Tuesday 28 October 2014

கலைகளில் தேர்ச்சியும்,வாழ்வில் உயர்வும் தரும் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் :-







மந்திரசாஸ்திர நூல்களில் உயர்ந்த ஒன்றான மந்திர மகோததியில் இந்த மந்திரம் உள்ளது.ஸ்ரீ ராஜமாதங்கி தேவியின் 1000 திருநாமங்களில் ஒன்றே உச்சிஷ்ட சாண்டாளி. 

இம்மந்திரத்தை ஜபம் செய்து வர வாக்கு பலிதம்,கல்வி,கலைகளில் உயர்வு, சர்வ வசீகரம்,சகலகலா பாண்டித்தியம்,சங்கீதத்தில் மேன்மை,பதவி உயர்வு,நிர்வாகத்திறமை கிட்டும். 


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை,சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.

ஜோதிடர்கள்,மாணவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்கள் இம்மந்திர ஜபத்தினால் நிச்சயம் உயர்வு அடைவார்கள். 

வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்வு செய்து ஜெபத்தைத் தொடங்கவும்.தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்து வரவும்.கிழக்குத் திசை நோக்கி ஜெபிக்கவும்.யந்திரத்திற்கு 108 தடவை மூலமந்திர ஜபம் செய்து அட்சதை அல்லது வெண்ணிற பூக்களால் அர்ச்சிக்கவும்.15 நாட்களுக்கு மேல் மந்திரத்தின் சக்தி வெளிப்படத் தொடங்கும்.     


புதன்,வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை  108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள்,குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.


இம்மந்திரத்தை வெறுமனே ஜெபிப்பதை விட ஸ்ரீ ராஜமாதங்கி யந்திரம் வைத்துப் பூஜித்து ஜபம் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.

மந்திரம் :-

ஓம்|
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் |
நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
ஸ்ரீ மாதங்கீச்வரி |
ஸர்வஜன வசங்கரி ஸ்வாஹா ||



வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com





No comments:

Post a Comment