Monday 17 November 2014

ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம ஸ்லோக பாராயணமும் பலன்களும்:-



ஸ்ரீ சிவ சஹஸ்ரநாமம் சிவபெருமானின் 1008  திருநாமங்களைக் கொண்டது .அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.



1.வேத அத்யாயனம்,தியானம்,மந்திரஜபம் பலிக்க:- 

மந்த்ரவித் பரமோ மந்திர: ஸர்வபாவகரோ ஹர:
கமண்டலுதரோ தந்வீ  பாணஹஸ்த : கபாலவாந்||    
வேதகாரோ மந்த்ரகாரோ வித்வாந் சமர மர்த்தன:|
மஹாமோக நிவாசீ ச மஹாகோரோ வசீகர:||    
அதர்வசீர்ஷ :ஸாமாஸ்ய:ருக் சஹஸ்ராமிதேக்ஷன:|
யஜூர் பாத புஜோ குஹ்ய :பிரகாசோ ஜங்கமஸ் ததா :||
    
கிழக்கு முகமாக அமர்ந்து தினமும் 27 தடவை ஜெபித்து வர வேதபாராயணம்,மந்த்ரஜெபம்,தியானம் சித்திக்கும்.  


2.பேய்,பிசாசு துர்சக்திகளின்  தொல்லை நீங்க :-

நிஸாசர :பிரேதராஜோ பூதசாரீ மகேஸ்வர :|
பஹுபூதோ பஹுதர: ஸ்வர்ப்பானு ரமிதோ கதி:||

இதைத் தினமும் 27 தடவை  வடக்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம்  செய்து ஜெபித்து வர  அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

3.கிரகதோஷம் நீங்க:-
ஸஹஸ்ராக்ஷோ விசாலாக்ஷ : சோமோ நக்ஷத்ர ஸாதக:|
சந்த்ர சூர்ய :சனி:கேது:க்ரஹோ க்ரஹபதிர் வர :||

வடக்கு முகமாய் அமர்ந்து 27 தடவை ஜெபித்து வர கிரகதோஷங்கள் நீங்கும்.

 4.எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலனைப்பெற 

தேவாசுர குருர்தேவோ தேவாசுர நமஸ்க்ருத :|
தேவாசுர மஹாமாத்ரோ தேவாசுர கணாஸ்ரய:||
தேவாசுர கணாத்யக்ஷோ தேவாசுர கணாக்ரனீ:|
தேவாதிதேவோ தேவர்ஷி : தேவாசுர வரப்ரத :||
தேவாசுரேஸ்வரோ விஸ்வோ தேவாசுர மகேஸ்வர:|
சர்வதேவமயோசிந்த்யோ தேவதாத்மாத்ம சம்பவ :||

இதை சிவாலயத்தில் அல்லது சிவலிங்கத்தின் முன் 27 தடவை ஜெபித்து வர சர்வ தேவதைகளின் அனுக்ரஹம் உண்டாகும். 
    
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்||


M.
சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 /9788493072        
ms.spiritual1@gmail.com


No comments:

Post a Comment