Monday 28 May 2018

ஆரோக்கியம் தரும் யந்திரம்

                            யந்திரத்தில் வரைய வேண்டிய பீஜ மந்திரம்  



நோய்களை நீக்கி ஆரோக்யம் தரும் இந்த யந்திரத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைப் பின்பற்றிச் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

முறை 1:

ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை  9 தடவை எழுதவும்.எழுதிய பின் அந்த பேப்பரை ஒரு சுத்தமான  மரப்பலகையில் வைத்து அதற்கு ஊதுவத்தி காண்பித்து அதன்முன் ஒரு தீபம் ஏற்றி வைக்கவும்.ஊதுவத்தியும் தீபமும் அணைந்த பின் அந்த பேப்பரை எடுத்து ஒரு தாயத்தில் அடைத்து வலது கை புஜத்தில் அணிந்து கொள்ளவும்.
   

முறை 2: 

 ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை 11 தடவை எழுதவும்.மேலே கண்ட முறைப்படி பூஜித்து கழுத்தில் கட்டிக் கொள்ளளவும்.


குறிப்பு :-   இந்தத் தாயத்தை வடக்கு பார்த்த படி அமர்ந்து வரைந்து 1008 தடவை டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்த பின் யந்திரத்தைப் 
பூக்களால் அர்ச்சிக்கவும்.

வடக்கு பார்த்து  அமர்ந்து தினமும் குறைந்தது 108 தடவை  டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்து வர நிறைவான பலன் கிடைக்கும்.


இந்தத் தாயத்து அணிவதால் பல நோய்கள் குணமாகும் என்றாலும் கீழே  
குறிப்பிட்ட சில நோய்களை விரைவாக நீக்கும் :-

1.நினைவாற்றல் குறைவு
2.கை,கால் இணைப்புகளில் உள்ள வலி மரத்துப் போதல்,தசை வலி 
3.மன அழுத்தம்
4.பயங்கரமான கனவுகள் அதனால் தூக்கமின்மை
5. மூக்கில் ரத்தம் வடிதல்
6.தாய்ப்பால் சுரப்புக் குறைவு
7.குழந்தைகளின் தொடர் அழுகை


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru


Tuesday 22 May 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

மந்திரம் :

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ........(கணவன் அல்லது மனைவியின் பெயர் ) க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 


வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள், பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


முக்கிய குறிப்பு : 

மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.

உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 

 என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்திருநெல்வேலிMobile:9442193072Whatsapp / telegram: 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook :Surya Guru
https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Sunday 13 May 2018

நமக்கான தெய்வ மந்திரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து ஜெபிப்பது எப்படி ? - பாகம் 1




நமக்கான தெய்வ மந்திரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து ஜெபிப்பது எப்படி ? - பாகம் 1 


மந்திர சாஸ்திரம்,ஜோதிடசாஸ்திரம் கூறும் வழிமுறைப்படியும், சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்த்தும் நன்றாகக் கணித்து அதற்கேற்ற சரியான தெய்வங்களை வழிபட்டு வருவது நாம்  இப்பிறவியில் அனுபவித்துத்  தீர்க்க வேண்டிய கர்மவினைகளைச் சரியான முறையில் அனுபவித்தும்,எதிர்கொண்டும்,கடந்தும் செல்லப் பேருதவியாக இருக்கும்.



தீக்ஷை பெற்று மந்திர ஜெப விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு ஜெபித்து வந்தால் விரைவான,நிறைவான பலன் கிடைக்கும்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                       
ms.spiritual1@gmail.com

Saturday 12 May 2018

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மகிமை,மூலமந்திரம்,உபாசனை




சித்தர்களால் வாலைத்தாய்,வாலைக்குமரி என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாலாவின் வழிபாடு கல்வி,செல்வம்,வீரம்,நீங்காப் புகழ்,சித்தர் நிலை  இவற்றோடு தெய்வ நிலைக்கு உயர்த்த வல்லது.


பாலா மந்திரத்தில் வேதவழி முறை, சித்தர் வழிமுறை,தாந்த்ரீக வழிமுறை எனப் பல முறைகள் வழக்கத்தில் உள்ளன.

இந்த மந்திரத்திற்கு அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தேவியின் சாபம் உள்ளதால்,மந்திரத்தைக் குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று சாபநிவர்த்தி செய்து ஜெபித்தால் மட்டுமே உத்தம சித்தி கிடைக்கும்.

-------------------------------------------

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.

எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது
(இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.


சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.


ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.


மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.


பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.



சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை 
பெற்று ஜெபிப்பதே விரைவான,நிறைவான பலனைத் தரும்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP  / TELEGRAMNO : 9788493072
ms.spiritual1@gmail.com