Thursday 22 March 2018

பித்ரு தோஷ பரிகாரங்கள்



பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைச் செய்து வர கெடுபலன்கள்
குறையும்.


1.அமாவாசை தோறும் 5 விதமான பழங்களை பசுவுக்குக் கொடுத்து வரலாம்.

2.சுத்தமான நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டே மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வரவும்.

3.பித்ரு தோஷம் தீர வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு காளி தேவியை தக்ஷிண காளி மந்திரம் ஜெபித்து தொடர்ந்து வழிபட்ட வரவும்.

4.அமாவாசை அன்று நாட்டுக் கருவேல மரத்தடியில் வாழை இலையில் வைத்து உணவைப் படைத்து வர பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள். கெடுபலன்கள் குறையும்.
   
5.உணவு உண்ணும் முன்,முதல் பிடி உணவைப் பித்ருக்களுக்கு என்று எடுத்து வைத்துப் பின்னர் அதைப் பறவைகளுக்கு வைத்து விடவும்.இதை வீட்டின் மூத்த ஆண்மகன் செய்து வர வேண்டும்.



நன்றி .வாழ்கவளமுடன்


M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072
WHATSAPP : 9788493072

Wednesday 7 March 2018

வளமான வாழ்வு தரும் மந்திரங்கள்,ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி & ஆன்மீக சத்சங்கம் திருப்பூரில் 11.03.2018 ஞாயிறு அன்று


இறையருள் துணையுடன் எல்லா வளமும்,நலமும் பெற்று வாழ உதவும் ஆன்மீகப்  பயிற்சி முறைகள்


உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி



உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



மந்திரம் விரைவில் சித்தியாகி நல்வாழ்வு வாழச் செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை வழிபடுவது



அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான ஒன்று அல்லது இரண்டு  தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.



வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.



உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும் முறைகள்.



வீட்டிலும் ,வெளியிலும் எல்லோராலும் நேசிக்கப்பட ,வீட்டில் உள்ளோர் ஒருவருக்கொருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாக இருக்க உதவும் முறைகள்.



மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை,தடைகள் ஏன் ஏற்படுகிறது?  



குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் வாழ்க்கை நிலைக்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?



அதீத கோபம்,காமம்,பயம்,கவலை,வறுமை நீங்கி  ஒழுக்கமாய் வாழ மஹான்கள் கூறிய  ரகசியங்கள்



தீய மனிதர்கள்மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்   வழிமுறைகள்




ஆன்மீக ஐயம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-----------------------------------------------------------------------------------

மதிய உணவு இடைவேளைக்குப் பின் 3 மணி முதல் 5 மணி வரை உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.


கடவுள் இருக்கிறாரா ?

இறைவனை உணர பக்தி,மந்திர ஜபம்,யோகம்,ஞானம் எனப் பல ஆன்மீக வழிமுறைகள் உள்ளதே இவற்றில் எது உயர்ந்தது ? சரியானதுசீக்கிரம் பலன் தருவது?

அசைவம் உண்பது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையா ?

தீயவர்கள் கூட வளமாக வாழும்பொழுது,ஆன்மீகத் தேடுதல் அதிகம் உள்ளவர்கள் பலர் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள் ஏன்?


பல்வேறு மதங்களில் பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவே?
அனைவரது வேண்டுதலுக்கும் பலன் தரும் கடவுள் ஒன்றாபலரா?


கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் இந்த உலகம் இவ்வளவு மோசமாக உள்ளது?


தெய்வங்கள் வேறு,கடவுள் வேறா?


தெய்வங்கள் உண்மையிலேயே கருணையானவர்களா ? 
தண்டிப்பவர்களா ? 


அதிகாலையில் தியானமோ,மந்திரமோ ஜெபிக்க எழ முடிவதில்லைஎன்ன செய்வது?


சத்சங்க நேரத்தில் இது போன்ற உங்கள் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.



இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் உபாஸனையை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.
------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  11.03.2018 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : சிவானந்தம் மரச் சிற்பச்சாலை, பெருமாள்நல்லூர் ரோடு,போயம்பாளையம்,திருப்பூர்     


பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாள்நல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி போயம்பாளையம் ஸ்டாப்பில் இறங்கவும்.

வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்கண்ட எண்ணில் தொடர்பு 
கொள்ளவும்.

திரு.சிவானந்தம்  - 9443281492


பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு
குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com