Monday 24 February 2014

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பயிற்சிகள்




எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வர நல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன் ,நேர்முகத் தேர்வுக்குக்  காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம் கண்விழித்துப் படித்தால்  கண் எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் பயிற்சியை இடையிடையே செய்து படிக்க உறக்கம் வராது அதோடு நல்ல சுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்ய வேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்ய மனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவு உண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில் எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல் உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின்னர் உள்மூச்சு இழுக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும் உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின் உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது 10 தடவை செய்து வர மனம் அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தும் நினைவுக்கு வராத சமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5 தடவை செய்து பின் யோசிக்க விடை மனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-
நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலது பக்கம் ,இடது பக்கம் என மாறி மாறி ஏதேனும் ஒரு மூக்குத் துவாரம் வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போது கடினமான கணிதம்(MATHS) , அறிவியல் (SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்ற பாடங்களைப் படிக்க எளிதில் விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம் சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால் இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டு தரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோ படித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும் சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் உண்டாகும்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 2


எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மாலா மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ|

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

ஓம்|ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுரசுந்தரி தேவி நமஹ ||

அல்லது

ஓம்|ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்| பாலா திரிபுரே மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா ||

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

ஸ்ரீ வாக்வாதினி,ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி,ஸ்ரீ லகுஷ்யாமா, ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம் செய்து பின்னர் இரகசிய குங்கும அர்ச்சனை செய்தோ,ரக்ஷை செய்தோ ,அஞ்சனம் செய்தோ அணிந்து வர சிறப்பான பலன்கள் உண்டாகும்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 1:-




ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் சமயம் மாணவ,மாணவிகள் மிகுந்த மன நெருக்கடிக்குள் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையானதாக இருக்கும் என்று பகிர்கிறேன்.

எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.


நல்ல நினைவாற்றலுக்கு மந்திர சாஸ்திரம் கூறும் சில வழிமுறைகளை விளக்குகிறேன்.பின்பற்றி பலன் பெறுங்கள்.

1.ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்,காயத்ரி,மூல மந்திரம்:-
கீழ்க்காணும் சுலோகம்,மூலமந்திரம்,காயத்ரி அனைத்தையுமோ அல்லது இயன்றதையோ ஜெபித்து வர கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்:

ஓம் ருக்யஜுர் சாமரூபாய |
வேதாஹரண கர்மணே |
பிரணவோத்கீத வசசே |
மஹா அச்வ சிரசே நமஹா ||

ஓம் உத்கீத பிரணவோத்கீத |
சர்வ வாகீச்வரேச்வரஹ |
சர்வ வேத மயா சிந்த்ய |
சர்வம் போதய போதய ||

ஓம் விச்வோத் தீர்ணஸ்வரூபாய |
சின்மயானந்த ரூபிணே |
துப்யம் நமோ ஹயக்ரீவ |
வித்யா ராஜாய விஷ்ணவே ||

ஓம் ஆசக்ராய விசக்ராய |
ஸுசக்ராய தீசக்ரிணே |
ஜ்வாலா சக்ராய ச இத்யுக்த்வா |
மஹா சக்ராய தே நமஹா ||

இதைப் படிப்போர் நல்ல கல்வியும்,செல்வமும்,ஞானமும் பெறுவார்கள்  என ஸ்ரீ  விஷ்ணு  புராணம்  குறிப்பிடுகிறது.
   
ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி :-

ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே |
ஹயக்ரீவாய தீமஹி |
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத் ||

இந்த ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி ஜெபம் சகல கலைகளிலும் தேர்ச்சியைத் தரும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம் :-

1. ஓம் ஞானானந்த மயம் தேவம்|
    நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் |
   ஆதாரம் சர்வ வித்யானாம் |
    ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

2. ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரசௌம் | ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே | மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா ||

3. ஓம் ஐம் ஐம் | ஓம் ஹ்ராம் ஹ்ரௌம் ஹயக்ரீவாய ஸ்வாஹா ||


மேற்கண்ட மந்திரங்கள் ஜெபிக்க பெரியதாகவும் கடினமாகவும் இருப்பதாகத் தோன்றினால் ''ஓம் ஹ்ரசௌம் ஹயக்ரீவாய நமஹ '' என்று ஜெபித்து வரலாம் .

சிறப்பான முறையில் பலன் பெற விரும்புவோர் ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்து ரஹஸ்ய குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை அணிவதன் மூலமோ, ரக்ஷை அணிந்தோ அல்லது அஞ்சனம் செய்து திலகமாக அணிந்து வர அல்லது வகிட்டில் வைத்து வர  விரைவான் நிறைவான பலன் பெறலாம் .

ஏதேனும் ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று நவக்ரஹங்களில் புதனுக்கு அல்லது ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கோ பச்சைப் பட்டு சார்த்தி ஒரு பச்சை நிற துண்டு வாங்கி அதை ஸ்ரீ மகாவிஷ்ணு அல்லது ஸ்ரீ புதபகவான் பாதத்தில் வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வாங்கி பின்னர் அதில் சிறிது பன்னீர் தெளித்து புதன் எந்திரம் அதில் கைகொண்டு வரைந்து  அதில் ஈசான்ய திசை  (வடகிழக்கு) நோக்கி அமர்ந்து படித்து வர நல்ல நினைவாற்றலும்,கல்வியில் பிரியமும்,சிறந்த தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com