாலின்யை | 

ஸ்ரீ ருத்ரப்ரியாயை ஹ்ரீம் ஹ்ரீம் நமஹ ||  



அன்புடன் 

M.சூர்யா 

திருநெல்வேலி 

9788493072

Wednesday 17 May 2023

ஞானமும் விழிப்புணர்வும் ( புத்தரின் வழியில் ) பயிற்சி வகுப்பு ( ஆன்லைன் GOOGLE MEET ) 21.5.2023 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

ஞானமும் விழிப்புணர்வும் ( புத்தரின் வழியில் ) பயிற்சி வகுப்பு  21.5.2023






ஆன்மீக உலகில் பல மதங்களும் நம்பிக்கையை கீழ்ப்படிதலை அடிப்டையாகக் கொண்டவை.புத்த மதம் மட்டுமே கடவுள் பற்றிய கருத்தே இல்லாத முதல் சமயம்.மேலும்,வெறும் நம்பிக்கைக்குப் பதிலாகச் செயல்முறைகளையும் (TECHNIQUES AND DIRECT EXPERIENCE) நேரடியான அனுபவத்தையும் அடிப்படையாகக்  கொண்டது புத்தமதம்.


புத்தரின் போதனைகளின் படி பயிற்சி செய்பவர்கள் நேரடியான அனுபவததைப் பெற்று ஞான சூரியனாகத் திகழ்வார்கள்.

  

1.ஞானம் மற்றும் விழிப்புணர்வு என்றால் என்ன ? ஞானத்தின் வெளிப்பாடு என்ன ? யோக மார்க்கம்,பக்தி மார்க்கத்தில் இருந்து ஞான மார்க்கம் எப்படி வேறுபடுகிறது.மற்ற மார்க்கங்களை விட ஞானமார்க்கமே உயர்ந்தது எனச்  சொல்லப்படுகிறதே ஏன் அப்படி என்ன சிறப்பு ஞானமார்க்கத்தில் 


ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஞான மார்க்கம் எப்படி உதவுகிறது.  


2.புத்தரின் அருளிய தியான / ஞானப் பயிற்சிகள்.


3.புத்தரின் பார்வையில் புண்ணியம்,பாவம்,நன்மை தீமை என்பது பற்றிய விளக்கம் மற்ற சமயங்களில் கூறப்பட்ட கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து .அதைப் புரிந்து கொண்டு பின்பற்றினால் நம் அன்றாடச் செயல்பாடுகளில் உன்னதமான மாற்றம் உண்டாகும்.


4.இந்தியா,சீனா,திபெத்தில் பின்பற்றப்படும் புத்த முறைக்கும்,ஜப்பானில் பின்பற்றப்படும் ஜென்  புத்த முறைக்கும் உள்ள வேறுபாடும் அதனால் உண்டாகும் பயன்களும்.


5.உடல் அல்லது மனம் அல்லது இரண்டிலும் சக்தி குறைவாக இருப்பதுவே நாம் செய்ய வேண்டிய பல காரியங்களைச் செய்யாமல் இருப்பதன் காரணம். புத்தரின் வழிமுறைகளைப் பின்பற்றி அதனால் கிடைக்கும் சக்திப் பெருக்கத்தை உடல் மற்றும் மனதின் நலத்திற்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தலாம். 


6.புத்தரின் போதனைகளைப் புரிந்து கொள்வதால் இதுவரை நாம் உணராத மனஅமைதி கிடைக்கும்.இது தெளிவாக முடிவெடுக்கவும்,புதிதாக எந்த விதமான குழப்பம்,பிரச்சனைகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் உதவியாக இருக்கும்.


7.சிறு குழந்தையை போல் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் செயல்படலாம். ஒன்றும் செய்யத் தேவையில்லாத சமயங்களில் மனம் ஒடுங்கி அமைதியாக இருக்க விரும்பினால் அப்படியும் இருக்கலாம்.புத்தமதம் முக்கிய போதிக்கும் விஷயங்களில் சமநிலையான வாழ்க்கை முறையும் ஒன்று.(BALANCED LIFE). 


8.உயர்நிலை குருமார்களின் ஆசிகளையும்,சூட்சும வழிகாட்டுதலையும் பெறும் முறைகள். 


9.புத்த மதத்தில் தெய்வங்களின் வழிபாடு உண்டா என்பது பற்றிய விளக்கங்கள்.


10.வாழ்க்கையில் நாம் பெரும்பாலான செயல்களை மயக்க நிலையிலேயே ஒரு இயந்திரம் போலச் செய்ததையே திரும்பத் திரும்பச்  செய்து வருகிறோம் ?

நாம் விரும்புவதற்கும் நாம் செயல்படுவதற்கும் இடையே பல குழப்பங்கள். நமக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள் ?


விதியும் மதியும்  - வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ? 


11.ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.காரணம் நம் மீது நமக்கு ஆளுமை அல்லது கவனம் இல்லை .இந்த மனநிலையைச் சரி செய்வது எப்படி ?


12.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?


13.மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம் நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?


14.மனமும் அதன் தன்மையும்,நிம்மதியான வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


15.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக்  கெடுக்கிறதே  ஏன் ? இதைச் சரி செய்வது எப்படி?


16.அதீத கோபம்,பதட்டம்,காமம் போன்ற உணர்ச்சிளைக் கையாள்வது எப்படி? 

 

17.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா ? 

 

18.தவறான பழக்க வழக்கங்கள் நம்மிடம்  இருந்து தானாக விலகிவிடும் ரகசியம் .


பயிற்சிக் கட்டணம் :RS.1500

21.5.2023 - ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

 

பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072