Thursday 22 March 2018

பித்ரு தோஷ பரிகாரங்கள்



பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைச் செய்து வர கெடுபலன்கள்
குறையும்.


1.அமாவாசை தோறும் 5 விதமான பழங்களை பசுவுக்குக் கொடுத்து வரலாம்.

2.சுத்தமான நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டே மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வரவும்.

3.பித்ரு தோஷம் தீர வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு காளி தேவியை தக்ஷிண காளி மந்திரம் ஜெபித்து தொடர்ந்து வழிபட்ட வரவும்.

4.அமாவாசை அன்று நாட்டுக் கருவேல மரத்தடியில் வாழை இலையில் வைத்து உணவைப் படைத்து வர பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள். கெடுபலன்கள் குறையும்.
   
5.உணவு உண்ணும் முன்,முதல் பிடி உணவைப் பித்ருக்களுக்கு என்று எடுத்து வைத்துப் பின்னர் அதைப் பறவைகளுக்கு வைத்து விடவும்.இதை வீட்டின் மூத்த ஆண்மகன் செய்து வர வேண்டும்.



நன்றி .வாழ்கவளமுடன்


M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072
WHATSAPP : 9788493072

No comments:

Post a Comment