Monday 28 January 2019

கல்வி,அறிவு,வாக்குவன்மை,நினைவாற்றல் தரும் ஸ்ரீ ஹம்சவாகீஸ்வரி மந்த்ரம்



மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஹம்சவாகீஸ்வர்யை நம


தினமும் அதிகாலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரக் கல்வியில் முன்னேற்றம்,வாக்குவன்மை,சிறப்பான பேச்சாற்றல்,ஞாபக சக்தி உண்டாகும்.   

குறைந்தது 48 தடவையாவது ஜெபித்து வரலாம்.


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Saturday 26 January 2019

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,ஆன்மிக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 3.2.2019 ஞாயிறு அன்று

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,ஆன்மிக ரகசியங்களும் பயிற்சி  வகுப்பு திருநெல்வேலியில் 3.2.2019 ஞாயிறு அன்று


வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றிரண்டு வகைகளில் அடக்கி விடலாம்.அவற்றை எளிய மந்திர ஜெபம் மற்றும் சில ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றிக் குறுகியகாலத்தில் சரி செய்து கொள்ள முடியும்.



பல சமயங்களின் குருமார்களிடம் கற்று,அனுபவித்துப் பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து வெற்றி,உயர்வு,பொருளாதாரம்,குடும்பஒற்றுமை,கல்வி,மகிழ்ச்சியோடு,நலமும்,வளமும்,நிம்மதியும் சேர்ந்த வாழ்விற்கான பயிற்சி வகுப்பு.





சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.



ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

----------------------------------------------------

1.சகல காரிய சித்திக்கு சித்தர்கள் சொன்ன ஆன்மீக ரகசியங்கள்.


2.கர்மவினை அகற்றி விரைவில் வளமான வாழ்வு தரும் உயர்நிலை
தெய்வங்களின் மந்திரங்கள்,உபாசனை ரகசியங்கள்.


3.நமது துன்பங்கள் நீங்கப் பலவிதமான மந்திரங்கள்,வழிபாடுகள் செய்தும் பலன் இல்லையே என்ன காரணம் ? அவை முறையாகப் பலன் தர என்ன செய்ய வேண்டும்?


4.முழு நேர யோகிகளும்,ஆன்மீகவாதிகளும் செய்யக் கூடிய ஆன்மீகப்
பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான விதிமுறைகளும் தனியானவை.


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் செல்வம்,செல்வாக்கு, மகிழ்ச்சி,தோரணை, சமூக அங்கீகாரம் இவற்றோடு கூடிய வாழ்க்கைக்குச் செய்யக்கூடிய ஆன்மீகப் பயிற்சிகளும்,மந்திரங்களும் அவற்றிற்கான
விதிமுறைகளும் தனியானவை.

இதற்கு மாறாக,குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில வழிபாடுகளும்,பயிற்சிகளும் உண்டு.அவற்றைச் செய்தால் வறுமை, வேலை,தொழில் இவற்றில் தொல்லைகள்,தொடர் விபத்துக்கள்,
உறவுகள் இழப்பு,தனிமை போன்றவை ஏற்படும்.


ஆன்மீகப் பயிற்சிகள்,மந்திரங்கள் இவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுத்து செய்தால் மட்டுமே சரியான விளைவுகள் உண்டாகும்.


அறியாமையால் இத்தகைய தவறான பாதையைத் தேர்வு செய்திருந்தால் அதன் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடலாம் ?



5.பிரச்சனைகளின் பாதிப்பு கடுமையாக இருந்தாலும் அவை நீங்கச் செய்து வரும் ஆன்மீகப் பயிற்சிகளையோ,மந்திர ஜபத்தையோ சில நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்ய முடிவதில்லையே. இதற்கு என்ன மாற்று வழி ?



6.சைவ உணவு உண்பவர்கள் ,அசைவ உணவு உண்பவர்கள் ,பணிச்சூழல் காரணமாக குறைவான நேரம் மட்டுமே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு ஒதுக்க முடியும் என்பவர்கள்,அதிகாலையில் எழுந்து ஜெபம்,யோகம் பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கான மாற்று வழி .



7.அதீத சக்தி உள்ள சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இறை ரகசியங்கள்.


8.விரைவில் தெய்வத் நிறைவேற,மந்திர சித்தி,யோக சித்தி பெறப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்.


9.மந்திர வழிபட்டோடு,மஹான்கள் கூறிய சில யோகப்பயிற்சிகளையும்
செய்து வருவதன் மூலம் மட்டுமே வறுமை,நோய்,கவலைகள் அற்ற நிறைவான வாழ்வை நிரந்தரமாக வாழமுடியும்,அதற்கான வழிமுறைகள்.



10.குறுகிய காலத்தில் பணப் புழக்கம் அதிகரித்து செல்வ நிலையில் உயர்வு தரும் ஆன்மீக ரகசியங்கள்.



11.கணவன்,மனைவி,குழந்தைகள் என குடும்பம் ஒற்றுமையுடனும், நிம்மதியாகவும் இருக்க உதவும் ஆன்மீக ரகசியங்கள்.



12.மன இறுக்கம்,கவலைகள்,குழப்ப மனோநிலை,உடலில் மனதில் பலமின்மை,பயம் நீங்கி உடல் பலம்,மன பலம்,உயிர் ஆற்றல் இவற்றை அதிகரித்து வாழ்வில் உயர உதவும் ஆன்மீக ரகசியங்கள்.


13.வேலை கிடைக்க,வேலையை,பதவியைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள்.



14.வாழ்வின் உயர்வுக்கும்,ஆன்மீக உயர்வுக்கும் செய்ய வேண்டிய
காரியங்களை மிகச் சரியாகத் திட்டமிட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்
பின்பற்ற வேண்டியவை.


இவற்றைச் செய்து பலன் பெற ஒரு நாளில் மிகச் சில நிமிடங்களை ஒதுக்கினாலே போதும்.


விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=o_zqc4FaMe8&feature=youtu.be

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி


---------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 3.2.2019
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம்: ரூ.1000

பயிற்சி நடைபெறும் இடம்:-

M.D.T. SCHOOL 
NEAR TIRUNELVELI OLD BUS STAND /RAILWAY STATION
TIRUNELVELI JUNCTION


M.D.T.ஸ்கூல் (ம.தி.தா. மேல்நிலைப்பள்ளி )  
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் / ரயில்நிலையம் அருகில் 
திருநெல்வேலி சந்திப்பு  

---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.



வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Wednesday 16 January 2019

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 20.01.2019 ஞாயிறு அன்று - தை மாதம் பௌர்ணமி

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 20.01.2019 ஞாயிறு அன்று - தை மாதம்  பௌர்ணமி


வரும் ஞாயிறு அன்று 20.01.2019 ஒரு நாள் பயணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலைக்குப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இந்தப் பயணத்தில் சித்தர்கள் மற்றும் மஹான்கள் ஆன்மீக மற்றும் வாழ்வின் உயர்வுக்குச் சொல்லியுள்ள மந்திர ஜெபங்கள்,பயிற்சிகள் மற்றும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றியும் சத்சங்கம் செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


20.01.2019 அன்று காலை 7 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேருமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.



அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 முதல் 9:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



25 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பதால் உறுதியாக யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் தங்களது பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு அவசியம்.


யாத்திரைக் கட்டணம்: RS.700 


மதிய உணவும் குடிநீர் பாட்டிலும் வழங்கப்படும்.



வரும் வழி பற்றிய விபரம் :

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையதிற்கு 20.01.2019 ஞாயிறு அன்று காலை 6:30  மணிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்.அங்கிருந்து காலை 7:00 மணிக்கு வேனில் மலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தனியே கார் அல்லது வேறு வாகனத்தில் வருபவர்கள் கீழே உள்ள என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வரும்வழி பற்றி அறிந்து கொள்ளவும்.



அன்பர்கள் சத்சங்கத்தில் கற்றுத்தரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டும்,பேனாவும் மட்டும் கொண்டு வந்தால் போதும்.



அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.



வரும் வழி,வந்து சேர வேண்டிய நேரம் மற்றும் பிற விபரங்களைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.700 செலுத்தி விட்டுத் தெரிவிக்கவும்.


M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932 BRANCH CODE:00932


R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093 BRANCH CODE:00T093



நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA




கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:-


1.விரதம் எதுவும்பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை.பயணத்திற்கு அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.


2.தண்ணீர் பாட்டில் 1 அல்லது அதற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.ஒன்று குடிப்பதற்கு, இன்னொன்று மலையில் உள்ள புனித தீர்த்தத்தில் நீர் பிடித்து வைத்துக் கொள்ளவும்.


3. 45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிக்கவும்.


4.காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறும் படி முடிவு செய்திருப்பதால் முடிந்தவரை காலையில் சீக்கிரமே வர முயற்சிக்கவும்.அல்லது முன்தினம் வந்து ரூம் எடுத்து தங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.


-------------------------------------------------------------------------------------
அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.


அத்ரிமஹரிக்கும்,அனுசூயாதேவிக்கும் குழந்தையாக தத்தாத்ரேயர் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் அவதரித்தனர். இந்த புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.



இம்மலையையும் இதன் சிறப்பையும் பற்றி பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

கடனா அணைக்கட்டும்,வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.


மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.

மலைப் பயணம் மற்றும் சத்சங்கம் முடிந்ததும் நேரம் இருந்தால் பொட்டல்புதூர் மற்றும் சிவசைலம் ஆலயங்களுக்குச் செல்லலாம்.


தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது


8KM தொலைவில் பொட்டல்புதூர் என்ற ஊரில் முஹைதீன் ஆண்டவர் தர்கா உள்ளது.நம் சித்தர்களில் மூத்த மற்றும் முதன்மையானசித்தராக அகஸ்தியர் மதிக்கப்படுவது போல், இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பரம்பரையில் தர்காக்களில் அடக்கமாகி இருக்கும் அனைத்து ஞானவான்களுக்கும் தலைமைக் குருவாய் விளங்கும் முஹைதீன் ஆண்டவர்கள் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாகூர் ஆண்டவர் உட்பட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தவம் செய்து அறிய ஆன்மீக உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.முஹைதீன் ஆண்டவரை வழிபட்டால் தீய சக்திகள் மற்றும் மாந்த்ரீகத்தால் ஏற்பட்ட தீவினைகள் விரைவில் தீரும்.மேலும் அவர்களை வழிபட்டுத் தரிசித்து,உதவி பெறும் முறைகளும் பகிரப்படும்.


------------------------------------------------------------------------------

அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள் தவம் இயற்றியுள்ளார்கள்.


பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலைஅடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை(85 அடி உயரம்) அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.


கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.


இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.



அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு,கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.


இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!



அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம் 



தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம் 







வற்றாத  புண்ணிய தீர்த்தம்




அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம் 




அத்ரி மலைத் தோற்றம் .


குகை 






 மலைப் பாதை 





நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Monday 14 January 2019

தடை நீக்கி ஆன்மீக உயர்வு தரும் தை முதல் தேதி - உத்தராயண புண்ய காலம்



தடை நீக்கி ஆன்மீக உயர்வு தரும் தை முதல் தேதி - உத்தராயண புண்ய காலம்


தை மாதம் முதல் நாள் துவங்கி ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வர விரைவான  முன்னேற்றம் உண்டாகும் என்று சித்தர்கள் மற்றும் ரிஷிகளின்  நூல்கள் கூறுகின்றன.


இது பற்றிய விரிவான விளக்கம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


https://youtu.be/j-EzNd5GfDA



நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Wednesday 2 January 2019

ஹனுமான் ஜெயந்தி 05.01.2019 சனிக்கிழமை - நலம் தரும் ஹனுமான் மந்திரங்கள்

ஹனுமான் உபாசனை விரைவான பலன் தரக் கூடியது.

ஹனுமனை  உபாசனை செய்பவர்கள் உடலாலும்,மனதாலும் சுத்தமாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.இல்லை என்றால் சில பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

நேரடியாக ஹனுமனை உபாஸனை செய்வதற்குப் பதில் ஸ்ரீராமரை  வணங்கி ராம நாமம் ஜெபித்து வந்தால் ஹனுமன் அழைக்காமலே  நமக்கு அருள் செய்து காப்பார்.

ராமர் மற்றும் ஹனுமான் மந்திரங்களும்,ஜெப மற்றும் பிரயோக முறைகளும் தரப்பட்டுள்ளது.அவரவருக்குத் தேவையான மந்திரத்தை ஜெபித்து பலன் பெறவும்.


முதலில்  108 தடவை ஸ்ரீராம நாமம் ஜெபித்த பின் எந்த ஹனுமான் மந்திரத்தையும் ஜெபிக்கத் துவங்குவது விரைவான பலன்களைத் தரும்.


ஸ்ரீ ராம மந்திரங்கள் :-

பொதுவான ராமர் மந்திரங்கள் 
1.ஸ்ரீ ராமஜெயம்
2.ராம் ராம்


ராம ரக்ஷா மந்திரம் 

ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

ஸ்ரீ ராம தாரக மந்திரம் 

ராம் ராமாய நமஹ

ஸ்ரீ ராம மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நித்ய சீத்த புத்தாய ராமாய பரப்ரஹ்மணே நமஹ


பல விதமான பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும், விருப்பங்களை நிறைவேற்றவும் உதவும் ஹனுமன் மந்திரங்களும் பிரயோகங்களும் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு லிங்கையும்  கிளிக் செய்து படித்துப் பயன் பெறவும்.

அல்லது கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து எல்லா ஹனுமான் மந்திரங்களும் அடங்கிய ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


http://suryatamil1.blogspot.com/2015/01/blog-post_27.html


http://suryatamil1.blogspot.com/2014/08/blog-post_16.html


http://suryatamil1.blogspot.com/2014/09/blog-post_12.html


http://suryatamil1.blogspot.com/2014/11/blog-post.html


http://suryatamil1.blogspot.com/2014/12/blog-post_53.html


http://suryatamil1.blogspot.com/2015/01/blog-post_91.html



PDF புத்தகம் டவுன்லோட் லிங்க் :-


https://drive.google.com/open?id=1xFjHFAp3SYe4gmQ0nyV_LAjNqI1Ir4Dc


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA