Thursday 21 January 2016

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்



தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான எந்திரங்கள் எண் யந்திரங்களே .குறிப்பிட்ட பலன்களைப் பெரும் விதமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பீஜ மந்திரங்களின் நியூமராலஜி கணக்கின் படி எண் யந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

கீழே உள்ள யந்திரங்களைச் செம்புத் தகட்டில் எழுதினால் பலன் அதிகம். முடியாதவர்கள் சுத்தமான வெள்ளைப் பேப்பரில் சிகப்பு மையால் அல்லது குங்குமத்தால் எழுதி வைத்துக்கொள்ளவும்.பின்னர் யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து விளக்கில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை எழுந்தருள வேண்டி பால்,பழங்கள்,கற்கண்டு,பாயசம் வைத்து யந்திரத்தித்தைச் செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் குறைந்தது 27 தடவையாவது கீழே உள்ள மந்திரம் ஜெபித்து அர்ச்சித்து வைத்துக் கொள்ளவும்.

ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்| லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச |மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||  

எண் 1ல் உள்ள யந்திரத்தைப் பர்சிலும் எண் 2 ல் உள்ள யந்திரத்தைப்  பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில்  இடத்தில் வைத்துக் கொள்ளவும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

No comments:

Post a Comment